• Jul 28 2026

அவுஸ்திரேலிய ரயிலில் பயணி மீது கொடூர தாக்குதல் - இலங்கை இளைஞருக்கு சிறை

Chithra / Jul 28th 2026, 6:57 pm
image


அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் ஓடும் ரயிலில் தனியாகப் பயணம் செய்த நபர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த 22 வயதான சரணீஸ் சிவகுமாருக்கு நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது.


கடந்த ஏப்ரல் 25ஆம் திகதி கிளீவ்லேண்ட் வழித்தட ரயிலில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.


சரணீஸ் சிவகுமார் மற்றும் அவரது நண்பரான பேட்லி மாவினே ஆகிய இருவருக்கும் ரயிலில் தனியாகப் பயணம் செய்த நபர் ஒருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் பின்னர் கைக்கலப்பாக மாறியுள்ளது.


இதன்போது இருவரும் இணைந்து குறித்த நபரின் முகம் மற்றும் தலையில் சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.


பாதிக்கப்பட்ட நபர் ரயிலில் இருந்து இறங்க முயன்றபோது, மூடப்பட்ட கதவுகளின் ஊடாக அவரை இழுத்துத் தடுத்து வைத்ததாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.


இதனைத் தொடர்ந்து அவரது பையைப் பறிக்க முயன்றபோது, சரணீஸ் சிவகுமார் கண்ணாடிப் பொருளொன்றினால் அவரது தலையில் பலமாகத் தாக்கியுள்ளார்.


இதனால் பலத்த காயமடைந்து இரத்தம் சிந்திய பாதிக்கப்பட்ட நபர், இந்த அதிர்ச்சிகரமான சம்பவத்துக்குப் பின்னர் குயின்ஸ்லாந்து மாநிலத்தை விட்டு வெளியேறியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.


கிளீவ்லேண்ட் நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது, தான் தற்காப்புக்காகவே இவ்வாறு நடந்துகொண்டதாக சரணீஸ் சிவகுமார் தெரிவித்துள்ளார்.


எனினும், அவரது வாதத்தை நிராகரித்த நீதவான் டெபோரா வஸ்டா, தற்காப்பு என்பது வேறு என்றும், ஒருவரின் தலையில் தாக்குவது தற்காப்பாகாது என்றும் குறிப்பிட்டதுடன், இது அப்பாவி ஒருவர் மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதல் எனக் கடுமையாக விமர்சித்துள்ளார்.


இந்தக் குற்றத்துக்கான அதிகபட்ச தண்டனைக் காலம் 12 மாதங்கள் என்பதால், சரணீஸ் சிவகுமாருக்கு 8 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


அவர் ஏற்கனவே 89 நாட்கள் விளக்கமறியலில் இருந்ததைக் கருத்திற்கொண்டு, எஞ்சிய தண்டனைக் காலத்தை கண்காணிப்பின் கீழ் பிணையில் கழிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.


சரணீஸ் சிவகுமார் சிறுவயதிலேயே அவுஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்தவர் என்பதுடன், கடந்த ஆண்டு அவுஸ்திரேலியக் குடியுரிமையைப் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மெல்போர்னில் இருந்து வேலை தேடி பிரிஸ்பேனுக்கு வந்த அவர், சம்பவம் இடம்பெற்ற காலப்பகுதியில் வீடற்றவராகவும் வேலையற்றவராகவும் இருந்துள்ளார்.


இதேவேளை, இந்தத் தாக்குதலில் தொடர்புடைய மற்றைய குற்றவாளியான பேட்லி மாவினேவுக்கு ஏற்கனவே 10 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


அவுஸ்திரேலிய ரயிலில் பயணி மீது கொடூர தாக்குதல் - இலங்கை இளைஞருக்கு சிறை அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் ஓடும் ரயிலில் தனியாகப் பயணம் செய்த நபர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த 22 வயதான சரணீஸ் சிவகுமாருக்கு நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது.கடந்த ஏப்ரல் 25ஆம் திகதி கிளீவ்லேண்ட் வழித்தட ரயிலில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.சரணீஸ் சிவகுமார் மற்றும் அவரது நண்பரான பேட்லி மாவினே ஆகிய இருவருக்கும் ரயிலில் தனியாகப் பயணம் செய்த நபர் ஒருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் பின்னர் கைக்கலப்பாக மாறியுள்ளது.இதன்போது இருவரும் இணைந்து குறித்த நபரின் முகம் மற்றும் தலையில் சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.பாதிக்கப்பட்ட நபர் ரயிலில் இருந்து இறங்க முயன்றபோது, மூடப்பட்ட கதவுகளின் ஊடாக அவரை இழுத்துத் தடுத்து வைத்ததாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து அவரது பையைப் பறிக்க முயன்றபோது, சரணீஸ் சிவகுமார் கண்ணாடிப் பொருளொன்றினால் அவரது தலையில் பலமாகத் தாக்கியுள்ளார்.இதனால் பலத்த காயமடைந்து இரத்தம் சிந்திய பாதிக்கப்பட்ட நபர், இந்த அதிர்ச்சிகரமான சம்பவத்துக்குப் பின்னர் குயின்ஸ்லாந்து மாநிலத்தை விட்டு வெளியேறியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.கிளீவ்லேண்ட் நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது, தான் தற்காப்புக்காகவே இவ்வாறு நடந்துகொண்டதாக சரணீஸ் சிவகுமார் தெரிவித்துள்ளார்.எனினும், அவரது வாதத்தை நிராகரித்த நீதவான் டெபோரா வஸ்டா, தற்காப்பு என்பது வேறு என்றும், ஒருவரின் தலையில் தாக்குவது தற்காப்பாகாது என்றும் குறிப்பிட்டதுடன், இது அப்பாவி ஒருவர் மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதல் எனக் கடுமையாக விமர்சித்துள்ளார்.இந்தக் குற்றத்துக்கான அதிகபட்ச தண்டனைக் காலம் 12 மாதங்கள் என்பதால், சரணீஸ் சிவகுமாருக்கு 8 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.அவர் ஏற்கனவே 89 நாட்கள் விளக்கமறியலில் இருந்ததைக் கருத்திற்கொண்டு, எஞ்சிய தண்டனைக் காலத்தை கண்காணிப்பின் கீழ் பிணையில் கழிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.சரணீஸ் சிவகுமார் சிறுவயதிலேயே அவுஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்தவர் என்பதுடன், கடந்த ஆண்டு அவுஸ்திரேலியக் குடியுரிமையைப் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மெல்போர்னில் இருந்து வேலை தேடி பிரிஸ்பேனுக்கு வந்த அவர், சம்பவம் இடம்பெற்ற காலப்பகுதியில் வீடற்றவராகவும் வேலையற்றவராகவும் இருந்துள்ளார்.இதேவேளை, இந்தத் தாக்குதலில் தொடர்புடைய மற்றைய குற்றவாளியான பேட்லி மாவினேவுக்கு ஏற்கனவே 10 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement