மலையகத் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்க்கர் டர்க்கிடம் நேரடியாக அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
மலையகத் தமிழ் மக்களின் நீண்டகால உரிமைகள், நிலமின்மை, பொருளாதார சார்பு மற்றும் நிர்வாக புறக்கணிப்பு போன்ற அடிப்படை பிரச்சினைகள் உள்ளடங்கியதாகவே குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தில் நடைபெற்ற கட்சி தலைவர் கூட்டத்தில் கலந்துகொண்ட ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஆணையாளர் வோல்கர் டர்க்கை சந்தித்து, நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், மலையகத் தமிழர் சமூகத்தின் வரலாற்று பாரபட்சங்கள் மற்றும் தொடரும் சமூக, பொருளாதார புறக்கணிப்புகளை வலியுறுத்தியிருந்தார்.
இந்த சந்திப்பின் தொடர்ச்சியாக, ஜனநாயக மக்கள் முன்னணி – தமிழ் முற்போக்கு கூட்டணியின் சார்பில், அதன் சர்வதேச விவகாரங்களுக்கான உப தலைவர் பாரத் அருள்சாமி , உயர் ஆணையாளரை உத்தியோகபூர்வ கலந்துரையாடலில் சந்தித்து, ஒரு விரிவான உரிமைகள் அடிப்படையிலான அறிக்கையை கையளித்தார்.
இந்த அறிக்கை மலையக மக்களின் நில உரிமை, அடிப்படை வசதிகள், சுகாதார அணுகல், நிர்வாக பாகுபாடு மற்றும் சீர்திருத்த தேவைகளை வலியுறுத்துகிறது.
அறிக்கையில் நிலமின்மை மற்றும் உறையுளுக்கான அனுமதி மறுப்பு குடியிருப்புகள், தலைமுறையாகச் செயல்பட்டும் நில உரிமை மறுக்கப்படுகிறது. இது ICESCR பிரிவு 11 மற்றும் CERD பிரிவு 5(e)(iii) ஆகியவற்றை மீறுகிறது. பொருளாதார சுதந்திரமின்மை ,தொழிலாளர்கள் சார்பு ஊதியத்தில் சிக்கி மேலோங்க முடியாமல் இருக்கின்றனர். இது ILO மாநாடு எண். 110, ICESCR பிரிவு 7 மற்றும் SDG 8-ஐ மீறுகிறது. மருத்துவ சேவைகளின் இடைஞ்சல் , தோட்ட மருத்துவ மையங்கள் அரசின் பேணல் இல்லாமையால் செயலிழந்துள்ளன. இது ICESCR பிரிவு 12 மற்றும் ILO தொழிலாளர் நல தரங்களை மீறுகிறது. , நிர்வாக பாகுபாடு உள்ளிட்ட பல விடயங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
மலையக மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஐ.நா. ஆணையாளரிடம் அறிக்கை சமர்ப்பிப்பு மலையகத் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்க்கர் டர்க்கிடம் நேரடியாக அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.மலையகத் தமிழ் மக்களின் நீண்டகால உரிமைகள், நிலமின்மை, பொருளாதார சார்பு மற்றும் நிர்வாக புறக்கணிப்பு போன்ற அடிப்படை பிரச்சினைகள் உள்ளடங்கியதாகவே குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் நடைபெற்ற கட்சி தலைவர் கூட்டத்தில் கலந்துகொண்ட ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஆணையாளர் வோல்கர் டர்க்கை சந்தித்து, நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், மலையகத் தமிழர் சமூகத்தின் வரலாற்று பாரபட்சங்கள் மற்றும் தொடரும் சமூக, பொருளாதார புறக்கணிப்புகளை வலியுறுத்தியிருந்தார்.இந்த சந்திப்பின் தொடர்ச்சியாக, ஜனநாயக மக்கள் முன்னணி – தமிழ் முற்போக்கு கூட்டணியின் சார்பில், அதன் சர்வதேச விவகாரங்களுக்கான உப தலைவர் பாரத் அருள்சாமி , உயர் ஆணையாளரை உத்தியோகபூர்வ கலந்துரையாடலில் சந்தித்து, ஒரு விரிவான உரிமைகள் அடிப்படையிலான அறிக்கையை கையளித்தார். இந்த அறிக்கை மலையக மக்களின் நில உரிமை, அடிப்படை வசதிகள், சுகாதார அணுகல், நிர்வாக பாகுபாடு மற்றும் சீர்திருத்த தேவைகளை வலியுறுத்துகிறது.அறிக்கையில் நிலமின்மை மற்றும் உறையுளுக்கான அனுமதி மறுப்பு குடியிருப்புகள், தலைமுறையாகச் செயல்பட்டும் நில உரிமை மறுக்கப்படுகிறது. இது ICESCR பிரிவு 11 மற்றும் CERD பிரிவு 5(e)(iii) ஆகியவற்றை மீறுகிறது. பொருளாதார சுதந்திரமின்மை ,தொழிலாளர்கள் சார்பு ஊதியத்தில் சிக்கி மேலோங்க முடியாமல் இருக்கின்றனர். இது ILO மாநாடு எண். 110, ICESCR பிரிவு 7 மற்றும் SDG 8-ஐ மீறுகிறது. மருத்துவ சேவைகளின் இடைஞ்சல் , தோட்ட மருத்துவ மையங்கள் அரசின் பேணல் இல்லாமையால் செயலிழந்துள்ளன. இது ICESCR பிரிவு 12 மற்றும் ILO தொழிலாளர் நல தரங்களை மீறுகிறது. , நிர்வாக பாகுபாடு உள்ளிட்ட பல விடயங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.