• Jun 21 2025

மட்டு. கோறளைப்பற்று பிரதேச சபையைக் கைப்பற்றிய கிழக்கு தமிழர் கூட்டமைப்பு!

shanuja / Jun 20th 2025, 8:20 pm
image

மட்டக்களப்பு - கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச சபையின் தவிசாளராக கிழக்கு தமிழர் கூட்டமைப்பைச் சேர்ந்த கதிர்காமத்தம்பி தெய்வேந்திரன்  தெரிவு செய்யப்பட்டுள்ளார். 


கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் ஏ.எல்.முகமட் அஸ்மி முன்னிலையில் சபை தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளர் தெரிவு இரகசிய முறையில் பிரதேச சபை மண்டபத்தில் இன்று  நடைபெற்றது.


வாகரை பிரதேச சபையில் கிழக்கு தமிழர் கூட்டமைப்பு -07,இலங்கை தமிழரசு கட்சி-06.தேசிய மக்கள் சக்தி-03.சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ்-02,ஜக்கிய மக்கள் சக்தி-01 என 19 உறுப்பினர்கள் அங்கத்துவம் பெறுகின்றனர்.


தவிசாளர் தெரிவுக்கு இலங்கை தமிழரசு கட்சி சார்பாக பசுக்கோல் மோகனராசாவும் கிழக்கு தமிழர் கூட்டணி சார்பாக கதிர்காமத்தம்பி தெய்வேந்திரனும் முன்மொழியப்பட்டனர்.  இதன்போது 07 இற்கு 12 என 05 மேலதிக வாக்கால்  கிழக்கு தமிழர் கூட்டமைப்பு ஆட்சியை தனதாக்கி கொண்டது.


இன்றைய தவிசாளர் தெரிவில் தேசிய மக்கள் சக்தி,கிழக்கு தமிழர் கூட்டமைப்பு மற்றும் ஜக்கிய மக்கள் சக்தி என்பன இரகசிய வாக்கெடுப்பிற்கு தங்களது சம்மதத்தினை தெரிவித்திருந்தனர்.


இலங்கை தமிழரசு கட்சி மாத்திரம் பகிரங்க வாக்கெடுப்பிற்கு விரும்பம் தெரிவித்திருந்தது. இருந்த போதிலும் 08 இற்று 11 என்ற அடிப்படையில் 03 மேலதிக வாக்குகாளால் தமிழசு கட்சியை விட ஏனைய கட்சிகள் இரகசிய வாக்கெடுப்பிற்கு சம்மதம் தெரிவித்தமையினை அடுத்து இரகசிய வாக்கெடுப்பின் மூலம் தவிசாளர் தெரிவு இடம்பெற்றது.


இன்றைய அமர்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், வைத்தியர் சிறிநாத் ஆகியோர்களுடன் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பிரதி தவிசாளர் நா.திரவியம் மற்றும் கட்சியின் செயலாளர் பூ.பிரசாந்தன் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்  பிரதி தவிசாளராக இலங்கை தமிழரசு கட்சியைச் சேர்ந்த சன்முகநாதன் ரசிகரன் தெரிவு செய்யப்பட்டார்.

மட்டு. கோறளைப்பற்று பிரதேச சபையைக் கைப்பற்றிய கிழக்கு தமிழர் கூட்டமைப்பு மட்டக்களப்பு - கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச சபையின் தவிசாளராக கிழக்கு தமிழர் கூட்டமைப்பைச் சேர்ந்த கதிர்காமத்தம்பி தெய்வேந்திரன்  தெரிவு செய்யப்பட்டுள்ளார். கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் ஏ.எல்.முகமட் அஸ்மி முன்னிலையில் சபை தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளர் தெரிவு இரகசிய முறையில் பிரதேச சபை மண்டபத்தில் இன்று  நடைபெற்றது.வாகரை பிரதேச சபையில் கிழக்கு தமிழர் கூட்டமைப்பு -07,இலங்கை தமிழரசு கட்சி-06.தேசிய மக்கள் சக்தி-03.சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ்-02,ஜக்கிய மக்கள் சக்தி-01 என 19 உறுப்பினர்கள் அங்கத்துவம் பெறுகின்றனர்.தவிசாளர் தெரிவுக்கு இலங்கை தமிழரசு கட்சி சார்பாக பசுக்கோல் மோகனராசாவும் கிழக்கு தமிழர் கூட்டணி சார்பாக கதிர்காமத்தம்பி தெய்வேந்திரனும் முன்மொழியப்பட்டனர்.  இதன்போது 07 இற்கு 12 என 05 மேலதிக வாக்கால்  கிழக்கு தமிழர் கூட்டமைப்பு ஆட்சியை தனதாக்கி கொண்டது.இன்றைய தவிசாளர் தெரிவில் தேசிய மக்கள் சக்தி,கிழக்கு தமிழர் கூட்டமைப்பு மற்றும் ஜக்கிய மக்கள் சக்தி என்பன இரகசிய வாக்கெடுப்பிற்கு தங்களது சம்மதத்தினை தெரிவித்திருந்தனர்.இலங்கை தமிழரசு கட்சி மாத்திரம் பகிரங்க வாக்கெடுப்பிற்கு விரும்பம் தெரிவித்திருந்தது. இருந்த போதிலும் 08 இற்று 11 என்ற அடிப்படையில் 03 மேலதிக வாக்குகாளால் தமிழசு கட்சியை விட ஏனைய கட்சிகள் இரகசிய வாக்கெடுப்பிற்கு சம்மதம் தெரிவித்தமையினை அடுத்து இரகசிய வாக்கெடுப்பின் மூலம் தவிசாளர் தெரிவு இடம்பெற்றது.இன்றைய அமர்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், வைத்தியர் சிறிநாத் ஆகியோர்களுடன் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பிரதி தவிசாளர் நா.திரவியம் மற்றும் கட்சியின் செயலாளர் பூ.பிரசாந்தன் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்  பிரதி தவிசாளராக இலங்கை தமிழரசு கட்சியைச் சேர்ந்த சன்முகநாதன் ரசிகரன் தெரிவு செய்யப்பட்டார்.

Advertisement

Advertisement

Advertisement