• Jun 23 2025

யாழில் மிளகாய்த்தூளை கண்ணில் தூவி - கூரிய ஆயுதத்தால் தாக்குதல்!

Thansita / Jun 23rd 2025, 6:26 pm
image

மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டுடை பகுதியில் இன்றையதினம்  குடும்பஸ்தர் ஒருவர் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த குடும்பஸ்தர் பிள்ளைகளை பாடசாலையில் விட்டுவிட்டு திரும்பி வந்துகொண்டிருந்தவேளை 

ஒரு மோட்டார் சைக்கிளில், முகங்களை மறைத்தவாறு வந்த இருவர் குறித்த குடும்பஸ்தரின் கண்களினுள் மிளகாய் தூளினை வீசினர்.

அதன்பின்னர் அவர்மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல் மேற்கொண்டு விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

பின்னர் படுகாயமடைந்த குறித்த நபர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. 

மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் மிளகாய்த்தூளை கண்ணில் தூவி - கூரிய ஆயுதத்தால் தாக்குதல் மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டுடை பகுதியில் இன்றையதினம்  குடும்பஸ்தர் ஒருவர் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,குறித்த குடும்பஸ்தர் பிள்ளைகளை பாடசாலையில் விட்டுவிட்டு திரும்பி வந்துகொண்டிருந்தவேளை ஒரு மோட்டார் சைக்கிளில், முகங்களை மறைத்தவாறு வந்த இருவர் குறித்த குடும்பஸ்தரின் கண்களினுள் மிளகாய் தூளினை வீசினர்.அதன்பின்னர் அவர்மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல் மேற்கொண்டு விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.பின்னர் படுகாயமடைந்த குறித்த நபர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.இது குறித்து மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement