• Aug 13 2025

நாடளாவிய ரீதியில் அதிரடி சுற்றிவளைப்பு; ஒரே நாளில் 618 பேர் கைது

Chithra / Aug 13th 2025, 1:57 pm
image

நாட்டில் குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 618 நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

இலங்கையில் குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் தொடர்பான நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக நேற்று (12) நடத்தப்பட்ட பொலிஸ் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக 24,708 பேர் மீது நடத்தப்பட்ட சோதனையைத் தொடர்ந்து இந்தக் கைதுகள் மேற்கொள்ளப்பட்டது.

கைது செய்யப்பட்ட குழுவில் குற்றங்களுடன் நேரடியாகத் தொடர்புடைய 19 நபர்களும், பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 203 நபர்களும், திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 174 நபர்களும் அடங்குவர்.

மது அருந்திவிட்டு வாகனம் செலுத்தியதற்காக 72 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அதே நேரத்தில் 13 பேர் மீது கவனக்குறைவாக வாகனம் செலுத்தியதற்காகவும் 3,680 பேர் மீது ஏனைய போக்குவரத்து குற்றங்களுக்காகவும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

நாடளாவிய ரீதியில் அதிரடி சுற்றிவளைப்பு; ஒரே நாளில் 618 பேர் கைது நாட்டில் குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 618 நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். இலங்கையில் குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் தொடர்பான நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக நேற்று (12) நடத்தப்பட்ட பொலிஸ் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக 24,708 பேர் மீது நடத்தப்பட்ட சோதனையைத் தொடர்ந்து இந்தக் கைதுகள் மேற்கொள்ளப்பட்டது.கைது செய்யப்பட்ட குழுவில் குற்றங்களுடன் நேரடியாகத் தொடர்புடைய 19 நபர்களும், பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 203 நபர்களும், திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 174 நபர்களும் அடங்குவர்.மது அருந்திவிட்டு வாகனம் செலுத்தியதற்காக 72 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.அதே நேரத்தில் 13 பேர் மீது கவனக்குறைவாக வாகனம் செலுத்தியதற்காகவும் 3,680 பேர் மீது ஏனைய போக்குவரத்து குற்றங்களுக்காகவும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement