• Mar 15 2026

கொட்டுகோட துணை மின்நிலையம் தற்காலிகமாக செயலிழப்பு

Aathira / Nov 30th 2025, 9:31 am
image

கொட்டுகோட பகுதியில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கு காரணமாக, கொட்டுகோட 220/132/33kV மின் இணைப்புக்கான துணை மின்நிலையம்,  தற்காலிகமாக செயல்பாட்டிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

பலத்த மழைகளால் நிரம்பி, நீர் மட்டம் கட்டுப்பாட்டுப் பலகை அளவை எட்டியதால், துணை மின்நிலை வளாகம் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

நேற்று (29) சனிக்கிழமை மாலை நிலவரப்படி, நீர் மட்டம் கட்டுப்பாட்டுப் பலகை அளவை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொதுமக்களின் பாதுகாப்பு, தளத்தில் உள்ள ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும் முக்கியமான மின் உட்கட்டமைப்பின் பாதுகாப்பிற்காக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

நீர் மட்டம் குறைந்து, துணை மின்நிலையம் செயல்பாட்டிற்கு பாதுகாப்பானதா என்று சரிபார்க்கப்பட்டவுடன் மீண்டும் மின் மறுசீரமைப்பு பணி தொடங்கப்படும் என்று மின்சார சபை தெரிவித்துள்ளது.

கொட்டுகோட துணை மின்நிலையம் தற்காலிகமாக செயலிழப்பு கொட்டுகோட பகுதியில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கு காரணமாக, கொட்டுகோட 220/132/33kV மின் இணைப்புக்கான துணை மின்நிலையம்,  தற்காலிகமாக செயல்பாட்டிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.பலத்த மழைகளால் நிரம்பி, நீர் மட்டம் கட்டுப்பாட்டுப் பலகை அளவை எட்டியதால், துணை மின்நிலை வளாகம் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.நேற்று (29) சனிக்கிழமை மாலை நிலவரப்படி, நீர் மட்டம் கட்டுப்பாட்டுப் பலகை அளவை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.பொதுமக்களின் பாதுகாப்பு, தளத்தில் உள்ள ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும் முக்கியமான மின் உட்கட்டமைப்பின் பாதுகாப்பிற்காக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.நீர் மட்டம் குறைந்து, துணை மின்நிலையம் செயல்பாட்டிற்கு பாதுகாப்பானதா என்று சரிபார்க்கப்பட்டவுடன் மீண்டும் மின் மறுசீரமைப்பு பணி தொடங்கப்படும் என்று மின்சார சபை தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement