கொழும்பிலிருந்து சென்னைக்கு சென்ற ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த 45 வயது பயணி திடீரென மாரடைப்பு ஏற்பட்டு விமானத்தில் நடுவானில் உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஆந்திராவைச் சேர்ந்த கமல் பாஷா என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.
விமானம் பயணித்துக் கொண்டிருந்தபோது நெஞ்சு வலிப்பதாக விமானப் பணிப்பெண்களிடம் குறித்த நபர் தெரிவித்துள்ளார்.
விமானப் பணியாளர்கள் உடனடியாக முதலுதவி அளித்து விமானியை எச்சரித்தனர்.
பின்னர் விமானி அவசர உதவிக்காக சென்னை விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டைத் தொடர்பு கொண்டார்.
முயற்சிகள் இருந்தபோதிலும், பயணியை உயிர்ப்பிக்க முடியவில்லை.
விமான நிலைய பொலிஸார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததாக தெரியவருகின்றது.
கொழும்பிலிருந்து சென்னை பயணித்த விமானத்தில் பதற்றம்- நடுவானில் நடந்த துயர சம்பவம் கொழும்பிலிருந்து சென்னைக்கு சென்ற ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த 45 வயது பயணி திடீரென மாரடைப்பு ஏற்பட்டு விமானத்தில் நடுவானில் உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஆந்திராவைச் சேர்ந்த கமல் பாஷா என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது. விமானம் பயணித்துக் கொண்டிருந்தபோது நெஞ்சு வலிப்பதாக விமானப் பணிப்பெண்களிடம் குறித்த நபர் தெரிவித்துள்ளார்.விமானப் பணியாளர்கள் உடனடியாக முதலுதவி அளித்து விமானியை எச்சரித்தனர்.பின்னர் விமானி அவசர உதவிக்காக சென்னை விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டைத் தொடர்பு கொண்டார். முயற்சிகள் இருந்தபோதிலும், பயணியை உயிர்ப்பிக்க முடியவில்லை.விமான நிலைய பொலிஸார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததாக தெரியவருகின்றது.