இந்தியாவின் குஜராத் மாநிலம் அகமதாபாத்தை உலுக்கிய விமான விபத்திற்கு ஜனாதிபதி திரெளபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சிதலைவர் உள்ளிட்ட பல பிரமுகர்கள் இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து இன்று மதியம் 1.38 மணிக்கு லண்டன் புறப்பட்ட 'ஏர் இந்தியா' நிறுவனத்தின் 'போயிங் 787-8 விமானம், புறப்பட்ட 32 வினாடிகளிலேயே விமான நிலையம் அருகே இருந்த மருத்துவக் கல்லூரி விடுதி மற்றும் குடியிருப்புகள் மீது விழுந்து விபத்துக்குள்ளாகியது.
விமானத்தில் 242 பயணிகள் பயணித்த நிலையில் தற்போது வரை 204 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன என்று மாநில அரசு தெரிவித்துள்ளது. இதற்கு இந்தியா மட்டுமன்றி உலகளாவிய ரீதியிலும் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சிதலைவர் ராகுல் உள்ளிட்ட இந்திய தலைவர்கள், பல மாநில முதல்வர்கள், மற்றும் பிரிட்டன் பிரதமர் ஸ்டார்மர் , கனடா பிரதமர் மார்க் கார்னி, ஆஸி., பிரதமர் அந்தோணி அல்போன்ஸ், பிரிட்டன் மன்னர் சார்லஸ் , அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, ரஷ்ய அதிபர் புடின், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்,இத்தாலி பிரதமர் மெலோனி, வங்கதேச அரசின் ஆலோசகர் முகமது யூனுஸ், உள்ளிட்ட உலக தலைவர்களும் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
நாட்டையே சோகத்தில் ஆழ்த்திய விபத்து - இந்திய குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட பலர் இரங்கல். இந்தியாவின் குஜராத் மாநிலம் அகமதாபாத்தை உலுக்கிய விமான விபத்திற்கு ஜனாதிபதி திரெளபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சிதலைவர் உள்ளிட்ட பல பிரமுகர்கள் இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர். அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து இன்று மதியம் 1.38 மணிக்கு லண்டன் புறப்பட்ட 'ஏர் இந்தியா' நிறுவனத்தின் 'போயிங் 787-8 விமானம், புறப்பட்ட 32 வினாடிகளிலேயே விமான நிலையம் அருகே இருந்த மருத்துவக் கல்லூரி விடுதி மற்றும் குடியிருப்புகள் மீது விழுந்து விபத்துக்குள்ளாகியது. விமானத்தில் 242 பயணிகள் பயணித்த நிலையில் தற்போது வரை 204 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன என்று மாநில அரசு தெரிவித்துள்ளது. இதற்கு இந்தியா மட்டுமன்றி உலகளாவிய ரீதியிலும் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சிதலைவர் ராகுல் உள்ளிட்ட இந்திய தலைவர்கள், பல மாநில முதல்வர்கள், மற்றும் பிரிட்டன் பிரதமர் ஸ்டார்மர் , கனடா பிரதமர் மார்க் கார்னி, ஆஸி., பிரதமர் அந்தோணி அல்போன்ஸ், பிரிட்டன் மன்னர் சார்லஸ் , அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, ரஷ்ய அதிபர் புடின், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்,இத்தாலி பிரதமர் மெலோனி, வங்கதேச அரசின் ஆலோசகர் முகமது யூனுஸ், உள்ளிட்ட உலக தலைவர்களும் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.