• Jun 13 2025

சாவகச்சேரியில் சைக்கிளில் தெரிவான இருவருக்கு எதிரான வழக்கு நாளை பரிசீலனை!

Thansita / Jun 12th 2025, 6:41 pm
image

சாவகச்சேரி நகர சபை மற்றும் பிரதேச சபைக்கு அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு உறுப்பினர்களாகத் தேர்வான இருவர் அந்தந்த உள்ளூராட்சி சபைகளில் உறுப்பினர்களாகப் பதவியேற்பதற்கு எதிராகத் தடை விதிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில்  வழக்கு தாக்கல் செய்யப்பட்டது

தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் வழக்குகளை நாளை காலை பரிசீலனைக்கு எடுக்க உயர் நீதிமன்றம் இன்று தீர்மானித்தது.

சாவகச்சேரி நகர சபை அதன் நகர பிதாவைத் தெரிவு செய்வதற்காக நாளை பிற்பகலில் கூடவிருக்கையில் ,இந்த மனுக்களை நாளை காலை பரிசீலனைக்கு எடுக்க உயர்நீதிமன்றம் இன்று தீர்மானித்தது.

2025 ஆம் ஆண்டு மே மாதம் 6ஆம் திகதி இடம்பெற்ற உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலின்போது சாவகச்சேரி நகர சபை மற்றும் சாவகச்சேரி பிரதேச சபையில் போட்டியிட்டு உறுப்பினர்களாகத் தேர்வான இருவரும் அந்தந்தச் சபை எல்லைப் பரப்புக்குள் தம்மை ஒரு வாக்காளராகப் பதிவு செய்வதற்குத் தகுதி அற்றவர்கள் என்ற அடிப்படையில் இருவரின் உறுப்புரிமைகளையும் இரத்துச் செய்யத் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உத்தரவிடக் கோரி இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

மனுவைப் பரிசீலித்து உடனடியாக நடைமுறைக்கு வரக் கூடியதாக இடைக்காலத் தடை விதிக்கும் படியும் மனுவில் கோரப்பட்டுள்ளது.

உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த இரண்டு வழக்குகளும் இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவிருந்த போதும் ஏனைய வழக்குகள் இருந்த காரணமாக நாளை காலை இந்த வழக்குகளைப் பரிசீலனைக்கு எடுக்க உயர்நீதிமன்றம்  முடிவு செய்தது.

இந்த வழக்கில் மனுதாரர்கள் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி சுரேன் பெர்னாண்டோவும், எதிர் மனுதாரர்கள் சார்பில் சட்டத்தரணி குமாரவடிவேல் குருபரனும் முன்னிலையாகின்றனர்.

சாவகச்சேரியில் சைக்கிளில் தெரிவான இருவருக்கு எதிரான வழக்கு நாளை பரிசீலனை சாவகச்சேரி நகர சபை மற்றும் பிரதேச சபைக்கு அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு உறுப்பினர்களாகத் தேர்வான இருவர் அந்தந்த உள்ளூராட்சி சபைகளில் உறுப்பினர்களாகப் பதவியேற்பதற்கு எதிராகத் தடை விதிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில்  வழக்கு தாக்கல் செய்யப்பட்டது தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் வழக்குகளை நாளை காலை பரிசீலனைக்கு எடுக்க உயர் நீதிமன்றம் இன்று தீர்மானித்தது.சாவகச்சேரி நகர சபை அதன் நகர பிதாவைத் தெரிவு செய்வதற்காக நாளை பிற்பகலில் கூடவிருக்கையில் ,இந்த மனுக்களை நாளை காலை பரிசீலனைக்கு எடுக்க உயர்நீதிமன்றம் இன்று தீர்மானித்தது.2025 ஆம் ஆண்டு மே மாதம் 6ஆம் திகதி இடம்பெற்ற உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலின்போது சாவகச்சேரி நகர சபை மற்றும் சாவகச்சேரி பிரதேச சபையில் போட்டியிட்டு உறுப்பினர்களாகத் தேர்வான இருவரும் அந்தந்தச் சபை எல்லைப் பரப்புக்குள் தம்மை ஒரு வாக்காளராகப் பதிவு செய்வதற்குத் தகுதி அற்றவர்கள் என்ற அடிப்படையில் இருவரின் உறுப்புரிமைகளையும் இரத்துச் செய்யத் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உத்தரவிடக் கோரி இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மனுவைப் பரிசீலித்து உடனடியாக நடைமுறைக்கு வரக் கூடியதாக இடைக்காலத் தடை விதிக்கும் படியும் மனுவில் கோரப்பட்டுள்ளது.உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த இரண்டு வழக்குகளும் இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவிருந்த போதும் ஏனைய வழக்குகள் இருந்த காரணமாக நாளை காலை இந்த வழக்குகளைப் பரிசீலனைக்கு எடுக்க உயர்நீதிமன்றம்  முடிவு செய்தது.இந்த வழக்கில் மனுதாரர்கள் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி சுரேன் பெர்னாண்டோவும், எதிர் மனுதாரர்கள் சார்பில் சட்டத்தரணி குமாரவடிவேல் குருபரனும் முன்னிலையாகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement