கணவன், மனைவிக்கு இடையில் பொதுவாக தகராறு, மோசடி, வரதட்சணை கொடுமை போன்ற பல காரணங்களுக்காக பொலிஸ் நிலையத்தில் வழக்குகள் பதிவாகுகின்றன .
ஆனால் தற்போது வினோதமான விசாரணை ஒன்று இந்தியாவின் உத்தரபிரதேச மாநில பொலிஸ் நிலையத்தில் அரங்கேறியுள்ளது.
அதாவது மனைவி ரீல்ஸ் வீடியோ எடுப்பது, அதனை எடிட் செய்து பதிவிடுவது என சமூக வலைத்தளத்தில் எந்நேரமும் பிசியாக இருந்துள்ளார்.
இதனால் கணவன்- மனைவிக்கு இடையே தினந்தோறும் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இதையடுத்து பொலிஸ் நிலையத்திற்கு இவர்களின் தகராறு சென்றுள்ளது.
இதுகுறித்து பொலிஸார் விசாரணை நடத்தும் போது கணவர் தனது மனக்குமுறல்களை கொட்டியுள்ளார்.
அதாவது மனைவி சமூக வலைத்தளத்தில் ரீல்ஸ் வீடியோ பதிவிடுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளார். இதனால் வீட்டு வேலைகளில் கவனம் செலுத்துவதில்லை.
அவள் எப்போதும் வீடியோ எடுப்பது, எடிட் செய்வது என மும்மரமாக இருப்பதால் எங்களுக்கு உணவு கிடைப்பதில் தாமதமாகிறது.
எந்நேரமும் மொபைல் போனிலேயே இருக்கிறாள் என்று குற்றச்சாட்டுகளை கணவர் அடுக்கியுள்ளார்.
இவரது மனைவி கூறுகையில் வீடியோ எடுத்து எடிட் செய்து பதிவிடுவது மற்றும் வீட்டுப் பொறுப்புகள் இரண்டையும் நிர்வகிப்பது மிகவும் கடினமாக உள்ளது.
ரீல்கள் வெறும் வேடிக்கைக்காக மட்டும் இல்லை. அவை இப்போது என் அடையாளத்தின் ஒரு பகுதியாகும்.
வீட்டு வேலை காரணமாக எனது வீடியோக்களை பதிவிட தவறவிடும்போது, என்னை பின்தொடர்பவர்களை இழந்துவிடுகிறேன். மேலும் எனது தொடர்பு குறைகிறது.
இது ஒரு சிறு வணிகத்தை நடத்துவது போன்றது, யாரும் என்னுடைய அழுத்தத்தைப் புரிந்துகொள்வதில்லை என்று கூறினார்.
இதையடுத்து இருதரப்பு விளக்கத்தையும் கேட்ட பொலிஸார் இருவருக்கும் அறிவுரைக் கூறி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பம் தொடர்பான தகவல்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வைரலாகி வருகின்றது
இச்சம்பவம் குடும்ப உறவுகள் எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பது குறித்த விவாதத்தை ஏற்படுத்தி உள்ளமை குறிப்பிடத்தக்கது
மனைவி ரீல்ஸ் வீடியோ எடுப்பதால் வந்த வினை- பொலிஸ் நிலையத்தில் அரங்கேறிய புதிய வழக்கு கணவன், மனைவிக்கு இடையில் பொதுவாக தகராறு, மோசடி, வரதட்சணை கொடுமை போன்ற பல காரணங்களுக்காக பொலிஸ் நிலையத்தில் வழக்குகள் பதிவாகுகின்றன .ஆனால் தற்போது வினோதமான விசாரணை ஒன்று இந்தியாவின் உத்தரபிரதேச மாநில பொலிஸ் நிலையத்தில் அரங்கேறியுள்ளது.அதாவது மனைவி ரீல்ஸ் வீடியோ எடுப்பது, அதனை எடிட் செய்து பதிவிடுவது என சமூக வலைத்தளத்தில் எந்நேரமும் பிசியாக இருந்துள்ளார். இதனால் கணவன்- மனைவிக்கு இடையே தினந்தோறும் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.இதையடுத்து பொலிஸ் நிலையத்திற்கு இவர்களின் தகராறு சென்றுள்ளது. இதுகுறித்து பொலிஸார் விசாரணை நடத்தும் போது கணவர் தனது மனக்குமுறல்களை கொட்டியுள்ளார். அதாவது மனைவி சமூக வலைத்தளத்தில் ரீல்ஸ் வீடியோ பதிவிடுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளார். இதனால் வீட்டு வேலைகளில் கவனம் செலுத்துவதில்லை. அவள் எப்போதும் வீடியோ எடுப்பது, எடிட் செய்வது என மும்மரமாக இருப்பதால் எங்களுக்கு உணவு கிடைப்பதில் தாமதமாகிறது. எந்நேரமும் மொபைல் போனிலேயே இருக்கிறாள் என்று குற்றச்சாட்டுகளை கணவர் அடுக்கியுள்ளார்.இவரது மனைவி கூறுகையில் வீடியோ எடுத்து எடிட் செய்து பதிவிடுவது மற்றும் வீட்டுப் பொறுப்புகள் இரண்டையும் நிர்வகிப்பது மிகவும் கடினமாக உள்ளது.ரீல்கள் வெறும் வேடிக்கைக்காக மட்டும் இல்லை. அவை இப்போது என் அடையாளத்தின் ஒரு பகுதியாகும். வீட்டு வேலை காரணமாக எனது வீடியோக்களை பதிவிட தவறவிடும்போது, என்னை பின்தொடர்பவர்களை இழந்துவிடுகிறேன். மேலும் எனது தொடர்பு குறைகிறது.இது ஒரு சிறு வணிகத்தை நடத்துவது போன்றது, யாரும் என்னுடைய அழுத்தத்தைப் புரிந்துகொள்வதில்லை என்று கூறினார்.இதையடுத்து இருதரப்பு விளக்கத்தையும் கேட்ட பொலிஸார் இருவருக்கும் அறிவுரைக் கூறி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.இச்சம்பம் தொடர்பான தகவல்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வைரலாகி வருகின்றது இச்சம்பவம் குடும்ப உறவுகள் எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பது குறித்த விவாதத்தை ஏற்படுத்தி உள்ளமை குறிப்பிடத்தக்கது