இந்தியாவின் குஜராத் மாநிலம் அகமதாபாத்தை உலுக்கிய விமான விபத்து தொடர்பில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பலர் நேரில் சென்று நிலைமையை ஆராய்ந்துள்ளனர்.
அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து இன்று மதியம் 1.38 மணிக்கு லண்டன் புறப்பட்ட 'ஏர் இந்தியா' நிறுவனத்தின் 'போயிங் 787-8 விமானம், புறப்பட்ட 32 வினாடிகளிலேயே விமான நிலையம் அருகே இருந்த மருத்துவக் கல்லூரி விடுதி மற்றும் குடியிருப்புகள் மீது விழுந்து விபத்துக்குள்ளாகியது.
விமானத்தில் 242 பயணிகள் பயணித்த நிலையில் தற்போது வரை 204 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன என்று மாநில அரசு தெரிவித்துள்ளது. அத்துடன் மருத்துவக் கல்லூரி விடுதியிலும் பல மாணவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு ஆகியோருடன் ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி, அவர்களை அகமதாபாத்துக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யும்படி உத்தரவிட்டுள்ளார்.
அதனையடுத்து மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு நேரில் சென்று விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டு அங்குள்ள நிலைமையை ஆய்வு செய்தார். அத்துடன் நடந்து வரும் மீட்பு மற்றும் நிவாரண நவடிக்கைகளை துரிதப்படுத்தினார். அதன்பின்னர் விபத்தில் உயிர் தப்பியவரையும் காயமடைந்தவர்களையும் சந்தித்து ஆறுதல் அளித்தார்.
அதனையடுத்து அவர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்,
உயிரிழந்தவர்களை அடையாளம் காண அவர்களின் உறவினர்களிடம் டி.என்.ஏ பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. மேலும் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படுவதை உறுதிசெய்ய ஏர் இந்தியா நிறுவனம் மற்றும் உள்ளூர் நிர்வாகத்தின் அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்த நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. தொடர்ந்து சம்பவம் குறித்து முழுமையான மற்றும் வெளிப்படையான விசாரணை நடத்தப்படும் .- எனத் தெரிவித்தார்.
அகமதாபாத்தில் நொருங்கிய விமானம் - நிலைமையை ஆராய்ந்த அமைச்சர்கள். இந்தியாவின் குஜராத் மாநிலம் அகமதாபாத்தை உலுக்கிய விமான விபத்து தொடர்பில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பலர் நேரில் சென்று நிலைமையை ஆராய்ந்துள்ளனர். அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து இன்று மதியம் 1.38 மணிக்கு லண்டன் புறப்பட்ட 'ஏர் இந்தியா' நிறுவனத்தின் 'போயிங் 787-8 விமானம், புறப்பட்ட 32 வினாடிகளிலேயே விமான நிலையம் அருகே இருந்த மருத்துவக் கல்லூரி விடுதி மற்றும் குடியிருப்புகள் மீது விழுந்து விபத்துக்குள்ளாகியது. விமானத்தில் 242 பயணிகள் பயணித்த நிலையில் தற்போது வரை 204 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன என்று மாநில அரசு தெரிவித்துள்ளது. அத்துடன் மருத்துவக் கல்லூரி விடுதியிலும் பல மாணவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு ஆகியோருடன் ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி, அவர்களை அகமதாபாத்துக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யும்படி உத்தரவிட்டுள்ளார்.அதனையடுத்து மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு நேரில் சென்று விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டு அங்குள்ள நிலைமையை ஆய்வு செய்தார். அத்துடன் நடந்து வரும் மீட்பு மற்றும் நிவாரண நவடிக்கைகளை துரிதப்படுத்தினார். அதன்பின்னர் விபத்தில் உயிர் தப்பியவரையும் காயமடைந்தவர்களையும் சந்தித்து ஆறுதல் அளித்தார். அதனையடுத்து அவர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில், உயிரிழந்தவர்களை அடையாளம் காண அவர்களின் உறவினர்களிடம் டி.என்.ஏ பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. மேலும் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படுவதை உறுதிசெய்ய ஏர் இந்தியா நிறுவனம் மற்றும் உள்ளூர் நிர்வாகத்தின் அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்த நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. தொடர்ந்து சம்பவம் குறித்து முழுமையான மற்றும் வெளிப்படையான விசாரணை நடத்தப்படும் .- எனத் தெரிவித்தார்.