சிவப்புகொள்கலன் விடுவிப்பு குற்றச்சாட்டு தொடர்பில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தப்பிக்கமுடியாது என பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
இன்றைய பாராளுமன்ற அமர்வில் உரையாற்றிய அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
கொள்கலன்களை விடுவிப்பது தொடர்பில் எழுந்த குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்காக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையை அரசாங்கம் இதுவரை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்காமல் மறைத்து வைத்திருந்ததாகவும், தான் இந்தக் குழுவின் அறிக்கையை இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதாகவும் முஜிபுர் ரஹ்மான் குறிப்பிட்டார்.
அவதானம் என்ற வகைப்பாட்டின் கீழ் கட்டாய சோதனைக்கு உட்படுத்த வேண்டிய சிவப்பு முத்திரை பதித்த 151 கொள்கலன்களில் 37 கொள்கலன்கள் எந்தவொரு சோதனைக்கும் உட்படுத்தப்படாமல் விடுவிக்கப்பட்டதாக குழுவின் அறிக்கையில் தெரியவந்துள்ளது.
சோதனை செய்யப்பட வேண்டிய 103 கொள்கலன்கள் எந்தவொரு சோதனையும் இன்றி விடுவிக்கப்பட்டதாகவும், கொள்கலன்களை விடுவிப்பதற்கான தீர்மானம் ஜனவரி 18 ஆம் திகதி எடுக்கப்பட்டாலும், அந்த முடிவு எடுக்கப்படுவதற்கு முந்தைய நாள் ஜனவரி 17 ஆம் திகதி இரண்டு கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதிக்கு எதிராக யாராவது கருத்து தெரிவித்தால் அவர்களை விசாரிக்கின்றார்கள். ஆனால் ஏன் இதைப்பற்றி யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை.
சுங்கம் ஜனாதிபதியின் கீழ்தான் இருக்கிறது. ஆகவே இந்தக் குற்றச்சாட்டிலிருந்து ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தப்பிக்கமுடியாது என தெரிவித்தார்
சிவப்புகொள்கலன் விடுவிப்பு குற்றச்சாட்டு; ஜனாதிபதி தப்பிக்கமுடியாது உண்மையை உடைத்தார் முஜிபுர் ரஹ்மான் சிவப்புகொள்கலன் விடுவிப்பு குற்றச்சாட்டு தொடர்பில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தப்பிக்கமுடியாது என பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். இன்றைய பாராளுமன்ற அமர்வில் உரையாற்றிய அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், கொள்கலன்களை விடுவிப்பது தொடர்பில் எழுந்த குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்காக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையை அரசாங்கம் இதுவரை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்காமல் மறைத்து வைத்திருந்ததாகவும், தான் இந்தக் குழுவின் அறிக்கையை இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதாகவும் முஜிபுர் ரஹ்மான் குறிப்பிட்டார்.அவதானம் என்ற வகைப்பாட்டின் கீழ் கட்டாய சோதனைக்கு உட்படுத்த வேண்டிய சிவப்பு முத்திரை பதித்த 151 கொள்கலன்களில் 37 கொள்கலன்கள் எந்தவொரு சோதனைக்கும் உட்படுத்தப்படாமல் விடுவிக்கப்பட்டதாக குழுவின் அறிக்கையில் தெரியவந்துள்ளது.சோதனை செய்யப்பட வேண்டிய 103 கொள்கலன்கள் எந்தவொரு சோதனையும் இன்றி விடுவிக்கப்பட்டதாகவும், கொள்கலன்களை விடுவிப்பதற்கான தீர்மானம் ஜனவரி 18 ஆம் திகதி எடுக்கப்பட்டாலும், அந்த முடிவு எடுக்கப்படுவதற்கு முந்தைய நாள் ஜனவரி 17 ஆம் திகதி இரண்டு கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.ஜனாதிபதிக்கு எதிராக யாராவது கருத்து தெரிவித்தால் அவர்களை விசாரிக்கின்றார்கள். ஆனால் ஏன் இதைப்பற்றி யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை.சுங்கம் ஜனாதிபதியின் கீழ்தான் இருக்கிறது. ஆகவே இந்தக் குற்றச்சாட்டிலிருந்து ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தப்பிக்கமுடியாது என தெரிவித்தார்