• Jun 06 2025

18 வருடங்களுக்குப் பின் சாம்பியனைத் தட்டித் தூக்கியது ஆர்.சி.பி..! - கண்ணீருடன் வெற்றியைப் பகிர்ந்த விராட்..!

shanuja / Jun 4th 2025, 12:21 pm
image


2025 ஆம் ஆண்டுக்கான 18 ஆவது ஐ.பி.எல் சாம்பியனின் இறுதி சமர்  குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள  நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று (2) இடம்பெற்றது.  


18 ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட்   கடந்த மார்ச் 22ஆம் திகதி தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் 'பிளே-ஆப்' சுற்று முடிவில் பெங்களூரு ரோயல் சேலஞ்சர்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன.



இந்த நிலையில்  இறுதிப் போட்டியில்  டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி ஆர்.சி.பி அணியின் தொடக்க வீரர்களாக விராட் கோலி- சால்ட் களமிறங்கினர். விராட் கோலி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 


இறுதியில் ஆர்.சி.பி அணி 20 ஓவரில் 190 ரன்கள் எடுத்தது. இதைத்தொடர்ந்து 191 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 184 ரன்களை  எடுத்தது. 


இதன்மூலம் 6 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்.சி.பி இறுதிப் போட்டியை வென்று  2025 ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் சாம்பியனை தனதாக்கியது. ஆர.சி.பி க்காக 18 வருடங்களாகப் போராடியதில் விராட் கோலிக்கு பெரும் பங்களிப்பு உள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. 


 

இந்த நிலையில் 18 வருடங்களுக்குப் பின் பதிவான வெற்றியை கண்ணீருடன் மைதானத்துக்குள் வீரர்களுடன் பகிர்ந்தார். இது விராட் கோலியின் 18 வருட கால  உழைப்புக்கு கிடைத்த வெற்றி என வீரர்கள் உள்ளிட்ட ரசிகர்கள் அனைவரும் மெய்சிலிர்த்து வெற்றியைக் கொண்டாடினர்.

https://www.facebook.com/share/v/1HAivE7xuf/?mibextid=wwXIfr

.

18 வருடங்களுக்குப் பின் சாம்பியனைத் தட்டித் தூக்கியது ஆர்.சி.பி. - கண்ணீருடன் வெற்றியைப் பகிர்ந்த விராட். 2025 ஆம் ஆண்டுக்கான 18 ஆவது ஐ.பி.எல் சாம்பியனின் இறுதி சமர்  குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள  நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று (2) இடம்பெற்றது.  18 ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட்   கடந்த மார்ச் 22ஆம் திகதி தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் 'பிளே-ஆப்' சுற்று முடிவில் பெங்களூரு ரோயல் சேலஞ்சர்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன.இந்த நிலையில்  இறுதிப் போட்டியில்  டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி ஆர்.சி.பி அணியின் தொடக்க வீரர்களாக விராட் கோலி- சால்ட் களமிறங்கினர். விராட் கோலி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இறுதியில் ஆர்.சி.பி அணி 20 ஓவரில் 190 ரன்கள் எடுத்தது. இதைத்தொடர்ந்து 191 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 184 ரன்களை  எடுத்தது. இதன்மூலம் 6 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்.சி.பி இறுதிப் போட்டியை வென்று  2025 ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் சாம்பியனை தனதாக்கியது. ஆர.சி.பி க்காக 18 வருடங்களாகப் போராடியதில் விராட் கோலிக்கு பெரும் பங்களிப்பு உள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே.  இந்த நிலையில் 18 வருடங்களுக்குப் பின் பதிவான வெற்றியை கண்ணீருடன் மைதானத்துக்குள் வீரர்களுடன் பகிர்ந்தார். இது விராட் கோலியின் 18 வருட கால  உழைப்புக்கு கிடைத்த வெற்றி என வீரர்கள் உள்ளிட்ட ரசிகர்கள் அனைவரும் மெய்சிலிர்த்து வெற்றியைக் கொண்டாடினர்.https://www.facebook.com/share/v/1HAivE7xuf/mibextid=wwXIfr.

Advertisement

Advertisement

Advertisement