• Jun 11 2025

ஜனாதிபதி மன்னிப்பு முழு பட்டியலையும் வெளியிடுங்கள் - ஜனாதிபதியிடம் சஜித் வலியுறுத்து..!

shanuja / Jun 10th 2025, 3:07 pm
image

வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட்ட நபர்களின் பட்டியலை பகிரங்கப்படுத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். 


தனது உத்தியோகபூர்வ ‘X’ தளத்தில் பதிவிட்டு இதனைத் தெரிவித்துள்ளார். அந்தப் பதிவில்  தெரிவிக்கப்பட்டதாவது, 


வெளிப்படைத்தன்மையை உறுதியளித்த ஜனாதிபதி, முழு பட்டியலையும் பாராளுமன்றத்தில் வெளியிட்டு செயல்முறையை தணிக்கை செய்ய வேண்டும்.


“388 வெசாக் மன்னிப்புகள் நீக்கப்பட்டன; ஆனால் பட்டியலில் இல்லாத ஒரு மோசடி செய்பவர் வெளிநடப்பு செய்தார். வெளிப்படைத்தன்மையை உறுதியளித்த ஜனாதிபதி, உத்தரவில் கையெழுத்திட்டார்.  எனவே வெளிப்படைத்தன்மை மற்றும் அமைப்பு மாற்றத்தின் நலனுக்காக, ஜனாதிபதி பணத்தை நிறைவேற்றுவது மட்டுமல்லாமல், முழு பட்டியலையும் பாராளுமன்றத்தில் வெளியிட்டு செயல்முறையை தணிக்கை செய்ய வேண்டும்.- என்றுள்ளது. 


2025 வெசாக் தின ஜனாதிபதி பொதுமன்னிப்புப் பட்டியலில் பெயரிடப்படாத வங்கியாளர் டபிள்யூ.எம். அதுல திலகரத்ன, அனுராதபுரம் சிறையில் இருந்து  விடுவிக்கப்பட்டது அங்கீகரிக்கப்படாதது என்று கண்டறியப்பட்டதை அடுத்து சிறைச்சாலை ஆணையாளர் கைது செய்யப்பட்டு விளக்கமறிலில் வைக்கப்பட்டுள்ளார். 


மேலும் இவ்வாறு பலர் வெவ்வேறு சிறைச்சாலைகளிலிருந்து சட்டவிரோதமாக விடுவிக்கப்பட்டிருக்கலாம் என்று கருதி பல கோணங்களில் குற்றப் புலனாய்வுத் துறை விசாரணைகளை முன்னெடுத்து வருகின்ற நிலையில் ஜனாதிபதி பொதுமன்னிப்பின் முழுப்பட்டியலை வெளியிடுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி மன்னிப்பு முழு பட்டியலையும் வெளியிடுங்கள் - ஜனாதிபதியிடம் சஜித் வலியுறுத்து. வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட்ட நபர்களின் பட்டியலை பகிரங்கப்படுத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். தனது உத்தியோகபூர்வ ‘X’ தளத்தில் பதிவிட்டு இதனைத் தெரிவித்துள்ளார். அந்தப் பதிவில்  தெரிவிக்கப்பட்டதாவது, வெளிப்படைத்தன்மையை உறுதியளித்த ஜனாதிபதி, முழு பட்டியலையும் பாராளுமன்றத்தில் வெளியிட்டு செயல்முறையை தணிக்கை செய்ய வேண்டும்.“388 வெசாக் மன்னிப்புகள் நீக்கப்பட்டன; ஆனால் பட்டியலில் இல்லாத ஒரு மோசடி செய்பவர் வெளிநடப்பு செய்தார். வெளிப்படைத்தன்மையை உறுதியளித்த ஜனாதிபதி, உத்தரவில் கையெழுத்திட்டார்.  எனவே வெளிப்படைத்தன்மை மற்றும் அமைப்பு மாற்றத்தின் நலனுக்காக, ஜனாதிபதி பணத்தை நிறைவேற்றுவது மட்டுமல்லாமல், முழு பட்டியலையும் பாராளுமன்றத்தில் வெளியிட்டு செயல்முறையை தணிக்கை செய்ய வேண்டும்.- என்றுள்ளது. 2025 வெசாக் தின ஜனாதிபதி பொதுமன்னிப்புப் பட்டியலில் பெயரிடப்படாத வங்கியாளர் டபிள்யூ.எம். அதுல திலகரத்ன, அனுராதபுரம் சிறையில் இருந்து  விடுவிக்கப்பட்டது அங்கீகரிக்கப்படாதது என்று கண்டறியப்பட்டதை அடுத்து சிறைச்சாலை ஆணையாளர் கைது செய்யப்பட்டு விளக்கமறிலில் வைக்கப்பட்டுள்ளார். மேலும் இவ்வாறு பலர் வெவ்வேறு சிறைச்சாலைகளிலிருந்து சட்டவிரோதமாக விடுவிக்கப்பட்டிருக்கலாம் என்று கருதி பல கோணங்களில் குற்றப் புலனாய்வுத் துறை விசாரணைகளை முன்னெடுத்து வருகின்ற நிலையில் ஜனாதிபதி பொதுமன்னிப்பின் முழுப்பட்டியலை வெளியிடுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement