திருகோணமலை - மூதூர் கல்வி வலயத்தில் உள்ள பாடசாலைகளில் கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இன்று காலை மூதூர் வலய கல்வி அலுவலகத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த ஐந்து வருடங்களாக பாடசாலைகளில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக கடமையாற்றுகின்ற தமக்கு ஆசிரியர் நியமனம் வழங்குமாறு கோரியே இவ் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
பாடசாலைகளில் சகல வேலைகளையும் தாம் செய்து வருகின்றோம்.
அதை வழி கடந்த அரசாங்கம் தமக்கான ஆசிரியர் நியமனத்தை வழங்குவதாக தெரிவித்திருந்த போதிலும் அவர்கள் நியமனம் வழங்கவில்லை.
எனவே பாடசாலைகளில் அபிவிருத்தி உத்தியோத்தர்களாக கடமையாற்றும் தங்களுக்கு இந்த அரசாங்கம் ஆசிரியர் நியமனம் வழங்க வேண்டும் என இவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இவர்கள் சுலோகங்களை ஏந்தி கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
ஆசிரியர் நியமனம் வழங்குமாறு கோரி மூதூரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம் திருகோணமலை - மூதூர் கல்வி வலயத்தில் உள்ள பாடசாலைகளில் கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இன்று காலை மூதூர் வலய கல்வி அலுவலகத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.கடந்த ஐந்து வருடங்களாக பாடசாலைகளில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக கடமையாற்றுகின்ற தமக்கு ஆசிரியர் நியமனம் வழங்குமாறு கோரியே இவ் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.பாடசாலைகளில் சகல வேலைகளையும் தாம் செய்து வருகின்றோம்.அதை வழி கடந்த அரசாங்கம் தமக்கான ஆசிரியர் நியமனத்தை வழங்குவதாக தெரிவித்திருந்த போதிலும் அவர்கள் நியமனம் வழங்கவில்லை.எனவே பாடசாலைகளில் அபிவிருத்தி உத்தியோத்தர்களாக கடமையாற்றும் தங்களுக்கு இந்த அரசாங்கம் ஆசிரியர் நியமனம் வழங்க வேண்டும் என இவர்கள் கோரிக்கை விடுத்தனர். இவர்கள் சுலோகங்களை ஏந்தி கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.