• Jun 12 2025

சிறைச்சாலை வைத்தியர்களின் முறைகேடுகள் - விசாரணை நடத்துமாறு கோரிக்கை

Chithra / Jun 11th 2025, 9:31 am
image


சிறைச்சாலை வைத்தியசாலைகளில் உள்ள வைத்தியர்கள் தங்கள் சலுகைகளைத் தவறாகப் பயன்படுத்தி, முறைகேடுகளில் ஈடுபட்டிருந்தால் அவர்கள் மீது முறையான விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

வைத்திய மற்றும் சிவில் உரிமைகளுக்கான வைத்தியர்களின் தொழிற்சங்க கூட்டணியின் தலைவர் வைத்தியர் சமல் சஞ்சீவ இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். 

அரசியல் தலைவர்கள் மற்றும் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள சிரேஷ்ட அதிகாரிகள் உள்ளிட்டவர்களுக்கு, சிறைச்சாலை வைத்தியசாலைகளில் விசேட சலுகைகள் வழங்கப்படுவதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. 

இந்த விசேட வசதிகளை வழங்குவதற்காக, தவறான வைத்திய அறிக்கைகளும் சிறைச்சாலை வைத்தியசாலைகளில் வழங்கப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. 

இந்தநிலையில், குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் வைத்தியர்கள் மீது, நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வைத்தியர் சமல் சஞ்சீவ கோரியுள்ளார்.

சிறைச்சாலை வைத்தியர்களின் முறைகேடுகள் - விசாரணை நடத்துமாறு கோரிக்கை சிறைச்சாலை வைத்தியசாலைகளில் உள்ள வைத்தியர்கள் தங்கள் சலுகைகளைத் தவறாகப் பயன்படுத்தி, முறைகேடுகளில் ஈடுபட்டிருந்தால் அவர்கள் மீது முறையான விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வைத்திய மற்றும் சிவில் உரிமைகளுக்கான வைத்தியர்களின் தொழிற்சங்க கூட்டணியின் தலைவர் வைத்தியர் சமல் சஞ்சீவ இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். அரசியல் தலைவர்கள் மற்றும் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள சிரேஷ்ட அதிகாரிகள் உள்ளிட்டவர்களுக்கு, சிறைச்சாலை வைத்தியசாலைகளில் விசேட சலுகைகள் வழங்கப்படுவதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இந்த விசேட வசதிகளை வழங்குவதற்காக, தவறான வைத்திய அறிக்கைகளும் சிறைச்சாலை வைத்தியசாலைகளில் வழங்கப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில், குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் வைத்தியர்கள் மீது, நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வைத்தியர் சமல் சஞ்சீவ கோரியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement