• Jun 27 2025

ஒன்பது நபர்களைக் கொன்ற “ருவிற்றர் கொலையாளி” ஜப்பானில் தூக்கிலிடப்பட்டார்!

shanuja / Jun 27th 2025, 5:34 pm
image

ஜப்பானில்  ஒன்பது பேரைக் கொன்று,  உடல் உறுப்புகளை துண்டித்ததற்காக தண்டனை பெற்ற ஒருவர் கடந்த 5 வருடங்களுக்குப் பின்னர் இன்று தூக்கலிடப்பட்டுள்ளார். 


"ருவிற்றர் கொலையாளி" என்று அழைக்கப்படும் தகாஹிரோ ஷிரைஷி என்ற நபரே மரண தண்டனை விதிக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டுள்ளார். 


கடந்த 2017 ஆம் ஆண்டு எட்டு பெண்கள், ஒரு ஆண் என ஒன்பது நபர்களை  சமூக ஊடகத் தளமான X இல் (முன்னர் ட்விட்டர்) தொடர்பு கொண்ட பிறகு கழுத்தை நெரித்து கொன்றார்.


உயிரிழந்ந 15 முதல் 26 வயதுக்குட்பட்ட நபர்கள்,  தற்கொலை எண்ணங்கள் இருப்பதாக ருவிற்றரில் பதிவிட்டிருந்தனர்.  அந்தப் பதிவிற்குப் பதிலளிக்கையில் அவர்களின் திட்டங்களில் அவர்களுக்கு உதவலாம் என்றும்  சேர்ந்து இறக்கலாம் என்று ஷிரைஷி அவர்களிடம்  தெரிவித்தார். 


அதனையடுத்து குறித்த ஒன்பது பேரையும் அவர் கொலை செய்தார். அத்துடன் கொலை செய்த பெண்களை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்திருந்தார். கொலை, பாலியல் துஷ்பிரயோகம் போன்ற குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட ஷிரைஷிக்கு 2020 ஆம் ஆண்டில் இல் மரண தண்டனை விதிக்கப்பட்டது.


ஷிரைஷியின் மரண  தண்டனையை அங்கீகரித்த அந்நாட்டு நீதி அமைச்சர் கெய்சுகே சுசுகி,  "சமூகத்திற்கு பெரும் அதிர்ச்சியையும் அமைதியின்மையையும் ஏற்படுத்திய" குற்றங்களுக்கான குற்றவாளியின் "மிகவும் சுயநல" நோக்கத்தை கணக்கில் எடுத்துக்கொண்டு, கவனமாக பரிசீலித்த பிறகு இந்த முடிவை எடுத்ததாகக்  தெரிவித்தார். 


இந்த நிலையில் 5 வருடங்களுக்குப் பின்னர் எந்தத் தகவலும் வெளியிடப்படாமல் டோக்கியோ தடுப்புக் காவல் நிலையத்தில் இன்று ஷிரைஷியின் தூக்கு தண்டனை கடுமையான ரகசியத்தின் கீழ்  நிறைவேற்றப்பட்டது என்று தகவல் வெளியாகியுள்ளது. 


ஜப்பானில் மரண தண்டனையை ஒழிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் அதிகரித்து வரும் நிலையில் ஷிரைஷியின் மரணதண்டனைக்கு பொதுமக்களின் ஆதரவு மிகவும் வலுவடைந்துள்ளது. ஜப்பானின் கடைசி மரணதண்டனை ஜூலை 2022 இல் நிறைவேற்றப்பட்ட நிலையில் மீண்டும் இன்று ஒரு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஒன்பது நபர்களைக் கொன்ற “ருவிற்றர் கொலையாளி” ஜப்பானில் தூக்கிலிடப்பட்டார் ஜப்பானில்  ஒன்பது பேரைக் கொன்று,  உடல் உறுப்புகளை துண்டித்ததற்காக தண்டனை பெற்ற ஒருவர் கடந்த 5 வருடங்களுக்குப் பின்னர் இன்று தூக்கலிடப்பட்டுள்ளார். "ருவிற்றர் கொலையாளி" என்று அழைக்கப்படும் தகாஹிரோ ஷிரைஷி என்ற நபரே மரண தண்டனை விதிக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டுள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு எட்டு பெண்கள், ஒரு ஆண் என ஒன்பது நபர்களை  சமூக ஊடகத் தளமான X இல் (முன்னர் ட்விட்டர்) தொடர்பு கொண்ட பிறகு கழுத்தை நெரித்து கொன்றார்.உயிரிழந்ந 15 முதல் 26 வயதுக்குட்பட்ட நபர்கள்,  தற்கொலை எண்ணங்கள் இருப்பதாக ருவிற்றரில் பதிவிட்டிருந்தனர்.  அந்தப் பதிவிற்குப் பதிலளிக்கையில் அவர்களின் திட்டங்களில் அவர்களுக்கு உதவலாம் என்றும்  சேர்ந்து இறக்கலாம் என்று ஷிரைஷி அவர்களிடம்  தெரிவித்தார். அதனையடுத்து குறித்த ஒன்பது பேரையும் அவர் கொலை செய்தார். அத்துடன் கொலை செய்த பெண்களை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்திருந்தார். கொலை, பாலியல் துஷ்பிரயோகம் போன்ற குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட ஷிரைஷிக்கு 2020 ஆம் ஆண்டில் இல் மரண தண்டனை விதிக்கப்பட்டது.ஷிரைஷியின் மரண  தண்டனையை அங்கீகரித்த அந்நாட்டு நீதி அமைச்சர் கெய்சுகே சுசுகி,  "சமூகத்திற்கு பெரும் அதிர்ச்சியையும் அமைதியின்மையையும் ஏற்படுத்திய" குற்றங்களுக்கான குற்றவாளியின் "மிகவும் சுயநல" நோக்கத்தை கணக்கில் எடுத்துக்கொண்டு, கவனமாக பரிசீலித்த பிறகு இந்த முடிவை எடுத்ததாகக்  தெரிவித்தார். இந்த நிலையில் 5 வருடங்களுக்குப் பின்னர் எந்தத் தகவலும் வெளியிடப்படாமல் டோக்கியோ தடுப்புக் காவல் நிலையத்தில் இன்று ஷிரைஷியின் தூக்கு தண்டனை கடுமையான ரகசியத்தின் கீழ்  நிறைவேற்றப்பட்டது என்று தகவல் வெளியாகியுள்ளது. ஜப்பானில் மரண தண்டனையை ஒழிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் அதிகரித்து வரும் நிலையில் ஷிரைஷியின் மரணதண்டனைக்கு பொதுமக்களின் ஆதரவு மிகவும் வலுவடைந்துள்ளது. ஜப்பானின் கடைசி மரணதண்டனை ஜூலை 2022 இல் நிறைவேற்றப்பட்ட நிலையில் மீண்டும் இன்று ஒரு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement