மத்திய மலைநாட்டில் பெய்து வரும் மழை காரணமாக மலையகத்தில் நீரேந்தும் பகுதிகளில் நீர் மட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
கடந்த தினங்களாக பெய்து வந்த மழையால் நீரோடைகள், ஆறுகள் என பெருக்கம் எடுத்து நீரேந்தும் பகுதிகளில் நீர் மட்டம் அதிகரித்து காணப்பட்டது.
மேல் கொத்மலை, விமலசுரேந்திர, காசல்ரீ ஆகிய நீரேந்தும் பகுதிகளில் அதிகமான நீர்மட்டம் காணப்பட்டது. இந்நீரினை வெளியேற்றுவதற்காக நேற்று முதல் நீரேந்தும் பகுதிகளில் வான்கதவுகள் திறக்கப்பட்டது.
அந்தவகையில் மேல் கொத்மலை நீர்தேக்கத்தில் வான்கதவு ஒன்று நேற்று மாலை முதல் திறக்கப்பட்டது.
அத்தோடு காசல்ரீ நீர்தேகத்தின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளது.
இதனால் நீர்தேக்க பகுதிகளில் தாழ்வான பிரதேசத்தில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் அவதானத்துடன் இருக்கும் படி அதிகாரிகளால் பணிக்கப்பட்டுள்ளது.
மேல் கொத்மலை நீர்தேக்கத்தின் வான்கதவு திறப்பு மத்திய மலைநாட்டில் பெய்து வரும் மழை காரணமாக மலையகத்தில் நீரேந்தும் பகுதிகளில் நீர் மட்டம் அதிகரித்து காணப்படுகிறது.கடந்த தினங்களாக பெய்து வந்த மழையால் நீரோடைகள், ஆறுகள் என பெருக்கம் எடுத்து நீரேந்தும் பகுதிகளில் நீர் மட்டம் அதிகரித்து காணப்பட்டது.மேல் கொத்மலை, விமலசுரேந்திர, காசல்ரீ ஆகிய நீரேந்தும் பகுதிகளில் அதிகமான நீர்மட்டம் காணப்பட்டது. இந்நீரினை வெளியேற்றுவதற்காக நேற்று முதல் நீரேந்தும் பகுதிகளில் வான்கதவுகள் திறக்கப்பட்டது.அந்தவகையில் மேல் கொத்மலை நீர்தேக்கத்தில் வான்கதவு ஒன்று நேற்று மாலை முதல் திறக்கப்பட்டது.அத்தோடு காசல்ரீ நீர்தேகத்தின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளது. இதனால் நீர்தேக்க பகுதிகளில் தாழ்வான பிரதேசத்தில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் அவதானத்துடன் இருக்கும் படி அதிகாரிகளால் பணிக்கப்பட்டுள்ளது.