தென்னிந்திய திரையுலகின் பிரபல இயக்குநர்களுள் ஒருவரான விக்ரம் சுகுமாரன் காலமானார்.
தமிழ் சினிமாவில் 'மதயானைக் கூட்டம்' படத்தின் மூலம் அறிமுகமானவர்தான் இயக்குநர் விக்ரம் சுகுமாரன்.
அதன்பின், 6 ஆண்டுகள் கழித்து நடிகர் சாந்தனுவை வைத்து 'ராவணக்கோட்டம்' என்ற படத்தை இயக்கினார்.
இந்நிலையில் நேற்றையதினம்(01) இயக்குநர் விக்ரம் சுகுமாரன் மதுரையில் ஒரு தயாரிப்பாளரிடம் கதை சொல்லிவிட்டு, இரவு பேருந்து ஏறும் போது நெஞ்சு வலி வர, அவரை மருத்துவமனை அழைத்துச் சென்றுள்ளார்கள்.
இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இதனையடுத்து அவரது உடல் அஞ்சலிக்காக சென்னை கொண்டு வரப்படவுள்ளது.
இயக்குநராக மட்டுமின்றி எழுத்தாளராகவும், நடிகராகவும் சினிமாவில் எப்படியேனும் வென்றுவிட வேண்டும் என கடைசி வரை போராடி, எதிர்பாராத விதமாக உயிரிழந்த விக்ரம் சுகுமாரனுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
'மதயானை' திரைப்பட இயக்குநர் விக்ரம் சுகுமாரன் திடீர் மறைவு. தென்னிந்திய திரையுலகின் பிரபல இயக்குநர்களுள் ஒருவரான விக்ரம் சுகுமாரன் காலமானார்.தமிழ் சினிமாவில் 'மதயானைக் கூட்டம்' படத்தின் மூலம் அறிமுகமானவர்தான் இயக்குநர் விக்ரம் சுகுமாரன்.அதன்பின், 6 ஆண்டுகள் கழித்து நடிகர் சாந்தனுவை வைத்து 'ராவணக்கோட்டம்' என்ற படத்தை இயக்கினார்.இந்நிலையில் நேற்றையதினம்(01) இயக்குநர் விக்ரம் சுகுமாரன் மதுரையில் ஒரு தயாரிப்பாளரிடம் கதை சொல்லிவிட்டு, இரவு பேருந்து ஏறும் போது நெஞ்சு வலி வர, அவரை மருத்துவமனை அழைத்துச் சென்றுள்ளார்கள். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.இதனையடுத்து அவரது உடல் அஞ்சலிக்காக சென்னை கொண்டு வரப்படவுள்ளது. இயக்குநராக மட்டுமின்றி எழுத்தாளராகவும், நடிகராகவும் சினிமாவில் எப்படியேனும் வென்றுவிட வேண்டும் என கடைசி வரை போராடி, எதிர்பாராத விதமாக உயிரிழந்த விக்ரம் சுகுமாரனுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.