• Jun 03 2025

தோனிக்குள் பறிபோன இரு உயிர்கள் : தாமரைப்பூ பறிக்கச் சென்றதால் நடந்த விபரீதம்

Thansita / Jun 1st 2025, 7:50 pm
image

உடுப்புக்குளத்தில் தோணியில் தாமரைப்பூ பறிக்க சென்ற இருவர் உயிரிழந்த சம்பவம்  இன்றையதினம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 அளம்பில் தெற்கில் வசிக்கும் 10 வயதுடைய சி.பிரணவன் , 25 வயதுடைய இ.நிஷாந்தன்  எனும் இருவரே  உயிரிழந்துள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்

முல்லைத்தீவு  உடுப்புக்குளம்  பகுதியில் உள்ள  குளத்தில்  இருவர் தோணியில்  தாமரைப்பூ பறிக்க சென்றவேளை  தோணி கவிழ்ந்துள்ளது.

 இதன்போது தோணியில் இருந்த இருவரும்  நீரிற்குள் மூழ்கிய நிலையில்  மீட்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

இச் சம்பவம்  தொடர்பான  மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு  பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அதே நேரம் இன்று பிற்பகல்  குமுழமுனை ஆலய கேணியை பார்வையிட சென்ற  இரு  மாணவிகள்  கேணியில் தவறி வீழ்ந்து. உயிரிழந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

தோனிக்குள் பறிபோன இரு உயிர்கள் : தாமரைப்பூ பறிக்கச் சென்றதால் நடந்த விபரீதம் உடுப்புக்குளத்தில் தோணியில் தாமரைப்பூ பறிக்க சென்ற இருவர் உயிரிழந்த சம்பவம்  இன்றையதினம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அளம்பில் தெற்கில் வசிக்கும் 10 வயதுடைய சி.பிரணவன் , 25 வயதுடைய இ.நிஷாந்தன்  எனும் இருவரே  உயிரிழந்துள்ளனர்.குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்முல்லைத்தீவு  உடுப்புக்குளம்  பகுதியில் உள்ள  குளத்தில்  இருவர் தோணியில்  தாமரைப்பூ பறிக்க சென்றவேளை  தோணி கவிழ்ந்துள்ளது. இதன்போது தோணியில் இருந்த இருவரும்  நீரிற்குள் மூழ்கிய நிலையில்  மீட்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.இச் சம்பவம்  தொடர்பான  மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு  பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.அதே நேரம் இன்று பிற்பகல்  குமுழமுனை ஆலய கேணியை பார்வையிட சென்ற  இரு  மாணவிகள்  கேணியில் தவறி வீழ்ந்து. உயிரிழந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement