திருகோணமலை மாவட்டத்தில், மக்களின் குடியிருப்பு காணிகளை உரியவாறு அடையாளம் கண்டு, அவைகளை விடுவிப்பு செய்வதற்கான நடவடிக்கைகளை எடுப்பதில், புதிய அரசாங்கம் அக்கறையுடன் செயல்படும் வெளி விவகார மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா உறுதியளித்தார்.
2024 ஆம் ஆண்டு ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி அடைந்த, கிழக்கு மாகாண துறைமுக ஊழியர்களின் பிள்ளைகளுக்கு புலமைப் பரிசில் மானியம் மற்றும் பரிசுகள் வழங்கும் நிகழ்வு நேற்று சீனக்குடா துறைமுக அதிகார சபை மண்டபத்தில் நடைபெற்றது.
அகில இலங்கை துறைமுக பொது ஊழியர் சங்கத்தின், ஊழியர் கூட்டுறவு வங்கியினால் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிகழ்வில், பிரதம அதிதியாக கலந்து கொண்டு, உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பிரதி அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
அபிவிருத்தி திட்டங்கள் என்பது, மக்களோடு பின்னிப்பிணைந்த, ஒரு செயற்பாடாகும். மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்ற அபிவிருத்தி திட்டங்களால் எதனையும் சாதித்து விட முடியாது.
இலங்கை துறைமுக அதிகார சபை என பேசும் போதெல்லாம், அங்கு மக்கள் மத்தியில், இயல்பாக எழுந்து வருகின்ற ஒரு விடயம் தான் காணிப்பிரச்சினை பற்றியதாகும்.
திருகோணமலை மாவட்டத்தில், துறைமுக அதிகார சபை தொடர்பான காணிகள், மக்கள் குடியிருப்பு
காணிகள் தொடர்பாகவும், பல்வேறுபட்ட முரண்பாடுகள், தெளிவின்மை, விரிசல்கள் என்பன சமூகத்தில் நிலவுகின்றன. எனவே, ஒரு குறுகிய காலத்துக்குள் இந்த மக்கள் எதிர் நோக்குகின்ற காணிப் பிரச்சினைகளுக்கு நிச்சயம் தீர்வு காண முடியும் என நம்புகிறேன்.
இந்த காணிகள் தொடர்பாக ஏற்கனவே, எடுக்கப்பட்ட சில தீர்மானங்கள் மற்றும்நீதிமன்ற தீர்ப்புகளின் பிரகாரம் சில விடயங்கள் நடைபெற்றுக் கொண்டு வருகின்றன. இதில் எங்களுக்கு மாற்றுக் கருத்து ஏதுமில்லை. ஏனெனில், சட்ட வரம்புக்கு உட்பட்ட விடயங்களை செய்ய
வேண்டியிருக்கின்றது. இல்லையேல், நாங்கள், நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டுக்கு ஆளாகிவிடுவோம் என்றும் கூறினார்.
கடந்த காலங்களில் ஜனாதிபதி நிதியம் என்ற விடயம் ஒரு சவாலான ஒன்றாகவே காணப்பட்டது. ஜனாதிபதி நிதியத்தின் மூலம், நாட்டின் அனைத்து மாவட்டங்கள் இருந்தும், மாணவர்கள் நன்மை அடையக்கூடிய, புதிய வேலைத்திட்டம் ஒன்று, இந்த மாதம் இறுதியில், நடைமுறைக்கு வர உள்ளது.
இதன் மூலம், ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும், உயர் தரத்தில் புதிதாக மறுசீரமைக்கப்பட்ட, கல்வி திட்டத்தின் கீழ், ஐந்து துறைகளில், ஏதாவது ஒரு துறையில், சிறப்பாக சித்தி அடைந்த, பத்து மாணவர்கள் தெரிசெய்யப்பட்டு, அவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபா புலமை பரிசில் வழங்கப்பட உள்ளது.
கடந்த காலங்களில் இந்த நாடு, அரசியல் கலாச்சாரங்களின் மூலமாகவே சீரழிக்கப்பட்டிருக்கின்றது. பாதாள உலக கோஷ்டிகள், திட்டமிட்டு குற்றவியலுக்காக செயல்படுகின்ற கும்பல்கள், என்று எதை எடுத்துக் கொண்டாலும் அதற்குப் பின்னால் ஒரு அரசியல் பலம் இருந்திருப்பதை யாரும் மறுக்க முடியாது.
பாலாறும் தேனாறும் ஓடிக் கொண்டிருக்கின்ற நாட்டை நாங்கள் பொறுப்பெடுக்கவில்லை. உடைந்து சின்னா பின்னமாக்கப்பட்ட ஒரு நாட்டையே எங்களிடம் ஒப்படைத்திருக்கிறார்கள். தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மிகவும் குறுகிய காலத்தில் கவிழும் என்று எல்லோரும் எதிர்பார்த்தார்கள். இதற்காக கூட்டணிகள் அமைத்தும் இறுதியில், அவர்கள் ஏமாந்து போனார்கள் என்றும் கூறினார்.
புதிய கல்வி சீர்திருத்தம் தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில், 21 ஆம் நூற்றாண்டு மற்றும் அதற்கு அப்பால் ஏற்படக்கூடிய சவால்களை வெற்றி கொள்ளும் ஆளுமை படைத்த, மாணவர்களை உருவாக்கி, நாட்டின் அபிவிருத்திக்கு பங்காளர்களாக மாற்றுவதே புதிய கல்வி சீர்திருத்தத்தின் நோக்கமாகும்.
பாடசாலை கல்விக்குள்ளே, தொழில் திறன் (NVQ) பாடங்களையும் இந்த புதிய கல்வி சீர்திருத்தத்தின் மூலம் உள்வாங்கப்பட்டிருக்கின்றது. இதன் மூலம் ஒரு மாணவன், கல்வி பொது தராதர சாதாரண தரத்திலே, தொழில் உலகுக்கு தேவையான திறனை பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும். அத்தோடு, குறித்த மாணவன் உயர் தரப் பிரிவில் இணைந்து, கல்வியை தொடர்ந்து பல்கலைக்கழக பட்டப்படிப்பை மேற்கொள்ளவும் முடியும் என்றார்.
இந்த நிகழ்வில், அகில இலங்கை துறைமுக பொது ஊழியர் சங்கச் செயலாளர் சரத் புர்ணிய ஸ்ரீ, இலங்கை துறைமுக அதிகார சபையின் திருகோணமலை துறைமுக வதிவிட முகாமையாளர் சரத்குமார உள்ளிட்ட,
திருகோணமலை துறைமுக ஊழியர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
மக்களின் குடியிருப்பு காணிகளை விடுவிப்பு செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் - பிரதி அமைச்சர் உறுதி. திருகோணமலை மாவட்டத்தில், மக்களின் குடியிருப்பு காணிகளை உரியவாறு அடையாளம் கண்டு, அவைகளை விடுவிப்பு செய்வதற்கான நடவடிக்கைகளை எடுப்பதில், புதிய அரசாங்கம் அக்கறையுடன் செயல்படும் வெளி விவகார மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா உறுதியளித்தார்.2024 ஆம் ஆண்டு ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி அடைந்த, கிழக்கு மாகாண துறைமுக ஊழியர்களின் பிள்ளைகளுக்கு புலமைப் பரிசில் மானியம் மற்றும் பரிசுகள் வழங்கும் நிகழ்வு நேற்று சீனக்குடா துறைமுக அதிகார சபை மண்டபத்தில் நடைபெற்றது.அகில இலங்கை துறைமுக பொது ஊழியர் சங்கத்தின், ஊழியர் கூட்டுறவு வங்கியினால் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இந்த நிகழ்வில், பிரதம அதிதியாக கலந்து கொண்டு, உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.பிரதி அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில், அபிவிருத்தி திட்டங்கள் என்பது, மக்களோடு பின்னிப்பிணைந்த, ஒரு செயற்பாடாகும். மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்ற அபிவிருத்தி திட்டங்களால் எதனையும் சாதித்து விட முடியாது.இலங்கை துறைமுக அதிகார சபை என பேசும் போதெல்லாம், அங்கு மக்கள் மத்தியில், இயல்பாக எழுந்து வருகின்ற ஒரு விடயம் தான் காணிப்பிரச்சினை பற்றியதாகும்.திருகோணமலை மாவட்டத்தில், துறைமுக அதிகார சபை தொடர்பான காணிகள், மக்கள் குடியிருப்பு காணிகள் தொடர்பாகவும், பல்வேறுபட்ட முரண்பாடுகள், தெளிவின்மை, விரிசல்கள் என்பன சமூகத்தில் நிலவுகின்றன. எனவே, ஒரு குறுகிய காலத்துக்குள் இந்த மக்கள் எதிர் நோக்குகின்ற காணிப் பிரச்சினைகளுக்கு நிச்சயம் தீர்வு காண முடியும் என நம்புகிறேன்.இந்த காணிகள் தொடர்பாக ஏற்கனவே, எடுக்கப்பட்ட சில தீர்மானங்கள் மற்றும்நீதிமன்ற தீர்ப்புகளின் பிரகாரம் சில விடயங்கள் நடைபெற்றுக் கொண்டு வருகின்றன. இதில் எங்களுக்கு மாற்றுக் கருத்து ஏதுமில்லை. ஏனெனில், சட்ட வரம்புக்கு உட்பட்ட விடயங்களை செய்ய வேண்டியிருக்கின்றது. இல்லையேல், நாங்கள், நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டுக்கு ஆளாகிவிடுவோம் என்றும் கூறினார்.கடந்த காலங்களில் ஜனாதிபதி நிதியம் என்ற விடயம் ஒரு சவாலான ஒன்றாகவே காணப்பட்டது. ஜனாதிபதி நிதியத்தின் மூலம், நாட்டின் அனைத்து மாவட்டங்கள் இருந்தும், மாணவர்கள் நன்மை அடையக்கூடிய, புதிய வேலைத்திட்டம் ஒன்று, இந்த மாதம் இறுதியில், நடைமுறைக்கு வர உள்ளது.இதன் மூலம், ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும், உயர் தரத்தில் புதிதாக மறுசீரமைக்கப்பட்ட, கல்வி திட்டத்தின் கீழ், ஐந்து துறைகளில், ஏதாவது ஒரு துறையில், சிறப்பாக சித்தி அடைந்த, பத்து மாணவர்கள் தெரிசெய்யப்பட்டு, அவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபா புலமை பரிசில் வழங்கப்பட உள்ளது.கடந்த காலங்களில் இந்த நாடு, அரசியல் கலாச்சாரங்களின் மூலமாகவே சீரழிக்கப்பட்டிருக்கின்றது. பாதாள உலக கோஷ்டிகள், திட்டமிட்டு குற்றவியலுக்காக செயல்படுகின்ற கும்பல்கள், என்று எதை எடுத்துக் கொண்டாலும் அதற்குப் பின்னால் ஒரு அரசியல் பலம் இருந்திருப்பதை யாரும் மறுக்க முடியாது.பாலாறும் தேனாறும் ஓடிக் கொண்டிருக்கின்ற நாட்டை நாங்கள் பொறுப்பெடுக்கவில்லை. உடைந்து சின்னா பின்னமாக்கப்பட்ட ஒரு நாட்டையே எங்களிடம் ஒப்படைத்திருக்கிறார்கள். தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மிகவும் குறுகிய காலத்தில் கவிழும் என்று எல்லோரும் எதிர்பார்த்தார்கள். இதற்காக கூட்டணிகள் அமைத்தும் இறுதியில், அவர்கள் ஏமாந்து போனார்கள் என்றும் கூறினார்.புதிய கல்வி சீர்திருத்தம் தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில், 21 ஆம் நூற்றாண்டு மற்றும் அதற்கு அப்பால் ஏற்படக்கூடிய சவால்களை வெற்றி கொள்ளும் ஆளுமை படைத்த, மாணவர்களை உருவாக்கி, நாட்டின் அபிவிருத்திக்கு பங்காளர்களாக மாற்றுவதே புதிய கல்வி சீர்திருத்தத்தின் நோக்கமாகும். பாடசாலை கல்விக்குள்ளே, தொழில் திறன் (NVQ) பாடங்களையும் இந்த புதிய கல்வி சீர்திருத்தத்தின் மூலம் உள்வாங்கப்பட்டிருக்கின்றது. இதன் மூலம் ஒரு மாணவன், கல்வி பொது தராதர சாதாரண தரத்திலே, தொழில் உலகுக்கு தேவையான திறனை பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும். அத்தோடு, குறித்த மாணவன் உயர் தரப் பிரிவில் இணைந்து, கல்வியை தொடர்ந்து பல்கலைக்கழக பட்டப்படிப்பை மேற்கொள்ளவும் முடியும் என்றார்.இந்த நிகழ்வில், அகில இலங்கை துறைமுக பொது ஊழியர் சங்கச் செயலாளர் சரத் புர்ணிய ஸ்ரீ, இலங்கை துறைமுக அதிகார சபையின் திருகோணமலை துறைமுக வதிவிட முகாமையாளர் சரத்குமார உள்ளிட்ட, திருகோணமலை துறைமுக ஊழியர்கள் பலரும் கலந்து கொண்டனர்.