ராஜகிரிய பகுதியிலுள்ள பிரபலமான கடைகளில் போலியாகத் தயாரிக்கப்பட்ட வாசனைத் திரவியங்கள் விற்பனை செய்யப்படுகின்றன என்பது தொடர்பில் நுகர்வோர் விவகார ஆணையகம் சோதனை நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது.
அவுஸ்திரேலியா மற்றும் ஐக்கிய இராச்சியத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதாகத் தெரிவித்து, ஒன்லைனிலும், பிரபலமான சில்லறை விற்பனை நிலையங்கள் மூலமாகவும் வாசனைத் திரவியங்கள் விற்பனை செய்யப்படுவதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
அதனையடுத்து ராஜகிரியவில் உள்ள இரண்டு பிரபல நிறுவனங்களில் கடந்த (6) ஆம் திகதி நுகர்வோர் விவகார ஆணையம் (CAA) சோதனையை மேற்கொண்டது.
இருப்பினும், இந்த தயாரிப்புகளின் தோற்றத்தை சரிபார்க்க விற்பனையாளர்களால் செல்லுபடியாகும் ஆவணங்களை சமர்ப்பிக்க முடியவில்லை.
மேலும் விசாரணைகள் நடந்து வருவதாகவும், விசாரணை முடிவில் இது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நுகர்வோர் விவகார ஆணையகம் உறுதிப்படுத்தியுள்ளது.
போலியான வாசனை திரவியங்கள் விற்பனை; நுகர்வோர் விவகார ஆணையம் சோதனை. ராஜகிரிய பகுதியிலுள்ள பிரபலமான கடைகளில் போலியாகத் தயாரிக்கப்பட்ட வாசனைத் திரவியங்கள் விற்பனை செய்யப்படுகின்றன என்பது தொடர்பில் நுகர்வோர் விவகார ஆணையகம் சோதனை நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது. அவுஸ்திரேலியா மற்றும் ஐக்கிய இராச்சியத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதாகத் தெரிவித்து, ஒன்லைனிலும், பிரபலமான சில்லறை விற்பனை நிலையங்கள் மூலமாகவும் வாசனைத் திரவியங்கள் விற்பனை செய்யப்படுவதாக செய்திகள் வெளியாகியிருந்தன. அதனையடுத்து ராஜகிரியவில் உள்ள இரண்டு பிரபல நிறுவனங்களில் கடந்த (6) ஆம் திகதி நுகர்வோர் விவகார ஆணையம் (CAA) சோதனையை மேற்கொண்டது. இருப்பினும், இந்த தயாரிப்புகளின் தோற்றத்தை சரிபார்க்க விற்பனையாளர்களால் செல்லுபடியாகும் ஆவணங்களை சமர்ப்பிக்க முடியவில்லை.மேலும் விசாரணைகள் நடந்து வருவதாகவும், விசாரணை முடிவில் இது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நுகர்வோர் விவகார ஆணையகம் உறுதிப்படுத்தியுள்ளது.