• May 05 2025

மாத்தறை சிறைச்சாலையில் விசேட சோதனை - தொலைபேசிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கைப்பற்றல்

Chithra / May 5th 2025, 11:43 am
image

 

மாத்தறை சிறைச்சாலையில் கடந்த சனிக்கிழமை (03) மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது 14 கையடக்கத் தொலைபேசிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மாத்தறை  சிறைச்சாலையில் உள்ள சிறைக்கூண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே இந்த பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த சோதனை நடவடிக்கையில், 14 கையடக்கத் தொலைபேசிகள் , 05 கைவிலங்குகள் மற்றும் 04 கைவிலங்கு சாவிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சிறைச்சாலை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

மாத்தறை சிறைச்சாலையில் விசேட சோதனை - தொலைபேசிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கைப்பற்றல்  மாத்தறை சிறைச்சாலையில் கடந்த சனிக்கிழமை (03) மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது 14 கையடக்கத் தொலைபேசிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மாத்தறை  சிறைச்சாலையில் உள்ள சிறைக்கூண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே இந்த பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.இந்த சோதனை நடவடிக்கையில், 14 கையடக்கத் தொலைபேசிகள் , 05 கைவிலங்குகள் மற்றும் 04 கைவிலங்கு சாவிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சிறைச்சாலை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement