மகாவலி அதிகாரசபையின் கீழ் விநியோகிக்கப்பட்ட நிலத்தை தவறாகப் பயன்படுத்தியதாக வெளிவரும் தகவல்கள் தொடர்பில் அரசாங்கம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது என்று நிலம் மற்றும் நீர்ப்பாசனத் துறை துணை அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் தேசிய மக்கள் சக்தியின் பொலன்னறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பத்மசிறி பண்டார எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பொலன்னறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பத்மசிறி பண்டார இது தொடர்பில் எழுப்பிய கேள்வியில் தெரிவிக்கப்பட்டதாவது,
பெரிய நிலங்கள் விவசாயம் செய்யாமல் உயர் பதவியில் உள்ளவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மகாவலி மண்டலங்களில் - குறிப்பாக பி மற்றும் டி - 100 முதல் 500 ஏக்கர் வரையிலான நிலங்கள் நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு தனியார் ஏற்பாடுகள் மூலம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலங்களில் பல பயிரிடப்படாமல் உள்ளன அல்லது நிதி ஆதாயத்திற்காக மற்றவர்களுக்கு மாற்றப்பட்டுள்ளன.
"இந்த நிலங்கள் விவசாய மேம்பாட்டிற்காகவே இருந்தன. ஆனால் அவை பயனற்ற நிலையில் விடப்படுகின்றன," எனறார்.
இதற்குப் பதிலளித்த நிலம் மற்றும் நீர்ப்பாசனத் துறை துணை அமைச்சர் சுசில் ரணசிங்க, நிலங்கள் எவ்வாறு ஒதுக்கப்பட்டன, அதன் நோக்கம் மற்றும் அவற்றின் தற்போதைய பயன்பாடு ஆகியவற்றை ஆராய விசாரணை நடந்து வருகின்றது- என்றார்.
மகாவலி நிலங்கள் வழங்கியமை தொடர்பில் விசாரணை - அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவிப்பு. மகாவலி அதிகாரசபையின் கீழ் விநியோகிக்கப்பட்ட நிலத்தை தவறாகப் பயன்படுத்தியதாக வெளிவரும் தகவல்கள் தொடர்பில் அரசாங்கம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது என்று நிலம் மற்றும் நீர்ப்பாசனத் துறை துணை அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் தேசிய மக்கள் சக்தியின் பொலன்னறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பத்மசிறி பண்டார எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலே மேற்கண்டவாறு தெரிவித்தார். பொலன்னறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பத்மசிறி பண்டார இது தொடர்பில் எழுப்பிய கேள்வியில் தெரிவிக்கப்பட்டதாவது, பெரிய நிலங்கள் விவசாயம் செய்யாமல் உயர் பதவியில் உள்ளவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மகாவலி மண்டலங்களில் - குறிப்பாக பி மற்றும் டி - 100 முதல் 500 ஏக்கர் வரையிலான நிலங்கள் நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு தனியார் ஏற்பாடுகள் மூலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலங்களில் பல பயிரிடப்படாமல் உள்ளன அல்லது நிதி ஆதாயத்திற்காக மற்றவர்களுக்கு மாற்றப்பட்டுள்ளன."இந்த நிலங்கள் விவசாய மேம்பாட்டிற்காகவே இருந்தன. ஆனால் அவை பயனற்ற நிலையில் விடப்படுகின்றன," எனறார். இதற்குப் பதிலளித்த நிலம் மற்றும் நீர்ப்பாசனத் துறை துணை அமைச்சர் சுசில் ரணசிங்க, நிலங்கள் எவ்வாறு ஒதுக்கப்பட்டன, அதன் நோக்கம் மற்றும் அவற்றின் தற்போதைய பயன்பாடு ஆகியவற்றை ஆராய விசாரணை நடந்து வருகின்றது- என்றார்.