வடமாகாணத்தின் முல்லைத்தீவு, மன்னார், யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களிலும், கிழக்கு மாகாணத்திலும் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் தீவிரம் பெற்றிருப்பதை சுட்டிக்காட்டிய வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன்,
இவ்வாறாக சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளில் ஈடுபடும் திருட்டுக்கும்பலின் கொட்டத்தை அடக்கி மீனவமக்களை காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.
பாராளுமன்றில் 05.06.2025 இன்று பாராளுமன்ற உறுப்பினர் நிஷாம் காரியப்பர் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவது தொடர்பிலான சபை ஒத்திவைப்பு வேளைப் பிரேரணை ஒன்றினை முன்மொழிந்தார்.
இந்நிலையில் குறித்த சபை ஒத்திவைப்புவேளைப் பிரேரணையில் பங்கேற்று கருத்துத்தெரிவிக்கும்போதே பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அதேவேளை முல்லைத்தீவு கடற்றொழில் நீரியல்வளத்திணைக்களத்தில் காணப்படும் ஆளணிப் பற்றாக்குறையை நிவர்த்திசெய்யுமாறு கடற்றொழில் அமைச்சருக்கு ஏற்கனவே தாம் எழுத்துமூலம் கோரிக்கை முன்வைத்தும், அதுதொடர்பில் இதுவரையில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதையும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனால் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.
சட்டவிரோதமான கடற்றொழில் செயற்பாடுகள் மிகத் தீவிரமாக முல்லைத்தீவு மாவட்டத்திலும் இடம்பெற்றுவருகின்றது.
கடற்றழொல் நீரியல்வளத் திணைக்களத்தின் செயல்கள் கடுமையாக இல்லை. கடற்றொழில் அமைச்சரும் இத்தகைய சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளுக்கு நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்துருந்தும், இதுவரை நிலமைகள் சீராகவில்லை.
மீனவமக்களோ மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். மீனவக்குடும்பங்கள் தமது பிள்ளைகளின் கல்விச்செயற்பாடு உட்பட, தமது அன்றாட வாழ்வாதாரத்தைக்கொண்டுசெல்லமுடியாமல் திண்டாடுகின்றனர்.
சட்டவிரோதிகள் ஏதேனும் செல்வாக்குகளைப் பயன்படுத்தித்தான் இவ்வாறான அத்துமீறிய கடற்றொழில் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனரோ என்ற ஐயப்பாடு மீனவமக்கள் மத்தியில் காணப்படுகின்றது. ஏன் எனில் அந்த அளவிற்கு சட்டவிரோத கடற்றொழிலாளர்களால் முல்லைத்தீவுக் கடல்வளம் சூறையாடப்படுகின்றது.
இந் நிலையில் முல்லைத்தீவு கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களத்தாலும் இத்தகைய சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தமுடியவில்லை.
முல்லைத்தீவு கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களம் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த தீவிரமான முயற்சிகள் எதனையும் எடுக்கவில்லை என்பதையும் சுட்டிக்காட்டவிரும்புகின்றேன்.
இந்நிலையில் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளை நாமாவது கட்டுப்படுத்துவோம் என்னும் நோக்கில் முல்லைத்தீவு கள்ளப்பாடுப் பகுதியிலிருந்து மீனவமக்கள் தாமாக ஒன்றிணைந்து, சட்டவிரோத கடற்றொழில் செயற்பாட்டில் ஈடுபடுபவர்களின் ஆறுபடகுகளைப் பிடித்திருந்தனர்.
அதேவேளை தமாக இணைந்து இத்தகைய சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கக்கூடாது. கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களமும், கடற்படையும் இணைந்துதான் நடவடிக்கை மேற்கொள்ளமுடியுமெனவும் இதன்போது மீனவமக்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தஅறிவுறுத்தலை ஏற்றுக்கொள்கின்றோம். இருப்பினும் முல்லைத்தீவு கடற்றொழில் நீரியல்வளத்திணைக்களமும் தமது ஆளணிப்பற்றாக்குறையை தொடர்ந்து எம்மிடம் சொல்லிக்கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் நானும் முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத்திணைக்களத்தில் காணப்படும் ஆளணிப்பற்றாக்குறையை எழுத்துமூலமாக கடற்றொழில் அமைச்சரிடம் கையளித்துள்ளேன். இதுவரை அந்த ஆளணிப்பற்றாக்குறையை நிவர்த்திசெய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. இத்தகையசூழலில் மீனவசமூகம் மிகமோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறான சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் முல்லைத்தீவு மாவட்டத்தில் மாத்திரமல்ல கிளிநொச்சி, மன்னார், யாழ்ப்பாணம் மாவட்டங்களிலும் மற்றும், கிழக்கு மாகாணத்திலும் சட்டவிரோதிகளால் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
எனவே உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும். சட்டவிரோத கடற்றொழில் செயற்பாட்டில் ஈடுபடும் திருட்டுக்கும்பல்களின் கொட்டத்தை அடக்கி, சட்டவிரோதிகளிடமிருந்து எமது மீனவமக்களைக் காப்பாற்றுங்கள் என்றுதான் கேட்கின்றோம் - என்றார்.
சட்டவிரோத திருட்டுக்கும்பலின் கொட்டத்தை அடக்கி, மீனவமக்களைக் காப்பாற்றுங்கள் - ரவிகரன் எம்.பி வலியுறுத்து வடமாகாணத்தின் முல்லைத்தீவு, மன்னார், யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களிலும், கிழக்கு மாகாணத்திலும் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் தீவிரம் பெற்றிருப்பதை சுட்டிக்காட்டிய வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், இவ்வாறாக சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளில் ஈடுபடும் திருட்டுக்கும்பலின் கொட்டத்தை அடக்கி மீனவமக்களை காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.பாராளுமன்றில் 05.06.2025 இன்று பாராளுமன்ற உறுப்பினர் நிஷாம் காரியப்பர் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவது தொடர்பிலான சபை ஒத்திவைப்பு வேளைப் பிரேரணை ஒன்றினை முன்மொழிந்தார். இந்நிலையில் குறித்த சபை ஒத்திவைப்புவேளைப் பிரேரணையில் பங்கேற்று கருத்துத்தெரிவிக்கும்போதே பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அதேவேளை முல்லைத்தீவு கடற்றொழில் நீரியல்வளத்திணைக்களத்தில் காணப்படும் ஆளணிப் பற்றாக்குறையை நிவர்த்திசெய்யுமாறு கடற்றொழில் அமைச்சருக்கு ஏற்கனவே தாம் எழுத்துமூலம் கோரிக்கை முன்வைத்தும், அதுதொடர்பில் இதுவரையில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதையும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனால் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,மீனவர்களின் வாழ்வாதாரங்கள் மற்றும், கடல்வளங்கள் கொள்ளையடிக்கப்படுகின்றது.சட்டவிரோதமான கடற்றொழில் செயற்பாடுகள் மிகத் தீவிரமாக முல்லைத்தீவு மாவட்டத்திலும் இடம்பெற்றுவருகின்றது.கடற்றழொல் நீரியல்வளத் திணைக்களத்தின் செயல்கள் கடுமையாக இல்லை. கடற்றொழில் அமைச்சரும் இத்தகைய சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளுக்கு நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்துருந்தும், இதுவரை நிலமைகள் சீராகவில்லை. மீனவமக்களோ மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். மீனவக்குடும்பங்கள் தமது பிள்ளைகளின் கல்விச்செயற்பாடு உட்பட, தமது அன்றாட வாழ்வாதாரத்தைக்கொண்டுசெல்லமுடியாமல் திண்டாடுகின்றனர்.சட்டவிரோதிகள் ஏதேனும் செல்வாக்குகளைப் பயன்படுத்தித்தான் இவ்வாறான அத்துமீறிய கடற்றொழில் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனரோ என்ற ஐயப்பாடு மீனவமக்கள் மத்தியில் காணப்படுகின்றது. ஏன் எனில் அந்த அளவிற்கு சட்டவிரோத கடற்றொழிலாளர்களால் முல்லைத்தீவுக் கடல்வளம் சூறையாடப்படுகின்றது.இந் நிலையில் முல்லைத்தீவு கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களத்தாலும் இத்தகைய சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தமுடியவில்லை. முல்லைத்தீவு கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களம் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த தீவிரமான முயற்சிகள் எதனையும் எடுக்கவில்லை என்பதையும் சுட்டிக்காட்டவிரும்புகின்றேன்.இந்நிலையில் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளை நாமாவது கட்டுப்படுத்துவோம் என்னும் நோக்கில் முல்லைத்தீவு கள்ளப்பாடுப் பகுதியிலிருந்து மீனவமக்கள் தாமாக ஒன்றிணைந்து, சட்டவிரோத கடற்றொழில் செயற்பாட்டில் ஈடுபடுபவர்களின் ஆறுபடகுகளைப் பிடித்திருந்தனர். அதன்பின்புதான் கடற்றொழில் திணைக்களமும் இதில் இணைந்துகொண்டது. அதன்பின்னர் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாட்டில் ஈடுபட்டவர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு அவர்களுக்கெதிராக சட்டநடவடிக்கைஎடுக்கப்பட்டது.அதேவேளை தமாக இணைந்து இத்தகைய சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கக்கூடாது. கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களமும், கடற்படையும் இணைந்துதான் நடவடிக்கை மேற்கொள்ளமுடியுமெனவும் இதன்போது மீனவமக்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.இந்தஅறிவுறுத்தலை ஏற்றுக்கொள்கின்றோம். இருப்பினும் முல்லைத்தீவு கடற்றொழில் நீரியல்வளத்திணைக்களமும் தமது ஆளணிப்பற்றாக்குறையை தொடர்ந்து எம்மிடம் சொல்லிக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் நானும் முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத்திணைக்களத்தில் காணப்படும் ஆளணிப்பற்றாக்குறையை எழுத்துமூலமாக கடற்றொழில் அமைச்சரிடம் கையளித்துள்ளேன். இதுவரை அந்த ஆளணிப்பற்றாக்குறையை நிவர்த்திசெய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. இத்தகையசூழலில் மீனவசமூகம் மிகமோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.இவ்வாறான சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் முல்லைத்தீவு மாவட்டத்தில் மாத்திரமல்ல கிளிநொச்சி, மன்னார், யாழ்ப்பாணம் மாவட்டங்களிலும் மற்றும், கிழக்கு மாகாணத்திலும் சட்டவிரோதிகளால் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.எனவே உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும். சட்டவிரோத கடற்றொழில் செயற்பாட்டில் ஈடுபடும் திருட்டுக்கும்பல்களின் கொட்டத்தை அடக்கி, சட்டவிரோதிகளிடமிருந்து எமது மீனவமக்களைக் காப்பாற்றுங்கள் என்றுதான் கேட்கின்றோம் - என்றார்.