செம்மணி மனித புதைகுழியின் நீதி கோரிய போராட்டத்திற்கு யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தனது ஆதரவுகளை வழங்குவதாக யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் லகிர்தர் தெரிவித்தார்.
யாழ் பல்கலைக்கழக முன்றலில் இடம்பெற்ற போராட்டத்தை தொடர்ந்து வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினரால் செம்மணி மனித புதைகுழி அகழ்வாய்வு சர்வதேச கண்காணிப்புடன் இடம்பெறவேண்டும் என வலியுறுத்தி நாளை காலை 10 மணியளவில் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இதற்கு யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஆதரவு வழங்குமா என கேள்வி எழுப்பபட்டது.
நிச்சயமாக எமது ஆதரவுகளை நாம் வழங்குவோம். செம்மணி மனித புதை குழியானது தமிழினத்திற்கு இருக்கூடிய மிகப்பெரிய பிரச்சினையில் இதுவும் ஒன்று.
யுத்தத்தில் காணாமலாக்கபட்ட எமது உறவுகளுக்கான நீதி இதுவரை நிலைநாட்டபடவில்லை. இவ்வாறான சூழலில் செம்மணி மனித புதைகுழியில் இருந்து 7 மனித எச்சங்கள் எலும்பு கூடுகளாக மீட்கப்பட்டுள்ளது.
ஆகவே நாங்கள் பல்கலைக்கழக மாணவர்களாக சிவில் சமூகமாக இணைந்து இதற்கான போராட்டத்தினை நிச்சயமாக முன்னெடுப்போம் எனவும் இந்த கவனயீர்ப்பு போராட்டத்திற்கு அனைத்து தரப்புக்களும் தங்களுடைய ஆதரவுகளை நல்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்
செம்மணி மனித புதைகுழியில் நீதி கோரி போராட்டம்; யாழ் பல்கலை மாணவர் ஒன்றியம் ஆதரவு செம்மணி மனித புதைகுழியின் நீதி கோரிய போராட்டத்திற்கு யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தனது ஆதரவுகளை வழங்குவதாக யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் லகிர்தர் தெரிவித்தார்.யாழ் பல்கலைக்கழக முன்றலில் இடம்பெற்ற போராட்டத்தை தொடர்ந்து வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினரால் செம்மணி மனித புதைகுழி அகழ்வாய்வு சர்வதேச கண்காணிப்புடன் இடம்பெறவேண்டும் என வலியுறுத்தி நாளை காலை 10 மணியளவில் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.இதற்கு யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஆதரவு வழங்குமா என கேள்வி எழுப்பபட்டது.நிச்சயமாக எமது ஆதரவுகளை நாம் வழங்குவோம். செம்மணி மனித புதை குழியானது தமிழினத்திற்கு இருக்கூடிய மிகப்பெரிய பிரச்சினையில் இதுவும் ஒன்று.யுத்தத்தில் காணாமலாக்கபட்ட எமது உறவுகளுக்கான நீதி இதுவரை நிலைநாட்டபடவில்லை. இவ்வாறான சூழலில் செம்மணி மனித புதைகுழியில் இருந்து 7 மனித எச்சங்கள் எலும்பு கூடுகளாக மீட்கப்பட்டுள்ளது.ஆகவே நாங்கள் பல்கலைக்கழக மாணவர்களாக சிவில் சமூகமாக இணைந்து இதற்கான போராட்டத்தினை நிச்சயமாக முன்னெடுப்போம் எனவும் இந்த கவனயீர்ப்பு போராட்டத்திற்கு அனைத்து தரப்புக்களும் தங்களுடைய ஆதரவுகளை நல்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்