• May 13 2025

யாழில் நடந்த கொடூரம்; பெற்ற பிள்ளைக்கு உணவில் நஞ்சு கலந்து கொடுத்த தந்தை

Chithra / May 13th 2025, 8:26 am
image

 

யாழ்ப்பாணத்தில் தனது சிறு பிள்ளையின் உணவில் கிருமிநாசினியை கலந்து உணவூட்டிய தந்தை தலைமறைவாகியுள்ளார்.

தற்போது குறித்த பிள்ளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரியவருகின்றது. 

யாழ்ப்பாணம் - இளவாலை பொலிஸ் பிரிவிலுள்ள உயரப்புலம் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

6 வயதான குறித்த பிள்ளை உணவு உட்கொண்ட பின் வாயிலிருந்து நுரை வெளியேறியுள்ளது. 

இதையடுத்து குடும்பத்தினர் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். 

அங்கு உணவில் கிருமிநாசினி கலந்து ஊட்டியதாலேயே  பிள்ளை பாதிக்கப்பட்டது தெரியவந்தது.

பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்ததும், உணவூட்டிய தந்தை வீட்டை விட்டு தலைமறைவாகி விட்டார். அவரை கைது செய்ய இளவாலை பொலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


 

யாழில் நடந்த கொடூரம்; பெற்ற பிள்ளைக்கு உணவில் நஞ்சு கலந்து கொடுத்த தந்தை  யாழ்ப்பாணத்தில் தனது சிறு பிள்ளையின் உணவில் கிருமிநாசினியை கலந்து உணவூட்டிய தந்தை தலைமறைவாகியுள்ளார்.தற்போது குறித்த பிள்ளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரியவருகின்றது. யாழ்ப்பாணம் - இளவாலை பொலிஸ் பிரிவிலுள்ள உயரப்புலம் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 6 வயதான குறித்த பிள்ளை உணவு உட்கொண்ட பின் வாயிலிருந்து நுரை வெளியேறியுள்ளது. இதையடுத்து குடும்பத்தினர் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். அங்கு உணவில் கிருமிநாசினி கலந்து ஊட்டியதாலேயே  பிள்ளை பாதிக்கப்பட்டது தெரியவந்தது.பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்ததும், உணவூட்டிய தந்தை வீட்டை விட்டு தலைமறைவாகி விட்டார். அவரை கைது செய்ய இளவாலை பொலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

Advertisement

Advertisement

Advertisement