• Jun 08 2025

சுடரொளி விளையாட்டு கழகத்தின் கிரிக்கெட் போட்டியின் இறுதிச்சுற்று...!

shanuja / Jun 8th 2025, 10:49 am
image

வடமராட்சி நெல்லியடி கிழக்கு புதுத்தோட்டம் சுடரொளி விளையாட்டு கழகம் தனது 50 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடாத்தப்பட்ட கிரிக்கெட் போட்டியின் இறுதிச்சுற்று நேற்று (06) இடம்பெற்றது. 


கடந்த மே (24) ஆம் திகதி  ஆரம்பமான போட்டியில் கழக வீரர்களுக்கிடையில் நடாத்தப்பட்ட 10 ஓவர் கொண்ட மென்பந்து கிரிக்கெட் போட்டியில்  ஆண்கள் பிரிவில்  ஐந்து அணிகளும், பெண்கள் பிரிவில் மூன்று அணிகளும் விளையாடின.


 போட்டியின் இறுதிச் சுற்று நேற்று சுடரொளி விளையாட்டுக் கழகத்தின் மைதானத்தில்  கழகத் தலைவர் தலைமையில் ஆரம்பமானது.  


இறுதிச் சுற்றில் ஆண்கள் பிரிவில்  ரைசிங் ரைற்றஸ் அணியும், வடமராட்சி சுப்பர்கிங் அணியும் மோதின. இதில் வடமராட்சி சுப்பர்கிங் அணி வெற்றியீட்டியது.


இதேவேளை பெண்கள் அணியில் சுடரொளி ரேஸ் ஏஞ்சல் அணியும், சுடர்ஸ்ரார் அணியும் விளையாடின. இதில் சுடரொளி ரேஸ் ஏஞ்சல் அணி வெற்றியீட்டியது.


அதனையடுத்து  வெற்றியீட்டிய அணிகளுக்கும், ஆட்டநாயகர்கள் ஆகியோருக்கான  பணப்  பரிசில்கள், கேடயங்கள், பதக்கங்கள் விருந்தினர்களால் வழங்கி வைக்கப்பட்டது. 


நிகழ்வின் பிரதம விருந்தினராக  கிராமத்தவரும், கரவெட்டி வைத்தியசாலை பதில் பொறுப்பு வைத்திய அதிகாரியுமான  வைத்திய கலாநிதி வேலாயுதம் கமலநாதன், சிறப்பு விருந்தினர்களாக  ஓய்வு பெற்ற கோட்டக்கல்வி அதிகாரியும், பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினருமான மாரிமுத்து நவநீதமணி, நெல்லியடி கிழக்கு கிராம சேவகர் பத்மசிறி பிரேமிளா, நெல்லியடி கிழக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி சுஜிதா பிரசாந்தன், சமுர்த்தி உத்தியோகத்தர் திருமதி விஜயா குகதாஸ் ஆகியோர்  கலந்துகொண்டனர்.

சுடரொளி விளையாட்டு கழகத்தின் கிரிக்கெட் போட்டியின் இறுதிச்சுற்று. வடமராட்சி நெல்லியடி கிழக்கு புதுத்தோட்டம் சுடரொளி விளையாட்டு கழகம் தனது 50 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடாத்தப்பட்ட கிரிக்கெட் போட்டியின் இறுதிச்சுற்று நேற்று (06) இடம்பெற்றது. கடந்த மே (24) ஆம் திகதி  ஆரம்பமான போட்டியில் கழக வீரர்களுக்கிடையில் நடாத்தப்பட்ட 10 ஓவர் கொண்ட மென்பந்து கிரிக்கெட் போட்டியில்  ஆண்கள் பிரிவில்  ஐந்து அணிகளும், பெண்கள் பிரிவில் மூன்று அணிகளும் விளையாடின. போட்டியின் இறுதிச் சுற்று நேற்று சுடரொளி விளையாட்டுக் கழகத்தின் மைதானத்தில்  கழகத் தலைவர் தலைமையில் ஆரம்பமானது.  இறுதிச் சுற்றில் ஆண்கள் பிரிவில்  ரைசிங் ரைற்றஸ் அணியும், வடமராட்சி சுப்பர்கிங் அணியும் மோதின. இதில் வடமராட்சி சுப்பர்கிங் அணி வெற்றியீட்டியது.இதேவேளை பெண்கள் அணியில் சுடரொளி ரேஸ் ஏஞ்சல் அணியும், சுடர்ஸ்ரார் அணியும் விளையாடின. இதில் சுடரொளி ரேஸ் ஏஞ்சல் அணி வெற்றியீட்டியது.அதனையடுத்து  வெற்றியீட்டிய அணிகளுக்கும், ஆட்டநாயகர்கள் ஆகியோருக்கான  பணப்  பரிசில்கள், கேடயங்கள், பதக்கங்கள் விருந்தினர்களால் வழங்கி வைக்கப்பட்டது. நிகழ்வின் பிரதம விருந்தினராக  கிராமத்தவரும், கரவெட்டி வைத்தியசாலை பதில் பொறுப்பு வைத்திய அதிகாரியுமான  வைத்திய கலாநிதி வேலாயுதம் கமலநாதன், சிறப்பு விருந்தினர்களாக  ஓய்வு பெற்ற கோட்டக்கல்வி அதிகாரியும், பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினருமான மாரிமுத்து நவநீதமணி, நெல்லியடி கிழக்கு கிராம சேவகர் பத்மசிறி பிரேமிளா, நெல்லியடி கிழக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி சுஜிதா பிரசாந்தன், சமுர்த்தி உத்தியோகத்தர் திருமதி விஜயா குகதாஸ் ஆகியோர்  கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement