கன்னட மொழி குறித்த தனது கருத்துக்கு நடிகர் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க மறுத்ததை அடுத்து, கர்நாடகாவில் "தக் லைஃப்" திரைப்படத்தின் வெளியீடு ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
"தமிழில் இருந்து பிறந்தது கன்னடம்" என 'தக் லைஃப்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் பேசியதற்கு கர்நாடகாவில் பெரும் எதிர்ப்பு எழுந்தது.
வரும் ஜூன் 5ஆம் தேதி, தக் லைஃப் திரைப்படம் கர்நாடகாவிலும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பாக இதுகுறித்து பேசிய கர்நாடகாவின் கன்னடம் மற்றும் கலாச்சார அமைச்சர்,
"கமல்ஹாசனின் கருத்தால் கன்னட மக்களின் மனம் புண்பட்டுள்ளது. இதற்காக அவர் மன்னிப்பு கேட்காவிட்டால் அவரின் படத்தைக் கர்நாடகாவில் தடை செய்வோம்" எனத் தெரிவித்தார்.
கர்நாடக முதல்வர் சித்தராமையா, பாஜக மாநில தலைவர் விஜயேந்திரா உள்ளிட்டோரும் கண்டனம் தெரிவித்தனர்.
கடந்த வெள்ளிக்கிழமை அன்று, கமல்ஹாசன் மன்னிப்புக் கேட்காவிட்டால், ஜூன் 5-ம் தேதி வெளியாகவுள்ள கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தினை புறக்கணிப்போம் என்று கர்நாடக திரைப்பட வர்த்தக சபை அறிவித்தது.
அதற்கு பதிலளித்த நடிகர் கமல்ஹாசன், "இதற்கு முன்பும் மிரட்டப்பட்டிருக்கிறேன். நான் தவறு செய்திருந்தால், மன்னிப்பு கேட்பேன். இல்லையென்றால், நான் மன்னிப்பு கேட்க மாட்டேன். இது என்னுடைய வாழ்க்கை முறை, தயவுசெய்து இதில் தலையிடாதீர்கள்." என்று கூறியிருந்தார்.
இதையடுத்து 'தக் லைஃப்' படத்தின் தயாரிப்பு நிறுவனம் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், படத்தை கர்நாடகாவில் வெளியிடுவதற்கு பொலிஸ்ஸ் பாதுகாப்பு கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
"கர்நாடகாவில் தக் லைஃப் படத்தைத் திரையிட தடை விதித்திருப்பது சட்டத்துக்கு எதிரானது.
எனவே, தடையை நீக்கி, திரையிட அனுமதிக்க வேண்டும். திரையரங்கங்களுக்கு போதிய பொலிஸ் பாதுகாப்பு வழங்குமாறு கர்நாடக அரசுக்கும், பொலிஸ்ஸ்க்கும் உரிய வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும்" என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
லைவ் லா (Live Law) இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள தகவல்களின் படி,
இந்த மனுவை இன்று காலை கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதி எம். நாகபிரசன்னா விசாரித்தார். கமல்ஹாசன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் தியான் சின்னப்பா ஆஜரானார்.
அப்போது பேசிய நீதிபதி எம். நாகபிரசன்னா, "இந்த நாடு மொழியின் அடிப்படையில் பிரிக்கப்பட்டிருக்கிறது. பொது வெளியில் இருக்கும் ஒரு நபர் இவ்வாறு பேசக் கூடாது." எனக் கூறினார்.
மேலும், "கர்நாடகா மக்கள் மன்னிப்பை மட்டுமே கேட்கிறார்கள்.
தற்போது நீங்கள் பாதுகாப்புத் தேடி இங்கே வந்திருக்கிறீர்கள். தற்போதைய சூழ்நிலை கமல்ஹாசனால் உருவாக்கப்பட்டது. மேலும், அவர் மன்னிப்பு கேட்க முடியாது என்று கூறியுள்ளார்.
நீங்கள் கர்நாடக மக்களின் உணர்வுகளை குறைத்து மதிப்பிட்டுள்ளீர்கள்.
எந்த அடிப்படையில் இதைச் செய்தீர்கள்? நீங்கள் வரலாற்றாய்வாளரா அல்லது மொழியியல் அறிஞரா?" என்று கேள்வி எழுப்பிய நீதிபதி எம். நாகபிரசன்னா, 'கர்நாடக மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தியதால், தன்னுடைய கருத்துக்களுக்கு கமல்ஹாசன் மன்னிப்பு கேட்கவேண்டுமென' அறிவுறுத்தினார்.
மீண்டும் மதிய வேளையில் நீதிமன்றம் கூடியபோது,
நடிகர் கமல்ஹாசனின் வழக்கறிஞர் தியான் சின்னப்பா, கர்நாடகா திரைப்பட வர்த்தக சபைக்கு கமல்ஹாசன் அனுப்பிய கடிதத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.
கர்நாடகாவில் தக் லைஃப் தற்போது வெளியாகாது கன்னட மொழி குறித்த தனது கருத்துக்கு நடிகர் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க மறுத்ததை அடுத்து, கர்நாடகாவில் "தக் லைஃப்" திரைப்படத்தின் வெளியீடு ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது."தமிழில் இருந்து பிறந்தது கன்னடம்" என 'தக் லைஃப்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் பேசியதற்கு கர்நாடகாவில் பெரும் எதிர்ப்பு எழுந்தது.வரும் ஜூன் 5ஆம் தேதி, தக் லைஃப் திரைப்படம் கர்நாடகாவிலும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பாக இதுகுறித்து பேசிய கர்நாடகாவின் கன்னடம் மற்றும் கலாச்சார அமைச்சர், "கமல்ஹாசனின் கருத்தால் கன்னட மக்களின் மனம் புண்பட்டுள்ளது. இதற்காக அவர் மன்னிப்பு கேட்காவிட்டால் அவரின் படத்தைக் கர்நாடகாவில் தடை செய்வோம்" எனத் தெரிவித்தார்.கர்நாடக முதல்வர் சித்தராமையா, பாஜக மாநில தலைவர் விஜயேந்திரா உள்ளிட்டோரும் கண்டனம் தெரிவித்தனர்.கடந்த வெள்ளிக்கிழமை அன்று, கமல்ஹாசன் மன்னிப்புக் கேட்காவிட்டால், ஜூன் 5-ம் தேதி வெளியாகவுள்ள கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தினை புறக்கணிப்போம் என்று கர்நாடக திரைப்பட வர்த்தக சபை அறிவித்தது.அதற்கு பதிலளித்த நடிகர் கமல்ஹாசன், "இதற்கு முன்பும் மிரட்டப்பட்டிருக்கிறேன். நான் தவறு செய்திருந்தால், மன்னிப்பு கேட்பேன். இல்லையென்றால், நான் மன்னிப்பு கேட்க மாட்டேன். இது என்னுடைய வாழ்க்கை முறை, தயவுசெய்து இதில் தலையிடாதீர்கள்." என்று கூறியிருந்தார்.இதையடுத்து 'தக் லைஃப்' படத்தின் தயாரிப்பு நிறுவனம் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், படத்தை கர்நாடகாவில் வெளியிடுவதற்கு பொலிஸ்ஸ் பாதுகாப்பு கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது."கர்நாடகாவில் தக் லைஃப் படத்தைத் திரையிட தடை விதித்திருப்பது சட்டத்துக்கு எதிரானது. எனவே, தடையை நீக்கி, திரையிட அனுமதிக்க வேண்டும். திரையரங்கங்களுக்கு போதிய பொலிஸ் பாதுகாப்பு வழங்குமாறு கர்நாடக அரசுக்கும், பொலிஸ்ஸ்க்கும் உரிய வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும்" என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.லைவ் லா (Live Law) இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள தகவல்களின் படி, இந்த மனுவை இன்று காலை கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதி எம். நாகபிரசன்னா விசாரித்தார். கமல்ஹாசன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் தியான் சின்னப்பா ஆஜரானார்.அப்போது பேசிய நீதிபதி எம். நாகபிரசன்னா, "இந்த நாடு மொழியின் அடிப்படையில் பிரிக்கப்பட்டிருக்கிறது. பொது வெளியில் இருக்கும் ஒரு நபர் இவ்வாறு பேசக் கூடாது." எனக் கூறினார்.மேலும், "கர்நாடகா மக்கள் மன்னிப்பை மட்டுமே கேட்கிறார்கள். தற்போது நீங்கள் பாதுகாப்புத் தேடி இங்கே வந்திருக்கிறீர்கள். தற்போதைய சூழ்நிலை கமல்ஹாசனால் உருவாக்கப்பட்டது. மேலும், அவர் மன்னிப்பு கேட்க முடியாது என்று கூறியுள்ளார்.நீங்கள் கர்நாடக மக்களின் உணர்வுகளை குறைத்து மதிப்பிட்டுள்ளீர்கள். எந்த அடிப்படையில் இதைச் செய்தீர்கள் நீங்கள் வரலாற்றாய்வாளரா அல்லது மொழியியல் அறிஞரா" என்று கேள்வி எழுப்பிய நீதிபதி எம். நாகபிரசன்னா, 'கர்நாடக மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தியதால், தன்னுடைய கருத்துக்களுக்கு கமல்ஹாசன் மன்னிப்பு கேட்கவேண்டுமென' அறிவுறுத்தினார்.மீண்டும் மதிய வேளையில் நீதிமன்றம் கூடியபோது, நடிகர் கமல்ஹாசனின் வழக்கறிஞர் தியான் சின்னப்பா, கர்நாடகா திரைப்பட வர்த்தக சபைக்கு கமல்ஹாசன் அனுப்பிய கடிதத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.