• Jun 17 2025

ஈரானிய தலைநகர் மீது இஸ்ரேல் குண்டுவீச்சு - குழந்தைகள் உட்பட 224 பேர் உயிரிழப்பு...!

shanuja / Jun 16th 2025, 9:47 am
image

ஈரானிய தலைநகர் தெஹ்ரான் மீது இஸ்ரேல் நேற்று நடத்திய குண்டுவீச்சுத் தாக்குதலில் குழந்தைகள் உட்பட 224 பேர் கொல்லப்பட்டனர் என்று ஈரான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 


இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான தாக்குதல்  தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. இந்தத் தாக்குதல்களில் பலர் கொல்லப்பட்டதுடன் பலர் காயமடைந்துள்ளனர். 


இந்த நிலையில் ஈரானிய தலைநகர் தெஹ்ரானில் இஸ்ரேல் இராணுவம் நேற்று குண்டுவீச்சுத் தாக்குதல் ஒன்றை நடத்தியுள்ளது. தாக்குதல் நடத்திய சில மணிநேரங்களில், டெல் அவிவ் மற்றும் ஜெருசலேமில் வெடிப்புகள் ஏற்பட்டன. 


குறித்த தாக்குதலில் ஈரானில் 70 பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 224 பேர் உயிரிழந்துள்ளனர். அதில்  ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (IRGC) உளவுத்துறைத் தலைவரும் இரண்டு ஜெனரல்களும் கொல்லப்பட்டனர். மற்றும் இரவில் ஈரானிய தாக்குதல்களில் குறைந்தது 10 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டதாகவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 


இஸ்ரேல் ஈரான் மீதான தாக்குதல்களை நிறுத்தும்போது ஈரானிய பதில் நடவடிக்கை நிறுத்தப்படும் என்று வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி தெரிவித்துள்ளார். 

இஸ்ரேலும் ஈரானும் ஒரு ஒப்பந்தத்தை எட்ட முடியும் என்று தான் நம்புவதாக  தெரிவித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்  ட்ரம்ப்,  இஸ்ரேலின் பாதுகாப்பிற்கு வாஷிங்டன் தொடர்ந்து ஆதரவளிக்கும் என்றும்  தெரிவித்துள்ளார்.


இதற்கிடையே இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு  தெரிவிக்கையில்,"இங்கே பிரச்சினை பதற்றத்தைக் குறைப்பதல்ல", ஆனால் ஈரான் அதன் அணுசக்தி திறனை வளர்ப்பதைத் தடுப்பது என்றார்.

ஈரானிய தலைநகர் மீது இஸ்ரேல் குண்டுவீச்சு - குழந்தைகள் உட்பட 224 பேர் உயிரிழப்பு. ஈரானிய தலைநகர் தெஹ்ரான் மீது இஸ்ரேல் நேற்று நடத்திய குண்டுவீச்சுத் தாக்குதலில் குழந்தைகள் உட்பட 224 பேர் கொல்லப்பட்டனர் என்று ஈரான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான தாக்குதல்  தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. இந்தத் தாக்குதல்களில் பலர் கொல்லப்பட்டதுடன் பலர் காயமடைந்துள்ளனர். இந்த நிலையில் ஈரானிய தலைநகர் தெஹ்ரானில் இஸ்ரேல் இராணுவம் நேற்று குண்டுவீச்சுத் தாக்குதல் ஒன்றை நடத்தியுள்ளது. தாக்குதல் நடத்திய சில மணிநேரங்களில், டெல் அவிவ் மற்றும் ஜெருசலேமில் வெடிப்புகள் ஏற்பட்டன. குறித்த தாக்குதலில் ஈரானில் 70 பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 224 பேர் உயிரிழந்துள்ளனர். அதில்  ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (IRGC) உளவுத்துறைத் தலைவரும் இரண்டு ஜெனரல்களும் கொல்லப்பட்டனர். மற்றும் இரவில் ஈரானிய தாக்குதல்களில் குறைந்தது 10 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டதாகவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் ஈரான் மீதான தாக்குதல்களை நிறுத்தும்போது ஈரானிய பதில் நடவடிக்கை நிறுத்தப்படும் என்று வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி தெரிவித்துள்ளார். இஸ்ரேலும் ஈரானும் ஒரு ஒப்பந்தத்தை எட்ட முடியும் என்று தான் நம்புவதாக  தெரிவித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்  ட்ரம்ப்,  இஸ்ரேலின் பாதுகாப்பிற்கு வாஷிங்டன் தொடர்ந்து ஆதரவளிக்கும் என்றும்  தெரிவித்துள்ளார்.இதற்கிடையே இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு  தெரிவிக்கையில்,"இங்கே பிரச்சினை பதற்றத்தைக் குறைப்பதல்ல", ஆனால் ஈரான் அதன் அணுசக்தி திறனை வளர்ப்பதைத் தடுப்பது என்றார்.

Advertisement

Advertisement

Advertisement