• May 10 2025

அரச ஊழியர்களுக்கான பேரிடர் கடன் தொடர்பில் புதிய சுற்றறிக்கை வெளியீடு

Thansita / May 10th 2025, 12:05 pm
image

அரச ஊழியர்களுக்கான பேரிடர் கடன் வழங்குவது தொடர்பாக புதிய விதிமுறைகளை உள்ளடக்கிய புதிய சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. 

அதன் படி அரச நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு , அமைச்சு செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்கள தலைவர்களை அறிவுறுத்தும் வகையில் இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த சுட்டறிக்கையினை    2025.05.01 முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது . 

அதில், 2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் மூலம் அரச ஊழியர்களின் குறைந்தபட்ச ஆரம்ப சம்பளம் உயர்த்தப்பட்டதை கருத்தில் கொண்டு, அரச ஊழியர்களுக்கு பேரிடர் கடன் வழங்குவதற்கான உச்ச வரம்பு எல்லையை தற்போதுள்ள 250,000 ரூபாவில் இருந்து 400,000 ரூபாவாக உயர்த்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக   அதில் குறிப்பிடப்பட்டுள்ளது


அரச ஊழியர்களுக்கான பேரிடர் கடன் தொடர்பில் புதிய சுற்றறிக்கை வெளியீடு அரச ஊழியர்களுக்கான பேரிடர் கடன் வழங்குவது தொடர்பாக புதிய விதிமுறைகளை உள்ளடக்கிய புதிய சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன் படி அரச நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு , அமைச்சு செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்கள தலைவர்களை அறிவுறுத்தும் வகையில் இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த சுட்டறிக்கையினை    2025.05.01 முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது . அதில், 2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் மூலம் அரச ஊழியர்களின் குறைந்தபட்ச ஆரம்ப சம்பளம் உயர்த்தப்பட்டதை கருத்தில் கொண்டு, அரச ஊழியர்களுக்கு பேரிடர் கடன் வழங்குவதற்கான உச்ச வரம்பு எல்லையை தற்போதுள்ள 250,000 ரூபாவில் இருந்து 400,000 ரூபாவாக உயர்த்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக   அதில் குறிப்பிடப்பட்டுள்ளது

Advertisement

Advertisement

Advertisement