காலி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஒன்றரை மாத குழந்தை கொரோனா வைரஸால்
பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் ரங்க சபாபதிகே தெரிவித்தார்.
மே 17 ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைக்கு,
நிமோனியா இருப்பது கண்டறியப்பட்ட பின்னர் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டது.
மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்ட குழந்தையின் மாதிரிகளில் கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளன.
உலகம் முழுவதும் பரவி வரும் புதிய கொவிட் வைரஸ் தொடர்பான தற்போதைய நிலைமையை விளக்கி, சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர் வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், உலக சுகாதார அமைப்பின் தரவுகளின்படி, 2025 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் கொவிட்-19 ஐ ஏற்படுத்தும் SARS-CoV-2 வைரஸின் செயல்பாடு உலகளவில் அதிகரித்துள்ளதாக சுகாதார செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
SARS-CoV-2 வைரஸ் பரவும்போது சில மரபணு மாற்றங்களுக்கு உட்படுவது இயல்பான நிலை என்றும்,
தற்போது உலகின் பல நாடுகளில் பதிவாகியுள்ள வகை, 2024 ஆம் ஆண்டில் பதிவான மரபணு வகையின் துணை வகையாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இலங்கையிலும் 2024 ஆம் ஆண்டில் இந்த வகை கவனிக்கப்பட்டதாகவும் வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
2025 மே மாதத்தில் வைத்திய ஆராய்ச்சி நிறுவனத்தால் (MRI) பரிசோதிக்கப்பட்ட மாதிரியும் இந்த துணை வகைகளுக்கு உட்பட்டது என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இவை புதிய மரபணு வகைகள் இல்லை, மேலும் இவை கடுமையான நோய் நிலைகளையோ அல்லது சிக்கல்களையோ ஏற்படுத்தவில்லை.
நோயால் சிக்கல்கள் ஏற்படக்கூடிய ஆபத்து நிறைந்த குழுவினர் நோயைத் தவிர்ப்பதற்கு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.
இந்த குழுக்களில் முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள், இதய நோய், நீண்டகால சுவாச நோய்கள், நீரிழிவு, சிறுநீரக நோய்கள், புற்றுநோய் போன்ற நீண்டகால நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் நோய்க்கு எதிர்ப்பு சக்தியைக் குறைக்கும் மருந்துகளைப் பயன்படுத்துவோர் அடங்குவர்.
இலங்கையில் கொவிட் -19 வைரஸின் தற்போதைய நிலை என்ன காலி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஒன்றரை மாத குழந்தை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் ரங்க சபாபதிகே தெரிவித்தார்.மே 17 ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைக்கு, நிமோனியா இருப்பது கண்டறியப்பட்ட பின்னர் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டது.மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்ட குழந்தையின் மாதிரிகளில் கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளன.உலகம் முழுவதும் பரவி வரும் புதிய கொவிட் வைரஸ் தொடர்பான தற்போதைய நிலைமையை விளக்கி, சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர் வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், உலக சுகாதார அமைப்பின் தரவுகளின்படி, 2025 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் கொவிட்-19 ஐ ஏற்படுத்தும் SARS-CoV-2 வைரஸின் செயல்பாடு உலகளவில் அதிகரித்துள்ளதாக சுகாதார செயலாளர் குறிப்பிட்டுள்ளார். SARS-CoV-2 வைரஸ் பரவும்போது சில மரபணு மாற்றங்களுக்கு உட்படுவது இயல்பான நிலை என்றும், தற்போது உலகின் பல நாடுகளில் பதிவாகியுள்ள வகை, 2024 ஆம் ஆண்டில் பதிவான மரபணு வகையின் துணை வகையாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இலங்கையிலும் 2024 ஆம் ஆண்டில் இந்த வகை கவனிக்கப்பட்டதாகவும் வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். 2025 மே மாதத்தில் வைத்திய ஆராய்ச்சி நிறுவனத்தால் (MRI) பரிசோதிக்கப்பட்ட மாதிரியும் இந்த துணை வகைகளுக்கு உட்பட்டது என அடையாளம் காணப்பட்டுள்ளது. இவை புதிய மரபணு வகைகள் இல்லை, மேலும் இவை கடுமையான நோய் நிலைகளையோ அல்லது சிக்கல்களையோ ஏற்படுத்தவில்லை. நோயால் சிக்கல்கள் ஏற்படக்கூடிய ஆபத்து நிறைந்த குழுவினர் நோயைத் தவிர்ப்பதற்கு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.இந்த குழுக்களில் முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள், இதய நோய், நீண்டகால சுவாச நோய்கள், நீரிழிவு, சிறுநீரக நோய்கள், புற்றுநோய் போன்ற நீண்டகால நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் நோய்க்கு எதிர்ப்பு சக்தியைக் குறைக்கும் மருந்துகளைப் பயன்படுத்துவோர் அடங்குவர்.