• Jul 12 2026

புதிய கடன் மோசடி குறித்து CERT எச்சரிக்கை

dorin / Jul 11th 2026, 7:17 pm
image

அவசர கடன் வழங்கப்படுவதாக வரும் செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம் என்றும், அத்தகைய செய்திகள் மூலம் பகிரப்படும் இணைப்புகளை (Links) பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்றும் இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு (CERT) பொதுமக்களிடம் கோரியுள்ளது. 

யாராவது அல்லது ஏதேனும் நிறுவனம் தனது தனிப்பட்ட தகவல்களை பெற்றுள்ளதாக சந்தேகம் ஏற்பட்டால், 101 என்ற இலக்கத்திற்கு அழைத்து அது குறித்து அறிவிக்குமாறும் அந்தச் குழு அறிவுறுத்தியுள்ளது. 

சமூக வலைதளங்களில் தற்போது அவசர கடன்களை பெற்றுக்கொள்ளலாம் எனப் பல செய்திகள் பகிரப்பட்டு வருகின்றன. 

இந்தச் செய்திகளில், சில நிறுவனங்கள் 5,000 முதல் 150,000 ரூபாய் வரையிலும், வேறு சில நிறுவனங்கள் 5 லட்சம் ரூபாய் வரையிலும் கடன் வழங்கத் தயார் எனத் தெரிவிக்கின்றன. 

"ஆவணங்கள் அல்லது பிணையாளர்கள் தேவையில்லை" என்பது இவர்களின் முக்கிய கவர்ச்சியாக உள்ளது. 

இந்த மோசடி நிறுவனங்களின் உண்மையான நோக்கம் பொதுமக்களின் தனிப்பட்ட தகவல்களைத் திருடுவதாகும். 

கடன் விண்ணப்பிப்பவர்களுக்கு அனுப்பப்படும் இணைப்பை கிளிக் செய்யுமாறு அவர்கள் பணிக்கின்றனர். அதை கிளிக் செய்தவுடன், அவர்கள் மோசடிகாரர்களின் பிடியில் சிக்கிக்கொள்கின்றனர். 

இந்த இணைப்பின் மூலம் 'ரிமோட் அட்மினிஸ்ட்ரேட்டிவ் டூல்' (RAT) எனப்படும் மென்பொருள் பயனரின் கைபேசிக்குள் நுழைகிறது. இது கைபேசியின் கட்டுப்பாட்டை மோசடிகாரர்களிடம் ஒப்படைத்துவிடுகிறது. 

இதன் மூலம் கைபேசியிலுள்ள புகைப்படங்கள், ஆவணங்கள், நண்பர்களின் தகவல்கள் மற்றும் தொலைபேசி எண்கள் அனைத்தையும் அவர்களால் அணுக முடியும். குறிப்பாக .apk கோப்புகளைப் பதிவிறக்கினால் நிலைமை இன்னும் மோசமாகிவிடும். 

முதலில் சிறிய கடன் தொகையை வழங்கி, பின்னர் அதனைத் திருப்பிச் செலுத்த முடியாத அளவுக்குப் பெரிய கடனாக மாற்றி, வட்டி மற்றும் நிபந்தனைகளைத் தீவிரப்படுத்துவதன் மூலம் பொதுமக்களை இவர்கள் அச்சுறுத்துகின்றனர். 

நிபந்தனைகளை நிறைவேற்றாதவர்கள் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுவதுடன், தங்களின் நண்பர்கள் முன்னிலையில் கடன் பெற்றுச் சிக்கலில் சிக்கியவர்களாகக் காட்டப்படுகிறார்கள். 

இலகுவான கடன் பெறச் சென்று இறுதியில் கையில் இருக்கும் பணத்தையும் இழக்க நேரிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

புதிய கடன் மோசடி குறித்து CERT எச்சரிக்கை அவசர கடன் வழங்கப்படுவதாக வரும் செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம் என்றும், அத்தகைய செய்திகள் மூலம் பகிரப்படும் இணைப்புகளை (Links) பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்றும் இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு (CERT) பொதுமக்களிடம் கோரியுள்ளது. யாராவது அல்லது ஏதேனும் நிறுவனம் தனது தனிப்பட்ட தகவல்களை பெற்றுள்ளதாக சந்தேகம் ஏற்பட்டால், 101 என்ற இலக்கத்திற்கு அழைத்து அது குறித்து அறிவிக்குமாறும் அந்தச் குழு அறிவுறுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் தற்போது அவசர கடன்களை பெற்றுக்கொள்ளலாம் எனப் பல செய்திகள் பகிரப்பட்டு வருகின்றன. இந்தச் செய்திகளில், சில நிறுவனங்கள் 5,000 முதல் 150,000 ரூபாய் வரையிலும், வேறு சில நிறுவனங்கள் 5 லட்சம் ரூபாய் வரையிலும் கடன் வழங்கத் தயார் எனத் தெரிவிக்கின்றன. "ஆவணங்கள் அல்லது பிணையாளர்கள் தேவையில்லை" என்பது இவர்களின் முக்கிய கவர்ச்சியாக உள்ளது. இந்த மோசடி நிறுவனங்களின் உண்மையான நோக்கம் பொதுமக்களின் தனிப்பட்ட தகவல்களைத் திருடுவதாகும். கடன் விண்ணப்பிப்பவர்களுக்கு அனுப்பப்படும் இணைப்பை கிளிக் செய்யுமாறு அவர்கள் பணிக்கின்றனர். அதை கிளிக் செய்தவுடன், அவர்கள் மோசடிகாரர்களின் பிடியில் சிக்கிக்கொள்கின்றனர். இந்த இணைப்பின் மூலம் 'ரிமோட் அட்மினிஸ்ட்ரேட்டிவ் டூல்' (RAT) எனப்படும் மென்பொருள் பயனரின் கைபேசிக்குள் நுழைகிறது. இது கைபேசியின் கட்டுப்பாட்டை மோசடிகாரர்களிடம் ஒப்படைத்துவிடுகிறது. இதன் மூலம் கைபேசியிலுள்ள புகைப்படங்கள், ஆவணங்கள், நண்பர்களின் தகவல்கள் மற்றும் தொலைபேசி எண்கள் அனைத்தையும் அவர்களால் அணுக முடியும். குறிப்பாக .apk கோப்புகளைப் பதிவிறக்கினால் நிலைமை இன்னும் மோசமாகிவிடும். முதலில் சிறிய கடன் தொகையை வழங்கி, பின்னர் அதனைத் திருப்பிச் செலுத்த முடியாத அளவுக்குப் பெரிய கடனாக மாற்றி, வட்டி மற்றும் நிபந்தனைகளைத் தீவிரப்படுத்துவதன் மூலம் பொதுமக்களை இவர்கள் அச்சுறுத்துகின்றனர். நிபந்தனைகளை நிறைவேற்றாதவர்கள் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுவதுடன், தங்களின் நண்பர்கள் முன்னிலையில் கடன் பெற்றுச் சிக்கலில் சிக்கியவர்களாகக் காட்டப்படுகிறார்கள். இலகுவான கடன் பெறச் சென்று இறுதியில் கையில் இருக்கும் பணத்தையும் இழக்க நேரிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement