• Jun 10 2025

மீண்டும் கூடவுள்ளது தேசபந்து தொடர்பான விசாரணைக்குழு!

Chithra / Jun 9th 2025, 1:16 pm
image

 

தேசபந்து தென்னகோனின் அதிகார துஷ்பிரயோகம் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்க நியமிக்கப்பட்ட விசாரணைக் குழு இன்று (09) மீண்டும் கூடவுள்ளது.

அதன்படி, சாட்சிகளின் வாக்குமூலங்கள் தொடர்பாக பிரதிவாதி தரப்பின் நிலைப்பாடு இன்று (09) முன்வைக்கப்பட உள்ளது.

சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதிநிதிகள் சமீபத்தில் சாட்சிகளின் வாக்குமூலங்களை பிரதிவாதி தரப்பிற்கு வழங்கினர். 

மேலும் பிரதிவாதிகள் பாராளுமன்றத்திற்கு வந்து இரு தரப்பினரின் ஒப்புதலுடன் மேலும் இரண்டு சாட்சிகளின் வாக்குமூலங்களை ஆய்வு செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டது.

மீண்டும் கூடவுள்ளது தேசபந்து தொடர்பான விசாரணைக்குழு  தேசபந்து தென்னகோனின் அதிகார துஷ்பிரயோகம் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்க நியமிக்கப்பட்ட விசாரணைக் குழு இன்று (09) மீண்டும் கூடவுள்ளது.அதன்படி, சாட்சிகளின் வாக்குமூலங்கள் தொடர்பாக பிரதிவாதி தரப்பின் நிலைப்பாடு இன்று (09) முன்வைக்கப்பட உள்ளது.சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதிநிதிகள் சமீபத்தில் சாட்சிகளின் வாக்குமூலங்களை பிரதிவாதி தரப்பிற்கு வழங்கினர். மேலும் பிரதிவாதிகள் பாராளுமன்றத்திற்கு வந்து இரு தரப்பினரின் ஒப்புதலுடன் மேலும் இரண்டு சாட்சிகளின் வாக்குமூலங்களை ஆய்வு செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement