• Jun 09 2025

சுகாதார சீர்கேடான வீதியோர உணவு நிலையங்களுக்கு சட்ட நடவடிக்கை...!

shanuja / Jun 8th 2025, 10:59 am
image

சுகாதார முறைகளை சரியாக பின்பற்றத் தவறியமைக்காக மரைன் டிரைவில் பகுதியில்  இயங்கும் பல வீதியோர உணவு விற்பனை நிலையங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 


பொது சுகாதார ஆய்வாளர்களின்  கருத்துப்படி, உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான வழக்கமான ஆய்வின் ஒரு பகுதியாக இந்த சோதனைகள் நடத்தப்பட்டன. 


சோதனைகளின் போது பல விற்பனையாளர்கள் அடிப்படை சுகாதார விதிமுறைகளை மீறுவது கண்டறியப்பட்டது. இதனையடுத்து அந்த உணவு விற்பனை நிலையங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. 


இதேவேளை - பொது சுகாதாரத்தைப் பாதுகாப்பதற்கும்,  வீதியோர  உணவு விற்பனையாளர்கள் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டங்களுக்கு இணங்குவதை உறுதி செய்வதற்கும் இதுபோன்ற நடவடிக்கைகள் தொடரும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சுகாதார சீர்கேடான வீதியோர உணவு நிலையங்களுக்கு சட்ட நடவடிக்கை. சுகாதார முறைகளை சரியாக பின்பற்றத் தவறியமைக்காக மரைன் டிரைவில் பகுதியில்  இயங்கும் பல வீதியோர உணவு விற்பனை நிலையங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பொது சுகாதார ஆய்வாளர்களின்  கருத்துப்படி, உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான வழக்கமான ஆய்வின் ஒரு பகுதியாக இந்த சோதனைகள் நடத்தப்பட்டன. சோதனைகளின் போது பல விற்பனையாளர்கள் அடிப்படை சுகாதார விதிமுறைகளை மீறுவது கண்டறியப்பட்டது. இதனையடுத்து அந்த உணவு விற்பனை நிலையங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதேவேளை - பொது சுகாதாரத்தைப் பாதுகாப்பதற்கும்,  வீதியோர  உணவு விற்பனையாளர்கள் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டங்களுக்கு இணங்குவதை உறுதி செய்வதற்கும் இதுபோன்ற நடவடிக்கைகள் தொடரும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement