திருகோணமலை நாச்சிக்குடா பிரதேசத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட, முகம்மது சப்ராஸ் என்ற இளம் குடும்பஸ்தர் கடந்த புதன்கிழமை(28) டுபாய் நாட்டில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த சில தினங்களாக திடீரென ஏற்பட்ட காய்ச்சல் காரணமாக டுபாயில் உள்ள பிரபல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக அவரது உறவினர்களுக்கு அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
32 வயதான இளம் குடும்பஸ்தரான இவர், இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார்.
இவர் கடந்த இரண்டரை வருடங்களாக டுபாய் நாட்டில் தொழில் புரிந்து வந்ததாகவும், அவரது மனைவியும் மத்திய கிழக்கு நாடு ஒன்றில் தொழில் புரிந்து வருவதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.
அன்னாரின் ஜனாஸாவை அந்த நாட்டிலே அடக்கம் செய்வதற்கு, தேவையான அலுவலகப் படிவங்களை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் ஊடாக, அனுப்பி வைப்பதற்கு சகல முன்னெடுப்புகளும் இன்று மேற்கொள்ளப்பட்டதாகவும், நாளைய தினம் ( சனிக்கிழமை) பெரும்பாலும் அடக்கம் செய்யப்படலாம் எனவும் உறவினர்கள் தெரிவித்தனர்.
திருமலை இளைஞன் துபாயில் மரணம்: நடந்தது என்ன திருகோணமலை நாச்சிக்குடா பிரதேசத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட, முகம்மது சப்ராஸ் என்ற இளம் குடும்பஸ்தர் கடந்த புதன்கிழமை(28) டுபாய் நாட்டில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.கடந்த சில தினங்களாக திடீரென ஏற்பட்ட காய்ச்சல் காரணமாக டுபாயில் உள்ள பிரபல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக அவரது உறவினர்களுக்கு அறிவிக்கப்பட்டிருக்கின்றது.32 வயதான இளம் குடும்பஸ்தரான இவர், இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார். இவர் கடந்த இரண்டரை வருடங்களாக டுபாய் நாட்டில் தொழில் புரிந்து வந்ததாகவும், அவரது மனைவியும் மத்திய கிழக்கு நாடு ஒன்றில் தொழில் புரிந்து வருவதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.அன்னாரின் ஜனாஸாவை அந்த நாட்டிலே அடக்கம் செய்வதற்கு, தேவையான அலுவலகப் படிவங்களை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் ஊடாக, அனுப்பி வைப்பதற்கு சகல முன்னெடுப்புகளும் இன்று மேற்கொள்ளப்பட்டதாகவும், நாளைய தினம் ( சனிக்கிழமை) பெரும்பாலும் அடக்கம் செய்யப்படலாம் எனவும் உறவினர்கள் தெரிவித்தனர்.