• Jun 05 2025

உத்தியோகபூர்வ வனப்பகுதியாக நில்கல காடு அறிவிப்பு..!

shanuja / Jun 3rd 2025, 12:57 pm
image

அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் பரந்து விரிந்துள்ள நில்கல காடு அதிகாரபூர்வமாக பாதுகாக்கப்பட்ட  வனப்பகுதியாக நேற்று  (2) அறிவிக்கப்பட்டது

 

பிபிலேயில் உள்ள ரத்துகல பூர்வீக பாரம்பரிய மையத்தில் சுற்றுச்சூழல் அமைச்சர் டாக்டர் தமிதா பதபேந்தியின் தலைமையில் இந்த அறிவிப்பு விழா நடைபெற்றது.


உலக சுற்றுச்சூழல் தினம் மற்றும் இலங்கையின் தேசிய சுற்றுச்சூழல் வாரத்திற்கு இணங்க,  நில்கல காடு அதிகாரபூர்வமாக பாதுகாக்கப்பட்ட காப்பகமாக அறிவிக்கப்பட்டது. இது பல்லுயிர் பாதுகாப்பில் ஒரு முக்கிய படியைக் குறிக்கிறது.



புதிதாகப் பாதுகாக்கப்பட்ட நில்கல வனப்பகுதி 40,683 ஹெக்டேயர் பரப்பளவைக் கொண்டுள்ளது.  அத்துடன் மடகம, பிபிலே, நில்கல மற்றும் இங்கினியாகல ஆகிய முக்கிய வன மண்டலங்களை உள்ளடக்கியது.மேலும் பிபிலே பகுதி வனத்தின் முக்கிய பாதுகாப்புப் பிரிவாக உள்ளது.

உத்தியோகபூர்வ வனப்பகுதியாக நில்கல காடு அறிவிப்பு. அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் பரந்து விரிந்துள்ள நில்கல காடு அதிகாரபூர்வமாக பாதுகாக்கப்பட்ட  வனப்பகுதியாக நேற்று  (2) அறிவிக்கப்பட்டது பிபிலேயில் உள்ள ரத்துகல பூர்வீக பாரம்பரிய மையத்தில் சுற்றுச்சூழல் அமைச்சர் டாக்டர் தமிதா பதபேந்தியின் தலைமையில் இந்த அறிவிப்பு விழா நடைபெற்றது.உலக சுற்றுச்சூழல் தினம் மற்றும் இலங்கையின் தேசிய சுற்றுச்சூழல் வாரத்திற்கு இணங்க,  நில்கல காடு அதிகாரபூர்வமாக பாதுகாக்கப்பட்ட காப்பகமாக அறிவிக்கப்பட்டது. இது பல்லுயிர் பாதுகாப்பில் ஒரு முக்கிய படியைக் குறிக்கிறது.புதிதாகப் பாதுகாக்கப்பட்ட நில்கல வனப்பகுதி 40,683 ஹெக்டேயர் பரப்பளவைக் கொண்டுள்ளது.  அத்துடன் மடகம, பிபிலே, நில்கல மற்றும் இங்கினியாகல ஆகிய முக்கிய வன மண்டலங்களை உள்ளடக்கியது.மேலும் பிபிலே பகுதி வனத்தின் முக்கிய பாதுகாப்புப் பிரிவாக உள்ளது.

Advertisement

Advertisement

Advertisement