• Jul 18 2026

சிறைச்சாலை பிரச்சினைகள் தொடர்பில் அதிகாரிகளுடன் ஜனாதிபதி முக்கிய கலந்துரையாடல்

Aathira / Jul 18th 2026, 10:25 am
image

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் சிறைக் காவலர்கள், ஜெயிலர்கள் உள்ளிட்ட சிறைச்சாலை அதிகாரிகளுக்கு இடையிலான விசேட சந்திப்பு நேற்று (17) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.

இதன்போது, நாட்டின் தற்போதைய சிறைச்சாலை கட்டமைப்பில் காணப்படும் பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கு உடனடியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

குறிப்பாக, அண்மையில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் இடம்பெறாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.

மேலும், சிறைச்சாலை அதிகாரிகள் எதிர்நோக்கும் பணிச்சுமைகள், பாதுகாப்பு சவால்கள் மற்றும் அவர்களின் நலன்புரி விடயங்கள் தொடர்பிலும் ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளார்.

ஜனாதிபதி ஒருவருடன் நேரடியாக தமது பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவதற்கு கிடைத்த முதல் சந்தர்ப்பம் இதுவென தெரிவித்த சிறைச்சாலை அதிகாரிகள், இந்த சந்திப்புக்காக ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

சிறைச்சாலை பிரச்சினைகள் தொடர்பில் அதிகாரிகளுடன் ஜனாதிபதி முக்கிய கலந்துரையாடல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் சிறைக் காவலர்கள், ஜெயிலர்கள் உள்ளிட்ட சிறைச்சாலை அதிகாரிகளுக்கு இடையிலான விசேட சந்திப்பு நேற்று (17) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.இதன்போது, நாட்டின் தற்போதைய சிறைச்சாலை கட்டமைப்பில் காணப்படும் பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கு உடனடியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.குறிப்பாக, அண்மையில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் இடம்பெறாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.மேலும், சிறைச்சாலை அதிகாரிகள் எதிர்நோக்கும் பணிச்சுமைகள், பாதுகாப்பு சவால்கள் மற்றும் அவர்களின் நலன்புரி விடயங்கள் தொடர்பிலும் ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளார்.ஜனாதிபதி ஒருவருடன் நேரடியாக தமது பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவதற்கு கிடைத்த முதல் சந்தர்ப்பம் இதுவென தெரிவித்த சிறைச்சாலை அதிகாரிகள், இந்த சந்திப்புக்காக ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement