• Jun 01 2025

சீரற்ற வானிலையால் பறிபோன உயிர்கள் - பலர் படுகாயம்! 2,249 குடும்பங்கள் பாதிப்பு! 29,000 மின் தடை பதிவு

Chithra / May 30th 2025, 7:43 pm
image


நாட்டில் நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக இதுவரை மூவர் உயிரிழந்துள்ளனர் எனவும் 24 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

கடும் மழை காரணமாக 21 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் (இடர் முகாமைத்துவ பிரிவு) கே.ஜி. தர்மதிலக்க தெரிவித்தார். 

இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தில் இன்று (30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் மேலும் தெரிவிக்கையில், 

இதுவரை 21 மாவட்டங்களை உள்ளடக்கிய 219 பிரதேச செயலக பிரிவுகளில் 2,249 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார். 

மேலும், இந்த அனர்த்த நிலைமை காரணமாக மூன்று பேர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் 24 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், 

உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்த அனைவருக்கும் அரசாங்கத்திடமிருந்து இழப்பீடு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தர்மதிலக்க மேலும் தெரிவித்தார். 

இதேவேளை நுவரெலியா பம்பரகலை தோட்டத்தில் உள்ள தோட்ட குடியிருப்பின் கூரைகள் காற்றினால் அள்ளுண்டு செல்லப்பட்டுள்ளன, இதனால் 04 குடும்பங்கள் சேர்ந்த 10 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

நுவரெலியாவின் பம்பரகலை தோட்டத்தில் வீசிய பலத்த காற்று காரணமாக, 04 வீடுகளின் கூரைகள் அடித்துச் சென்றுள்ளதாக நுவரெலியா அனர்த்தம் முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.

இன்று மதியம் திடீரென காற்று வீசியதாகவும், அதே நேரத்தில் கூரையுடன் இணைக்கப்பட்டிருந்த கூரைத் தகடுகள் கழன்று விழுந்ததாகவும் தோட்டத் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இடம்பெயர்ந்த 4 குடும்பங்களை சேர்ந்தவர்கள் பாதுகாப்பான இடத்திற்கு அனுப்ப தோட்ட அதிகாரியின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


நுவரெலியா, சமர்செட் - லேன்டல் தோட்ட பகுதியில் மண்சரிவு அபாயம் காரணமாக 28 குடும்பங்களைச் சேர்ந்தவர்களை  தங்களது இருப்பிடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.  

இதன்படி, 28 குடும்பங்களைச் சேர்ந்த 120 பேர் இவ்வாறு வெளியேற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் அனைவரும் அங்குள்ள பாடசாலையொன்றில் தற்காலிகமாகத் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

மேலும் கொழும்பு நகரம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் இன்று (30) மாலை பெய்த கடும் மழை மற்றும் அதனுடன் ஏற்பட்ட பலத்த காற்று காரணமாக, பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்ததுடன் சொத்து சேதங்களும் பதிவாகியுள்ளன. 

கொழும்பு விஜயராம மாவத்தை, கொழும்பு ஹோர்ட்டன் பிரதேசம், மெட்லண்ட் பிரதேசம், கொழும்பு 02 நவம் மாவத்தை உள்ளிட்ட பல பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்ததாக தெரிவிக்கப்பட்டது. 

இதன் காரணமாக, அந்த வீதிகளை அண்மித்த பகுதிகளில் வாகன போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பல ரயில்கள் தாமதமாக இயக்கப்படுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

முக்கிய மார்க்கங்களிலும் களனிௌி மார்க்கத்திலும் பல ரயில்கள் இவ்வாறு தாமதமாக இயக்கப்படுவதாக ரயில் கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

அத்தோடு  நாட்டில் நிலவும் மோசமான காலநிலை காரணமாக இலங்கை முழுவதும் மொத்தம் 29,015 மின் தடைகள் ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

மின் தடைகள் ஏற்பட்டு பாதிக்கப்பட்ட பகுதிகளில் மறுசீரமைப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும், மறுசீரமைப்பு பணிகளை விரைவுபடுத்த பழுதுபார்க்கும் குழுவினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் இலங்கை மின்சார சபை அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.

மேலும், CEBCare மொபைல் பயன்பாடு மூலமாகவோ அல்லது 1987 அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பதன் மூலமாகவோ மின் தடைகள் மற்றும் மின் தடை மறுசீரமைப்பு என்பவற்றிக்கு பொதுமக்களுக்கு உதவுமாறு இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.


சீரற்ற வானிலையால் பறிபோன உயிர்கள் - பலர் படுகாயம் 2,249 குடும்பங்கள் பாதிப்பு 29,000 மின் தடை பதிவு நாட்டில் நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக இதுவரை மூவர் உயிரிழந்துள்ளனர் எனவும் 24 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.கடும் மழை காரணமாக 21 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் (இடர் முகாமைத்துவ பிரிவு) கே.ஜி. தர்மதிலக்க தெரிவித்தார். இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தில் இன்று (30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் மேலும் தெரிவிக்கையில், இதுவரை 21 மாவட்டங்களை உள்ளடக்கிய 219 பிரதேச செயலக பிரிவுகளில் 2,249 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார். மேலும், இந்த அனர்த்த நிலைமை காரணமாக மூன்று பேர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் 24 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்த அனைவருக்கும் அரசாங்கத்திடமிருந்து இழப்பீடு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தர்மதிலக்க மேலும் தெரிவித்தார். இதேவேளை நுவரெலியா பம்பரகலை தோட்டத்தில் உள்ள தோட்ட குடியிருப்பின் கூரைகள் காற்றினால் அள்ளுண்டு செல்லப்பட்டுள்ளன, இதனால் 04 குடும்பங்கள் சேர்ந்த 10 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.நுவரெலியாவின் பம்பரகலை தோட்டத்தில் வீசிய பலத்த காற்று காரணமாக, 04 வீடுகளின் கூரைகள் அடித்துச் சென்றுள்ளதாக நுவரெலியா அனர்த்தம் முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.இன்று மதியம் திடீரென காற்று வீசியதாகவும், அதே நேரத்தில் கூரையுடன் இணைக்கப்பட்டிருந்த கூரைத் தகடுகள் கழன்று விழுந்ததாகவும் தோட்டத் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.இடம்பெயர்ந்த 4 குடும்பங்களை சேர்ந்தவர்கள் பாதுகாப்பான இடத்திற்கு அனுப்ப தோட்ட அதிகாரியின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.நுவரெலியா, சமர்செட் - லேன்டல் தோட்ட பகுதியில் மண்சரிவு அபாயம் காரணமாக 28 குடும்பங்களைச் சேர்ந்தவர்களை  தங்களது இருப்பிடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.  இதன்படி, 28 குடும்பங்களைச் சேர்ந்த 120 பேர் இவ்வாறு வெளியேற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அனைவரும் அங்குள்ள பாடசாலையொன்றில் தற்காலிகமாகத் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் கொழும்பு நகரம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் இன்று (30) மாலை பெய்த கடும் மழை மற்றும் அதனுடன் ஏற்பட்ட பலத்த காற்று காரணமாக, பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்ததுடன் சொத்து சேதங்களும் பதிவாகியுள்ளன. கொழும்பு விஜயராம மாவத்தை, கொழும்பு ஹோர்ட்டன் பிரதேசம், மெட்லண்ட் பிரதேசம், கொழும்பு 02 நவம் மாவத்தை உள்ளிட்ட பல பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்ததாக தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக, அந்த வீதிகளை அண்மித்த பகுதிகளில் வாகன போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பல ரயில்கள் தாமதமாக இயக்கப்படுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.முக்கிய மார்க்கங்களிலும் களனிௌி மார்க்கத்திலும் பல ரயில்கள் இவ்வாறு தாமதமாக இயக்கப்படுவதாக ரயில் கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.அத்தோடு  நாட்டில் நிலவும் மோசமான காலநிலை காரணமாக இலங்கை முழுவதும் மொத்தம் 29,015 மின் தடைகள் ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.மின் தடைகள் ஏற்பட்டு பாதிக்கப்பட்ட பகுதிகளில் மறுசீரமைப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும், மறுசீரமைப்பு பணிகளை விரைவுபடுத்த பழுதுபார்க்கும் குழுவினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் இலங்கை மின்சார சபை அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.மேலும், CEBCare மொபைல் பயன்பாடு மூலமாகவோ அல்லது 1987 அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பதன் மூலமாகவோ மின் தடைகள் மற்றும் மின் தடை மறுசீரமைப்பு என்பவற்றிக்கு பொதுமக்களுக்கு உதவுமாறு இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement