• Jun 15 2025

இலங்கை மீனவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் மீன்பிடிக்க வேண்டாம் - தமிழக மீனவர்களுக்கு எச்சரிக்கை....!

shanuja / Jun 13th 2025, 7:31 pm
image

இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டி சென்று இலங்கை மீனவர்களுக்கு பாதிப்பு ஏற்படும்  வகையில் மீன்பிடியில் ஈடுபட  வேண்டாம் என்று தமிழக மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


தமிழக அரசால் அமுல்படுத்தப்பட்ட 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் நாளை நள்ளிரவுடன் நிறைவடையவுள்ள நிலையில் ராமநாதபுரம் மாவட்ட விசைப்படகு மீனவர்கள் எதிர்வரும் திங்கட்கிழமை (16) அதிகாலை மீன்பிடியில் ஈடுபட  முடிவு செய்துள்ளனர்.


இது தொடர்பில் மல்லிபட்டினத்தில் ஆறு  மாவட்ட மீனவர்களை இணைத்து ஆலோசனைக் கூட்டமொன்று இடம்பெற்றது. அந்தக் கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டது. கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டதாவது,  


எதிர்வரும் 16 ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டும். தடையை மீறி மீன்பிடி அனுமதி சீட்டு பெறாமல் மீன்பிடிக்க  செல்லும் மீன்பிடி படகுகள் மீது மீன்வளத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும். எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்து இலங்கை மீனவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில்  மீன் பிடிக்க வேண்டாம். மன்னார் வளைகுடா கடல் பகுதியில் வழக்கத்திற்கு மாறாக கடல் சீற்றத்துடன் இருப்பதால் மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் உரிய பாதுகாப்பு உபகரணங்களுடன் மீன்பிடிக்க செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


தமிழக அரசால் நடைமுறைப்படுத்தப்பட்ட 61 நாள் மீன்பிடி தடைக்காலம் கடந்த ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி  ஆரம்பமாகி  நாளை  (14) நள்ளிரவுடன் நிறைவடைய உள்ள நிலையில் எதிர்வரும் திங்கட்கிழமை மீன்பிடியில் ஈடுபட தமிழக மீனவர்கள் முடிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மீனவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் மீன்பிடிக்க வேண்டாம் - தமிழக மீனவர்களுக்கு எச்சரிக்கை. இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டி சென்று இலங்கை மீனவர்களுக்கு பாதிப்பு ஏற்படும்  வகையில் மீன்பிடியில் ஈடுபட  வேண்டாம் என்று தமிழக மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.தமிழக அரசால் அமுல்படுத்தப்பட்ட 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் நாளை நள்ளிரவுடன் நிறைவடையவுள்ள நிலையில் ராமநாதபுரம் மாவட்ட விசைப்படகு மீனவர்கள் எதிர்வரும் திங்கட்கிழமை (16) அதிகாலை மீன்பிடியில் ஈடுபட  முடிவு செய்துள்ளனர்.இது தொடர்பில் மல்லிபட்டினத்தில் ஆறு  மாவட்ட மீனவர்களை இணைத்து ஆலோசனைக் கூட்டமொன்று இடம்பெற்றது. அந்தக் கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டது. கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டதாவது,  எதிர்வரும் 16 ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டும். தடையை மீறி மீன்பிடி அனுமதி சீட்டு பெறாமல் மீன்பிடிக்க  செல்லும் மீன்பிடி படகுகள் மீது மீன்வளத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும். எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்து இலங்கை மீனவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில்  மீன் பிடிக்க வேண்டாம். மன்னார் வளைகுடா கடல் பகுதியில் வழக்கத்திற்கு மாறாக கடல் சீற்றத்துடன் இருப்பதால் மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் உரிய பாதுகாப்பு உபகரணங்களுடன் மீன்பிடிக்க செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.தமிழக அரசால் நடைமுறைப்படுத்தப்பட்ட 61 நாள் மீன்பிடி தடைக்காலம் கடந்த ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி  ஆரம்பமாகி  நாளை  (14) நள்ளிரவுடன் நிறைவடைய உள்ள நிலையில் எதிர்வரும் திங்கட்கிழமை மீன்பிடியில் ஈடுபட தமிழக மீனவர்கள் முடிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement