• Jul 10 2026

நெல் கொள்முதல் திங்கட்கிழமை முதல் ஆரம்பம்

Chithra / Jul 10th 2026, 3:50 pm
image


நெல் சந்தைப்படுத்தல் சபை ஊடாக நெல் கொள்வனவு நடவடிக்கைகள் எதிர்வரும் 13ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அதன் தலைவர் மஞ்சுள பின்னலந்த தெரிவித்துள்ளார்.


அரச தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


வடக்கு, கிழக்கு மற்றும் அம்பாறை உள்ளிட்ட பகுதிகளில் நெல் அறுவடை அதிகரித்துள்ளதால், அந்தப் பகுதிகளை மையமாகக் கொண்டு களஞ்சியசாலைகள் திறக்கப்பட்டு கொள்வனவு மேற்கொள்ளப்படவுள்ளது.


இதன்படி, ஒரு கிலோ நாடு நெல் 120 ரூபாவுக்கும், சம்பா நெல் 130 ரூபாவுக்கும், கீரி சம்பா நெல் 140 ரூபாவுக்கும் கொள்வனவு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


143 களஞ்சியசாலைகள் மூலம் நெல் சேகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதுடன், தேவையெனில் தனியார் களஞ்சியசாலைகளும் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


அரசாங்கத்தின் பாதுகாப்பு இருப்புக்காக, இந்தப் போகத்தில் அறுவடை செய்யப்பட்ட தரநிலைக்கு உட்பட்ட நெல்லை மட்டுமே கொள்வனவு செய்யப்படும்.


அத்துடன், இதற்காக அரசாங்கம் 6,000 மில்லியன் ரூபாவும் மேலதிகமாக 10,000 மில்லியன் ரூபா கடன் வசதியும் ஒதுக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெல் கொள்முதல் திங்கட்கிழமை முதல் ஆரம்பம் நெல் சந்தைப்படுத்தல் சபை ஊடாக நெல் கொள்வனவு நடவடிக்கைகள் எதிர்வரும் 13ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அதன் தலைவர் மஞ்சுள பின்னலந்த தெரிவித்துள்ளார்.அரச தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.வடக்கு, கிழக்கு மற்றும் அம்பாறை உள்ளிட்ட பகுதிகளில் நெல் அறுவடை அதிகரித்துள்ளதால், அந்தப் பகுதிகளை மையமாகக் கொண்டு களஞ்சியசாலைகள் திறக்கப்பட்டு கொள்வனவு மேற்கொள்ளப்படவுள்ளது.இதன்படி, ஒரு கிலோ நாடு நெல் 120 ரூபாவுக்கும், சம்பா நெல் 130 ரூபாவுக்கும், கீரி சம்பா நெல் 140 ரூபாவுக்கும் கொள்வனவு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.143 களஞ்சியசாலைகள் மூலம் நெல் சேகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதுடன், தேவையெனில் தனியார் களஞ்சியசாலைகளும் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அரசாங்கத்தின் பாதுகாப்பு இருப்புக்காக, இந்தப் போகத்தில் அறுவடை செய்யப்பட்ட தரநிலைக்கு உட்பட்ட நெல்லை மட்டுமே கொள்வனவு செய்யப்படும்.அத்துடன், இதற்காக அரசாங்கம் 6,000 மில்லியன் ரூபாவும் மேலதிகமாக 10,000 மில்லியன் ரூபா கடன் வசதியும் ஒதுக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement