கண்டி மற்றும் பேராதனை இடையேயான ரயில் சேவை மீண்டும் வழமைக்குத் திரும்பியுள்ளது என்று ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
கண்டி மற்றும் பேராதனை இடையேயான ரயில் நிலைய தண்டவாள பகுதியில் ஏற்பட்ட தாழிறக்கம் காரணமாக திடீரென பள்ளம் ஏற்பட்டிருந்து.
குறித்த பள்ளம் தற்போது சீரமைக்கப்பட்டு ரயில் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்று ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், நிலைமையை கண்காணிக்க இன்று (12) காலை புறப்பட்ட ரயிலில் அதிகாரிகளும் பயணிக்க நடவடிக்கை எடுத்திருந்தனர்.
அதற்கமைய, கொழும்பு கோட்டையிலிருந்து அதிகாலை 5.55 மணிக்கு பதுளை செல்லும் 'பொடி மெனிக்கே' ரயிலானது பயணத்தை ஆரம்பித்திருந்தது.
குறித்த ரயிலானது இன்று காலை 9 மணியளவில் தாழிறக்கம் ஏற்பட்ட பகுதியில் எந்தவித சிக்கலும் இன்றி பயணத்தை மேற்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக கண்டி பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாகவே பேராதனை - கண்டி இடையேயான ரயில் தண்டவாளம் திடீரென தாழிறங்கி அதில் பள்ளம் ஏற்பட்டது.
இந்த தாழிறக்கம் காரணமாக பேராதனை மற்றும் கண்டி ரயில் நிலையங்களுக்கு இடையிலான ரயில் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட நிலையில் குறித்த ரயில் சேவைகள் மீண்டும் சேவையில் ஈடுபட ஆரம்பித்துள்ளன என்று ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
இதேவேளை- கண்டி மற்றும் பேராதனை ரயில் நிலையங்களுக்கு இடையில் பயணிகளை ஏற்றிச் செல்ல விசேட பேருந்து சேவைகள் இயக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கண்டி - பேராதனை ரயில் மீண்டும் சேவையில். கண்டி மற்றும் பேராதனை இடையேயான ரயில் சேவை மீண்டும் வழமைக்குத் திரும்பியுள்ளது என்று ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. கண்டி மற்றும் பேராதனை இடையேயான ரயில் நிலைய தண்டவாள பகுதியில் ஏற்பட்ட தாழிறக்கம் காரணமாக திடீரென பள்ளம் ஏற்பட்டிருந்து. குறித்த பள்ளம் தற்போது சீரமைக்கப்பட்டு ரயில் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்று ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், நிலைமையை கண்காணிக்க இன்று (12) காலை புறப்பட்ட ரயிலில் அதிகாரிகளும் பயணிக்க நடவடிக்கை எடுத்திருந்தனர். அதற்கமைய, கொழும்பு கோட்டையிலிருந்து அதிகாலை 5.55 மணிக்கு பதுளை செல்லும் 'பொடி மெனிக்கே' ரயிலானது பயணத்தை ஆரம்பித்திருந்தது. குறித்த ரயிலானது இன்று காலை 9 மணியளவில் தாழிறக்கம் ஏற்பட்ட பகுதியில் எந்தவித சிக்கலும் இன்றி பயணத்தை மேற்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த சில நாட்களாக கண்டி பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாகவே பேராதனை - கண்டி இடையேயான ரயில் தண்டவாளம் திடீரென தாழிறங்கி அதில் பள்ளம் ஏற்பட்டது. இந்த தாழிறக்கம் காரணமாக பேராதனை மற்றும் கண்டி ரயில் நிலையங்களுக்கு இடையிலான ரயில் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட நிலையில் குறித்த ரயில் சேவைகள் மீண்டும் சேவையில் ஈடுபட ஆரம்பித்துள்ளன என்று ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. இதேவேளை- கண்டி மற்றும் பேராதனை ரயில் நிலையங்களுக்கு இடையில் பயணிகளை ஏற்றிச் செல்ல விசேட பேருந்து சேவைகள் இயக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.