• Mar 26 2026

போதை மாத்திரைகள் விற்பனை செய்த மருந்தக உரிமையாளர் கைது!

shanu / Mar 25th 2026, 12:55 pm
image

ஹட்டன் நகரில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த மருந்தக உரிமையாளர் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார். 


ஹட்டன் நகரில் ஆங்கில மருந்து பொருட்கள் விற்பனை செய்யும் மருந்தகத்தில் வைத்தியரின் அனுமதி சீட்டு இன்றி போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக கிடைக்க பெற்ற இரகசிய தகவலை தொடர்ந்து ஹட்டன் குற்ற தடுப்பு பிரிவு போலீசார் இச் சுற்றி வளைப்பை மேற்கொண்டனர்.


அதற்கு தலைமை வகித்த ஹட்டன் வலய காவல் துறை தலைமை அதிகாரி பிரதீப் வீரசேகர குறித்த ஆங்கில மருந்து பொருட்கள் விற்பனை நிலையத்தில் இருந்து 1400 போதை மாத்திரைகள் கைப் பற்றி உள்ளனர்.


மருந்தக உரிமையாளர் கைது செய்யப்பட்டு ஹட்டன் நீதி மன்றத்தில் இன்று ஆஜர் படுத்த உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.


போதை மாத்திரைகள் விற்பனை செய்த மருந்தக உரிமையாளர் கைது ஹட்டன் நகரில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த மருந்தக உரிமையாளர் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார். ஹட்டன் நகரில் ஆங்கில மருந்து பொருட்கள் விற்பனை செய்யும் மருந்தகத்தில் வைத்தியரின் அனுமதி சீட்டு இன்றி போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக கிடைக்க பெற்ற இரகசிய தகவலை தொடர்ந்து ஹட்டன் குற்ற தடுப்பு பிரிவு போலீசார் இச் சுற்றி வளைப்பை மேற்கொண்டனர்.அதற்கு தலைமை வகித்த ஹட்டன் வலய காவல் துறை தலைமை அதிகாரி பிரதீப் வீரசேகர குறித்த ஆங்கில மருந்து பொருட்கள் விற்பனை நிலையத்தில் இருந்து 1400 போதை மாத்திரைகள் கைப் பற்றி உள்ளனர்.மருந்தக உரிமையாளர் கைது செய்யப்பட்டு ஹட்டன் நீதி மன்றத்தில் இன்று ஆஜர் படுத்த உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement