• Jun 07 2025

ஆர்.சி.பி வெற்றிச் சம்பவம் - விராட் கோலிக்கு எதிராக முறைப்பாடு...!

shanuja / Jun 7th 2025, 11:04 am
image

ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் விராட் கோலிக்கு எதிராக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. 


18 ஆண்டுகளுக்குப் பிறகு 2025 ஆம் ஆண்டு ஐ.பி.எல் சாம்பியனை கைப்பற்றியது ஆர்.சி.பி வீரர்கள் உட்பட இரசிகர்கள் பெரும் மகிழ்ச்சிளை வெளிப்படுத்தியிருந்தனர். 


வெற்றியை அடுத்து பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் வெற்றிக்கொண்டாட்டம் இடம்பெற்றது. அதன்போது அலைதிரண்ட ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கி 11 பேர் உயிரிழந்துள்ளதோடு 50 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.


இந்த சம்பவம் தொடர்பில் நேற்று நால்வர் கைது செய்யப்பட்டனர். இதற்கு பிரதமர், அமைச்சர்கள், விராட்கோலி உள்ளிட்ட வீரர்கள் அனைவரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் பிரபல கிரிக்கெட் வீரரும் ஆர்.சி.பி அணி வீரருமான விராட் கோலிக்கு எதிராக வழக்கு பதிவு செய்யுமாறு கோரி கப்பான் பார்க் பொலிஸ் நிலையத்தில்  முறைப்பாடளிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

 

ஏ.எம்.வெங்கடேஷ் என்பவர் அளித்த முறைப்பாடு, ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வழக்கின் கீழ் விசாரணை நடத்தப்படும் என அந்நாட்டு பொலிஸ் தெரிவித்துள்ளது.

ஆர்.சி.பி வெற்றிச் சம்பவம் - விராட் கோலிக்கு எதிராக முறைப்பாடு. ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் விராட் கோலிக்கு எதிராக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. 18 ஆண்டுகளுக்குப் பிறகு 2025 ஆம் ஆண்டு ஐ.பி.எல் சாம்பியனை கைப்பற்றியது ஆர்.சி.பி வீரர்கள் உட்பட இரசிகர்கள் பெரும் மகிழ்ச்சிளை வெளிப்படுத்தியிருந்தனர். வெற்றியை அடுத்து பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் வெற்றிக்கொண்டாட்டம் இடம்பெற்றது. அதன்போது அலைதிரண்ட ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கி 11 பேர் உயிரிழந்துள்ளதோடு 50 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.இந்த சம்பவம் தொடர்பில் நேற்று நால்வர் கைது செய்யப்பட்டனர். இதற்கு பிரதமர், அமைச்சர்கள், விராட்கோலி உள்ளிட்ட வீரர்கள் அனைவரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் பிரபல கிரிக்கெட் வீரரும் ஆர்.சி.பி அணி வீரருமான விராட் கோலிக்கு எதிராக வழக்கு பதிவு செய்யுமாறு கோரி கப்பான் பார்க் பொலிஸ் நிலையத்தில்  முறைப்பாடளிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  ஏ.எம்.வெங்கடேஷ் என்பவர் அளித்த முறைப்பாடு, ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வழக்கின் கீழ் விசாரணை நடத்தப்படும் என அந்நாட்டு பொலிஸ் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement