• May 25 2026

யாழின் முக்கிய பகுதியில் நள்ளிரவில் தீப்பற்றியெறிந்த கடற்றொழிலாளர்களின் படகுகள்...!விசமிகள் அட்டகாசம்...!samugammedia

Ziya / Dec 29th 2023, 2:44 pm
image

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கேவில் கடற்றொழிலாளர்கள் சங்கத்திற்கு உட்பட்ட இரண்டு மீனவர்களுக்கு சொந்தமான இரண்டு படகுகள்,  மற்றும் ரூபா  14 இலட்சம் பெறுமதியான வலைகள் ஏன்பவற்றை  விசமிகள் தீயிட்டு எரித்துள்ளனர்.

இச் சம்பவம் நேற்று நள்ளிரவு கேவில்  பாலையடி மேற்கு களப்பில் இடம்பெற்றுள்ளது 

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

இரண்டு நாட்களுக்கு முன்பு நடைபெற்ற கேவில்  கடற்றொழிளாளர் கூட்டத்தில் இறால்களின் இனப்பெருக்கத்திற்காகவும்,  இறாலின் பருமன்  வளர்சியை அதிகரிப்பதற்க்காகவும் இறால் கூடு கட்டுவதை தற்காலிகமாக  தடை செய்திருந்தது.

இதை மீறி தொழிலில் ஈடுபட்ட பலரின் உபகரணங்கள் கைப்பற்றப்பட்ட  போதும் விசமி ஒருவர் இரண்டு மீனவர்களுக்கு சொந்தமான மீன்பிடி உபகரணங்களை தீயிட்டு எரித்துள்ளதாக கேவில் கடற்றொழிலாளர்கள் தெரிவித்தனர்.

இச் சம்பவம் தொடர்பாக மருதங்கேணி பொலிசாரிடம் முறைப்பாடும் பதிவு செய்யப்பட்டுள்ளது.



யாழின் முக்கிய பகுதியில் நள்ளிரவில் தீப்பற்றியெறிந்த கடற்றொழிலாளர்களின் படகுகள்.விசமிகள் அட்டகாசம்.samugammedia யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கேவில் கடற்றொழிலாளர்கள் சங்கத்திற்கு உட்பட்ட இரண்டு மீனவர்களுக்கு சொந்தமான இரண்டு படகுகள்,  மற்றும் ரூபா  14 இலட்சம் பெறுமதியான வலைகள் ஏன்பவற்றை  விசமிகள் தீயிட்டு எரித்துள்ளனர்.இச் சம்பவம் நேற்று நள்ளிரவு கேவில்  பாலையடி மேற்கு களப்பில் இடம்பெற்றுள்ளது குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, இரண்டு நாட்களுக்கு முன்பு நடைபெற்ற கேவில்  கடற்றொழிளாளர் கூட்டத்தில் இறால்களின் இனப்பெருக்கத்திற்காகவும்,  இறாலின் பருமன்  வளர்சியை அதிகரிப்பதற்க்காகவும் இறால் கூடு கட்டுவதை தற்காலிகமாக  தடை செய்திருந்தது.இதை மீறி தொழிலில் ஈடுபட்ட பலரின் உபகரணங்கள் கைப்பற்றப்பட்ட  போதும் விசமி ஒருவர் இரண்டு மீனவர்களுக்கு சொந்தமான மீன்பிடி உபகரணங்களை தீயிட்டு எரித்துள்ளதாக கேவில் கடற்றொழிலாளர்கள் தெரிவித்தனர்.இச் சம்பவம் தொடர்பாக மருதங்கேணி பொலிசாரிடம் முறைப்பாடும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement