வவுனியாவில் மூடப்பட்டுள்ள பொருளாதார மத்திய நிலையத்தை மீள இயக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வவுனியா மாவட்டச் செயலகத்தில் கடந்த (28) சனிக்கிழமை இடம்பெற்ற கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக வடக்குமாகாண ஊடகப்பிரிவு அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
அந்த அறிக்கையில் உள்ளதாவது,
வடக்கு மாகாண ஆளுநரும் வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான நா.வேதநாயகன் மற்றும் கூட்டுறவுத்துறை பிரதி அமைச்சரும் வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவருமான உபாலி சமரசிங்க ஆகியோர் தலைமையில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது.
கடந்த 2018 ஆம் ஆண்டி கட்டி முடிக்கப்பட்டு இன்னமும் திறக்கப்படாதுள்ள பொருளாதார மத்திய நிலையத்தை திறப்பது தொடர்பில் இதில் பிரதானமாக ஆராயப்பட்டது.
வவுனியா நகரில் மொத்த மரக்கறி வியாபாரத்தில் ஈடுபடும் 37 வியாபாரிகளை முதல் கட்டமாக பொருளாதார மத்திய நிலையத்தினுள் வியாபாரத்துக்கு அனுமதி தொடர்பில் ஆராயப்பட்டது. அதற்கு அமைவாக பொருளாதார மத்திய நிலையத்தை எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக இயக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டது.
மேலும் வவுனியாவில் குளங்களை சட்டவிரோதமாக ஆக்கிரமித்து காணிகளை கையகப்படுத்தியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க ஆளுநருக்குச் சுட்டிக்காட்டினார். வவுனியா நகரினுள் அமைந்துள்ள சட்டவிரோத கடைத்தொகுதிகள் தொடர்பிலும் கலந்துரையாடலில் ஆராயப்பட்டு அவற்றை அகற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கத் தீர்மானிக்கப்பட்டது.- என்றுள்ளது.
வவுனியா பொருளாதார மத்திய நிலையம் மீள இயக்கம் வவுனியாவில் மூடப்பட்டுள்ள பொருளாதார மத்திய நிலையத்தை மீள இயக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. வவுனியா மாவட்டச் செயலகத்தில் கடந்த (28) சனிக்கிழமை இடம்பெற்ற கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக வடக்குமாகாண ஊடகப்பிரிவு அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.அந்த அறிக்கையில் உள்ளதாவது, வடக்கு மாகாண ஆளுநரும் வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான நா.வேதநாயகன் மற்றும் கூட்டுறவுத்துறை பிரதி அமைச்சரும் வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவருமான உபாலி சமரசிங்க ஆகியோர் தலைமையில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது. கடந்த 2018 ஆம் ஆண்டி கட்டி முடிக்கப்பட்டு இன்னமும் திறக்கப்படாதுள்ள பொருளாதார மத்திய நிலையத்தை திறப்பது தொடர்பில் இதில் பிரதானமாக ஆராயப்பட்டது. வவுனியா நகரில் மொத்த மரக்கறி வியாபாரத்தில் ஈடுபடும் 37 வியாபாரிகளை முதல் கட்டமாக பொருளாதார மத்திய நிலையத்தினுள் வியாபாரத்துக்கு அனுமதி தொடர்பில் ஆராயப்பட்டது. அதற்கு அமைவாக பொருளாதார மத்திய நிலையத்தை எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக இயக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டது.மேலும் வவுனியாவில் குளங்களை சட்டவிரோதமாக ஆக்கிரமித்து காணிகளை கையகப்படுத்தியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க ஆளுநருக்குச் சுட்டிக்காட்டினார். வவுனியா நகரினுள் அமைந்துள்ள சட்டவிரோத கடைத்தொகுதிகள் தொடர்பிலும் கலந்துரையாடலில் ஆராயப்பட்டு அவற்றை அகற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கத் தீர்மானிக்கப்பட்டது.- என்றுள்ளது.