நாட்டில் அண்மைக்காலமாக அடுத்தடுத்து இடம்பெற்று வரும் சிறைச்சாலை மோதல்கள் தொடர்பாக, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தனது எக்ஸ் (X) சமூக ஊடகப் பதிவின் மூலம் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.
சில வார இடைவெளிக்குள் இடம்பெற்ற இரண்டாவது பாரிய சிறைச்சாலை மோதல் இதுவென குறிப்பிட்டுள்ள அவர், இது தனித்துவமான ஒரு சம்பவமல்ல என்றும், மாறாக மோசமான நிர்வாகம், அலட்சியம் மற்றும் சீரழிந்து வரும் சிறைச்சாலை அமைப்பின் வெளிப்பாடாகும் என்றும் விமர்சித்துள்ளார்.
சிறைச்சாலைத் துறை கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டு வரும் நிலையிலும், இதுவரை நிரந்தர சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் ஒருவர் நியமிக்கப்படாதது ஏன் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரிப்பது தற்காலிகத் தீர்வாக மட்டுமே அமையும் என சுட்டிக்காட்டியுள்ள நாமல் ராஜபக்ச, அதிகளவிலான கைதிகள், போதிய வசதியின்மை, சுகாதாரக் குறைபாடுகள் மற்றும் புனர்வாழ்வு திட்டங்களின் பற்றாக்குறை உள்ளிட்ட அடிப்படைப் பிரச்சினைகளுக்கு உடனடியாகத் தீர்வு காணப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மேலும், சிறைத்தண்டனை என்பது ஒருவரின் சுதந்திரத்தை மட்டுமே கட்டுப்படுத்துவதாகும்; அவர்களின் மனிதக் கண்ணியத்தை பறிப்பதல்ல என்றும் குறிப்பிட்ட அவர், தற்காலிக நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, சீரழிந்து வரும் சிறைச்சாலை அமைப்பை முழுமையாக சீரமைக்க அரசு அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
சிறைச்சாலை மோதல்கள் அரசின் அலட்சியத்தின் விளைவு – நாமல் ராஜபக்ச கடும் விமர்சனம் நாட்டில் அண்மைக்காலமாக அடுத்தடுத்து இடம்பெற்று வரும் சிறைச்சாலை மோதல்கள் தொடர்பாக, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தனது எக்ஸ் (X) சமூக ஊடகப் பதிவின் மூலம் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.சில வார இடைவெளிக்குள் இடம்பெற்ற இரண்டாவது பாரிய சிறைச்சாலை மோதல் இதுவென குறிப்பிட்டுள்ள அவர், இது தனித்துவமான ஒரு சம்பவமல்ல என்றும், மாறாக மோசமான நிர்வாகம், அலட்சியம் மற்றும் சீரழிந்து வரும் சிறைச்சாலை அமைப்பின் வெளிப்பாடாகும் என்றும் விமர்சித்துள்ளார்.சிறைச்சாலைத் துறை கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டு வரும் நிலையிலும், இதுவரை நிரந்தர சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் ஒருவர் நியமிக்கப்படாதது ஏன் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரிப்பது தற்காலிகத் தீர்வாக மட்டுமே அமையும் என சுட்டிக்காட்டியுள்ள நாமல் ராஜபக்ச, அதிகளவிலான கைதிகள், போதிய வசதியின்மை, சுகாதாரக் குறைபாடுகள் மற்றும் புனர்வாழ்வு திட்டங்களின் பற்றாக்குறை உள்ளிட்ட அடிப்படைப் பிரச்சினைகளுக்கு உடனடியாகத் தீர்வு காணப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.மேலும், சிறைத்தண்டனை என்பது ஒருவரின் சுதந்திரத்தை மட்டுமே கட்டுப்படுத்துவதாகும்; அவர்களின் மனிதக் கண்ணியத்தை பறிப்பதல்ல என்றும் குறிப்பிட்ட அவர், தற்காலிக நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, சீரழிந்து வரும் சிறைச்சாலை அமைப்பை முழுமையாக சீரமைக்க அரசு அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.