இஸ்ரேலுக்கு எதிரான போரில் ஈரான் தனியாக இல்லை . அவர்களுக்கு அனைத்து வகையிலும் ஆதரவு வழங்குவோம் என்று என வடகொரியா ஜனாதிபதி கிம் ஜொங் உன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,
ஈரானுக்கு அனைத்து வகையான ஆதரவும், உதவியும் வழங்க வடகொரியா தயாராகவுள்ளது . இந்த மோதலில் தெஹ்ரான் "தனியாக இல்லை".
இந்தப் போரில் வட கொரிய இராணுவம் மிக உயர்ந்த போர் தயார்நிலைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
கடினமான காலங்களில் நட்பு நாடுகளைக் கைவிடுவதில்லை. ஈரானிய அணுசக்தி மற்றும் இராணுவ உள்கட்டமைப்பு மீதான இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
அத்துடன் வொஷிங்டனால் செயல்படுத்தப்படும் கொள்கைகள் வன்முறையை அதிகரிப்பதுடன், ராஜதந்திரத்திற்கான கதவை மூடுகின்றது. எனவே ஈரானை முழுமையாக ஆதரிப்போம். அமெரிக்காவின் இராணுவ ஆக்கிரமிப்பு மற்றும் அழுத்தக் கொள்கைகளுக்கு எதிராக நட்பு நாடுகளுக்கு தமது ஆதரவை வழங்குவோம். - என்றார்.
இதேவேளை- வடகொரிய தலைவரின் இந்த கண்டனத்தையும், ஆதரவையும் ஈரான் வரவேற்றுள்ளது. ஈரானுக்கு சர்வதேச நட்பு நாடுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.
ஈரானுக்கு அனைத்து வகையிலும் ஆதரவளிப்போம் - வடகொரியா ஜனாதிபதி உறுதி இஸ்ரேலுக்கு எதிரான போரில் ஈரான் தனியாக இல்லை . அவர்களுக்கு அனைத்து வகையிலும் ஆதரவு வழங்குவோம் என்று என வடகொரியா ஜனாதிபதி கிம் ஜொங் உன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில், ஈரானுக்கு அனைத்து வகையான ஆதரவும், உதவியும் வழங்க வடகொரியா தயாராகவுள்ளது . இந்த மோதலில் தெஹ்ரான் "தனியாக இல்லை". இந்தப் போரில் வட கொரிய இராணுவம் மிக உயர்ந்த போர் தயார்நிலைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. கடினமான காலங்களில் நட்பு நாடுகளைக் கைவிடுவதில்லை. ஈரானிய அணுசக்தி மற்றும் இராணுவ உள்கட்டமைப்பு மீதான இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறேன். அத்துடன் வொஷிங்டனால் செயல்படுத்தப்படும் கொள்கைகள் வன்முறையை அதிகரிப்பதுடன், ராஜதந்திரத்திற்கான கதவை மூடுகின்றது. எனவே ஈரானை முழுமையாக ஆதரிப்போம். அமெரிக்காவின் இராணுவ ஆக்கிரமிப்பு மற்றும் அழுத்தக் கொள்கைகளுக்கு எதிராக நட்பு நாடுகளுக்கு தமது ஆதரவை வழங்குவோம். - என்றார். இதேவேளை- வடகொரிய தலைவரின் இந்த கண்டனத்தையும், ஆதரவையும் ஈரான் வரவேற்றுள்ளது. ஈரானுக்கு சர்வதேச நட்பு நாடுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.