• May 01 2025

மட்டக்களப்பில் இடம்பெற்ற சர்வதேச நடன தின நிகழ்வு..!

Sharmi / Apr 30th 2025, 10:00 am
image

மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு கல்வி வலயத்தின் ஏற்பாட்டில் சர்வதேச நடன தின விழா நேற்றையதினம்(29) மாலை களுதாவளை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த சர்வதேச நடன தின விழாவில் இடம்பெற்ற ஆசிரியர்களின் நடன ஆற்றுகைகள் அனைவரினதும் கவனத்தை திரும்பிப்பார்த்தது.

நடன விழாவில் நடன ஆசிரியர்களினாலும், அவர்களால் பயிற்றுவிக்கப்பட்ட, மாணவர்களினதும் நடனங்கள் மேடையை அதிரவைத்திருந்தன.

பட்டிருப்பு கல்வி வலய நடன ஆசிரிய ஆலோசகர் வனிதா சேகரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக பட்டிருப்பு கல்வி வலயத்தின் பணிப்பாளர் சிவானந்தம் சிறிதரன் கலந்து சிறப்பித்தார்.

மேலும் பிரதிக் கல்விப் பணியாளர்கள், உதவிக் கல்விப் பணியாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் எனப்பலரும் கலந்து சிறப்பித்தனர்.

இதன்போது ஆசிரியர்களினதும், மாணவர்களினதும், நடன நிகழ்வுகள் மேடையை அலங்கரித்தன.

இதன்போது ஏற்பாட்டு குழுவினால் பட்டிருப்பு கல்வி வலயத்தின் பணிப்பாளர் பொன்னாடை போர்த்தி மலர் மாலை அணிவித்து, நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.


மட்டக்களப்பில் இடம்பெற்ற சர்வதேச நடன தின நிகழ்வு. மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு கல்வி வலயத்தின் ஏற்பாட்டில் சர்வதேச நடன தின விழா நேற்றையதினம்(29) மாலை களுதாவளை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.இந்த சர்வதேச நடன தின விழாவில் இடம்பெற்ற ஆசிரியர்களின் நடன ஆற்றுகைகள் அனைவரினதும் கவனத்தை திரும்பிப்பார்த்தது.நடன விழாவில் நடன ஆசிரியர்களினாலும், அவர்களால் பயிற்றுவிக்கப்பட்ட, மாணவர்களினதும் நடனங்கள் மேடையை அதிரவைத்திருந்தன.பட்டிருப்பு கல்வி வலய நடன ஆசிரிய ஆலோசகர் வனிதா சேகரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக பட்டிருப்பு கல்வி வலயத்தின் பணிப்பாளர் சிவானந்தம் சிறிதரன் கலந்து சிறப்பித்தார்.மேலும் பிரதிக் கல்விப் பணியாளர்கள், உதவிக் கல்விப் பணியாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் எனப்பலரும் கலந்து சிறப்பித்தனர்.இதன்போது ஆசிரியர்களினதும், மாணவர்களினதும், நடன நிகழ்வுகள் மேடையை அலங்கரித்தன. இதன்போது ஏற்பாட்டு குழுவினால் பட்டிருப்பு கல்வி வலயத்தின் பணிப்பாளர் பொன்னாடை போர்த்தி மலர் மாலை அணிவித்து, நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

Advertisement

Advertisement

Advertisement