மட்டக்களப்பு சவுக்கடி கடற்கரைப் பகுதியில் இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்டவர், ஏறாவூர் செங்கலடிப் பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நபர் ஏறாவூர் பகுதியிலுள்ள உறவினரது தங்க ஆபரண விற்பனை நிலையம் ஒன்றில் பணி புரிந்து வந்துள்ளார்.
குறித்த இளைஞர் நேற்று மாலை வீட்டை விட்டு வெளியேறிச் சென்றுள்ளார். எனினும் இரவாகியும் அவர் வீடு திரும்பாததால் உறவினர்கள் தேடிவந்துள்ளனர்.
இந்த நிலையில் இன்று (11) சவுக்கடி கடற்கரை பகுதியில், ஆண் ஒருவரின் சடலம் இருப்பதை அவதானித்த பொதுமக்கள் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், தடயவியல் பிரிவினர் இளைஞரின் சடலத்தை மீட்டனர்.
அத்துடன் உயிரிழந்த இளைஞன் செலுத்தியதாகக் கூறப்படும் மோட்டர் சைக்கிளையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
இளைஞனின் உயிரிழப்பு கொலையா அல்லது உயிர்மாய்ப்பா? என்ற போர்வையில் பொலிஸார் விசாரணைகளை தீவிரமாக முன்னெடுத்துள்ளனர்.
வீட்டிலிருந்து சென்ற நபரை தேடியலைந்த உறவினர்கள்; கடற்கரையில் சடலமாக மீட்பு பொலிஸார் தீவிர விசாரணை மட்டக்களப்பு சவுக்கடி கடற்கரைப் பகுதியில் இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். சடலமாக மீட்கப்பட்டவர், ஏறாவூர் செங்கலடிப் பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.குறித்த நபர் ஏறாவூர் பகுதியிலுள்ள உறவினரது தங்க ஆபரண விற்பனை நிலையம் ஒன்றில் பணி புரிந்து வந்துள்ளார். குறித்த இளைஞர் நேற்று மாலை வீட்டை விட்டு வெளியேறிச் சென்றுள்ளார். எனினும் இரவாகியும் அவர் வீடு திரும்பாததால் உறவினர்கள் தேடிவந்துள்ளனர்.இந்த நிலையில் இன்று (11) சவுக்கடி கடற்கரை பகுதியில், ஆண் ஒருவரின் சடலம் இருப்பதை அவதானித்த பொதுமக்கள் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், தடயவியல் பிரிவினர் இளைஞரின் சடலத்தை மீட்டனர். அத்துடன் உயிரிழந்த இளைஞன் செலுத்தியதாகக் கூறப்படும் மோட்டர் சைக்கிளையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.இளைஞனின் உயிரிழப்பு கொலையா அல்லது உயிர்மாய்ப்பா என்ற போர்வையில் பொலிஸார் விசாரணைகளை தீவிரமாக முன்னெடுத்துள்ளனர்.